தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 december 2014

அரசாங்கம் இராணுவத்தை இழிவுபடுத்தவில்லை!– கோத்தபாய!



என்னை யாரும் கைக்கூலி என்று சொல்லிவிட முடியாது!– மட்டக்களப்பில் இயக்குனர் பாரதிராஜா
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 11:32.27 PM GMT ]
நான் இலங்கை வந்தது அறக்கட்டளை சார்பாக அங்குள்ள கலைஞர் பெருமக்களை சந்திப்பதற்காகவும் அவர்களைக் கௌரவிப்பதற்காகவுமே வந்த ஒரு கலைஞன். ஆனால் அந்த அமைச்சர் என்னை வந்து சந்தித்த விடயத்தை ஒரு விசமாக உலகம் பூராகப் பரப்பி உலகத் தமிழர்கள் அத்தனை பேர்களுக்கும் என்மீது அவப் பெயரை உண்டாக்க சிலர் நினைக்கிறார்கள் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார். 
நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற கரைஞர்களைப் பாராட்டும் நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இயக்குனர் பி.பாரதிராஜா மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது
நான் அகிலன் பவுண்டேசன் நிறுவனர் நண்பர் கோபாலகிருஸ்ணனின் அறக்கட்டளை சார்பாக அவரின் வேண்டுதலின் நிமித்தம் கலைஞர்களைச் சந்தித்து பாராட்டுவதற்காக இலங்கை வந்தேன்.
இந்த வகையில் கடந்த சனிக்கிழமை யாழ்பாணத்தில் கலைஞர்களைச் சந்தித்தோம். அந்த நேரத்தில் நான் அங்கு தங்கி இருந்த போது இந்திய தாதரகத்தில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் இலங்கை அமைச்சர் ஒருவர் என்னைச் சந்திக்க வர இருப்பதாகச் சொன்னார்கள். அப்போது நான் எண்ணினேன் அமைச்சர்களை நாம் தான் போய் சந்திக்க வேண்டும், ஆனால் அமைச்சரே என்னைச் சந்திக்க வருகிறாரா என நினைத்தேன்.
அப்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னை வந்து சந்தித்தார். மீனவர் பிரச்சினை பற்றிப் பேச முற்பட்டார். நான் அப்போது அவரிடம் சொன்னேன், அரசியல் பேசுவதற்கு நான் இங்கு வரவில்லை, நான் இங்கு வந்ததன் நோக்கம் கலைஞர்களைச் சந்திப்பதற்காகத்தானே ஒழிய அரசியல் பேசுவதற்கல்ல என சொன்னேன்.
அதன்போது அவருடன் வைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அந்த புகைப்படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு பாரதிராஜா இந்த அமைச்சரைச் சந்தித்தார், இவர் அரசின் கைக்கூலியாக வந்திருக்கிறாரோ என்ற ஒரு அபச்சாரமான, கேவலமான ஒரு விடயத்தை பாரதிராஜாவின் மேல் புள்ளியிட்டு அதை உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நான் இந்த இடத்தில் சொல்லவில்லை என்றால் நான் நாகரீகமற்றவனாகி விடுவேன்.
நான் இலங்கை வந்தது அறக்கட்டளை சார்பாக அங்குள்ள கலைஞர் பெருமக்களை சந்திப்பதற்காகவும் அவர்களைக் கௌரவிப்பதற்காகவுமே வந்த ஒரு கலைஞன். ஆனால் அந்த அமைச்சர் என்னை வந்து சந்தித்த விடயத்தை ஒரு விடயமாக ஒரு விசமாக உலகம் பூராகப் பரப்பி உலகத் தமிழர்கள் அத்தனை பேர்களுக்கும் என்மீது அவப் பெயரை உண்டாக்க சிலர் நினைக்கிறார்கள்.
 இந்த உண்மைக்குப் புறம்பான விடயத்தை பத்திரிகைக்காரர்களைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும் என நினைத்தேன்.
ஆனாலும் முதல் தடவையாக இங்கு சொல்கின்றேன். நான் இங்கு வந்தது என் நண்பன் கோபாலகிருஸ்ணனின் அறக்கட்டளை சார்பாக நடைபெறும் கலைவிழாவில் கரைஞர்களைக் கௌரவப்படுத்துவதற்காக வந்தேனே தவிர வேறு எதற்காகவும் வரவில்லை என்னை யாராலும் கைக்கூலி என்று சொல்லிவிட முடியாது.
முப்பது நாற்பது ஆண்டுகளாக மூன்று நான்கு முதலமைச்சர்களைப் பார்த்து விட்டேன், தமிழ் நாட்டில் நான் அரசியலில் வந்திருந்தால் மிகப்பெரிய அதிகாரத்தில் நான் சென்றிருப்பேன். ஆனால் நான் அதை விரும்பவில்லை, ஆனால் நான் ஒரு நல்ல கலைஞனாக வாழ்ந்து சாக வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.
உலகில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரினதும் பூர்வீகம் ஒரே இடத்தில் இருந்துதான் ஆரம்பமாகின்றது. இந்த தமிழர்களுக்கு துயரம் வரும்போது இந்த பாரதிராஜா குரல் கொடுப்பான். ஆனால் நான் ஒரு அரசியல்வாதியாக இல்லை. இந்த வகையில் ஈழத்தமிழர்களும் எமது தொப்புள் கொடி உறவுகளே, அவர்களுக்கு நான் ஒரு போதும் தீங்கு செய்யமாட்டேன் என அவர் மேலும் அங்கு தெரிவித்தார்.
அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் கதிரவன் கலைக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு, கிரான்குளம் சீ மூன் காடன் விடுதியில் நடைபெற்ற இந்த கலைஞர்களைப் பாராட்டும் நிகழ்வில் “கிராமியக் கலைஞானி” என்ற பட்டம் மட்டக்களப்பு கலைஞர்களால் இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ P.பாரதிராஜாவுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பைச் சேர்ந்த 30 கலைஞர்கள் இயக்குனர் பாரதிராஜாவினால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaiqz.html
தேவையென்றால் 2ம், 3ம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும்!- மஹிந்த தேசப்பிரிய
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 11:43.18 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தோதலின் போது தேவையென்றால் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்குச் சீட்டில் தாம் வாக்களிக்கும் வேட்பாளரின் சின்னத்திற்கு எதிரில் 1 என்ற இலக்கத்தை எழுதுவதன் மூலம் முதலாம் விருப்பத் தெரிவினை செய்ய முடியும்.
மேலும் இரண்டு வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கினை அளிக்க வேண்டுமாயின் குறித்த வேட்பாளர்களின் சின்னங்களுக்கு எதிரில் 2 மற்றும் 3 என குறிப்பிட முடியும்.
இரண்டாம் மூன்றாம் விருப்பத் தெரிவுகளை அடையாளப்படுத்தாது ஒரே ஒரு வேட்பாளருக்கு மட்டும் தேவையென்றால் வாக்களிக்க முடியும்.
வாக்காளர் ஒருவர் ஒரே வேட்பாளருக்கு மட்டும் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த வேட்பாளரின் சின்னத்தின் எதிரில் 2 அல்லது 3 என குறிப்பிடாது வேறும் எந்தவொரு அடையாளத்தை இட்டாலும் வாக்களிப்பு செல்லுபடியாகும்.
தாம் விரும்பும் வேட்பாளரின் சின்னத்தின் எதிரில் 1 அல்லது ரு என குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும்.1 அல்லது ரு என குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும்.
வாக்காளர் ஒருவர் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காது இருந்தாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு 1 அல்லது ரு அடையாளம் இட்டாலோ வாக்கு நிராகரிக்கப்படும்.
இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்தாலோ அல்லது வாக்காளரை அடையாளப்படுத்தக் கூடிய வகையில் எழுதுதல் அல்லது வேறும் வகையில் எதாவது வாக்குச்சீட்டில் வரையப்பட்டிருந்தால் அவ்வாறான வாக்குகள் நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வாக்களிப்பு தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaiq0.html
அரசாங்கம் இராணுவத்தை இழிவுபடுத்தவில்லை!– கோத்தபாய
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 11:52.58 PM GMT ]
அரசாங்கம் இராணுவத்தை இழிவுபடுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கதிர்காமம் வெடிஹிட்டி கந்த விஹாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவப் படையினரைக் கொண்டு காண்கள் வெட்டப்படுவதாகவும், சாப்பாட்டுத் தட்டுகள் கழுவப்படுவதாகவும் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும்,  படையினரை இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
இன்று அனுராதபுரம், பொலனறுவை மற்றும் திருகோணமலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படையினரே உதவிகளை வழங்கி வருகின்றனர்.
குறித்த மக்களின் உயிர்களை படையினர் மீட்கின்றனர்.
பொலனறுவையில் 14 பாடசாலைகளை படையினர் நிர்மாணித்துள்ளனர், இதனால் அரசாங்கத்திற்கு பாரியளவு செலவு குறைக்கப்பட்டுள்ளது.
போரின் பின்னர் 10,000 படையினர் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களில் மேசன்கள், இலக்ட்ரிசியன்ஸ், தச்சர்கள் உள்ளிட்ட பலரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
போரின் பின்னர் 25000 இராணுவப்படையினர் இணைத்துக் கொள்;ளப்பட்டனர்.
பல்வேறு வெளிநாட்டு சக்திகள் தொடர்ந்தும் நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் முன்னெடுத்து வருகின்றன.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய படையினரின் ஒத்துழைப்பு அவசியமானது.
மீட்கப்பட்ட வடக்கு கிழக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்தும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய அனர்த்தங்களின் போதும் படையினர் முக்கிய பங்களிப்பினை வழங்கி வருகின்றனர் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaiq1.html

Geen opmerkingen:

Een reactie posten