தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 december 2014

வடக்கில் மஹிந்தவிற்கு வெற்றிவாய்ப்பாம்! அரச அமைச்சர் சுசில் பிரேமஜேயந்த! (படங்கள் இணைப்பு)

ராஜபக்ச அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. மிக நீண்ட காலமாக அரசாங்கம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தக்க வைத்துக்கொண்டிருந்தது.

18ம் திருத்தச்சட்ட அமுலாக்கம் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்திக் கொண்டது. அண்மையில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பயன்படுத்தப்பட்டது.

எனினும், நீண்ட நாட்களின் பின்னர் ஆளும் கட்சியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. தற்போது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 148 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அமைச்சர் ரிசாட் பதியூதீன் மற்றும் அமீர் ஆகியோர் ஆளும்கட்சியை விட்டு விலகியதனைத் தொடர்ந்து, உறுப்பினர்களின் எண்ணிக்கை 150 லிருந்து 148 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையில் 15 ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதற்கு பதிலாக திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் தம் பக்கம் இழுத்துக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது. அமைச்சர்கள் ரிசாத்பதியுதீன் மற்றும் அமீர் அலியின் வெளியேற்றத்திற்கு பின்னர் இந்த நிலை உருவாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணி பக்கம் இணைந்துகொண்டுள்ளதை தொடர்ந்து அரசாங்கத்திற்கான ஆதரவு148 ஆக குறைந்துள்ளது.
22 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1419247599&archive=&start_from=&ucat=1&
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதில்லை..
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்த போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்களை புறக்கணிப்பதன் மூலம் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் வெகு விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ தேவைகளுக்காக இந்தியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியவுடன் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
22 Dec 2014

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1419247737&archive=&start_from=&ucat=1&
வடக்கில் மஹிந்தவிற்கு வெற்றிவாய்ப்பாம்! அரச அமைச்சர் சுசில் பிரேமஜேயந்த! (படங்கள் இணைப்பு)
வடமாகாண சபை சுயமாக செயற்படுவதற்குரிய அதிகாரங்களை அரசாங்கம் முழுமையாக வழங்கியுள்ளது. ஆனாலும் எதனையும் செய்ய இயலாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமாக சுசில் பிரேமஜேயந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் அரசாங்கத்திடம் வடமாகாண சபை வந்திருந்தால் வடபுலம் எங்கும் தேனும் பாலும் ஓடியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மகிந்தவிற்கு ஆதரவு திரட்டும் முகமாக நேற்று மானிப்பாய் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் முகவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்:-

வடமாகாண சபையின் அதிகாரம் இன்று எதிர்கட்சியினருடைய கைகளில் உள்ளது. அவர்களுக்கான முழுமையான அதிகாரங்களினை இந்த அரசாங்கம் வழங்கியுள்ள போதும் எதனையும் செய்ய முடியாத நிலையில் இன்று அவர்கள் இருக்கின்றார்கள். இதனால்தான் அரசாங்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்டவர்கள் ஊடாக பெரும் தொகையான நிதியினை செலவழித்து வடக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து மக்களிடம் கையளிக்கின்றது என்பதை இந்த இடத்தில் செல்லிக் காட்ட வேண்டிய நிலை உள்ளளது.

வடமாகாண சபையின் ஆட்சியானது எங்களுக்கு கிடைத்திருந்தால் இங்கு தேனும் பாலும் ஓடியிருக்கும். அதுமட்டுமல்லாமல் மக்களுக்க சேவை செய்யக் கூடிய சபையாக அது மாற்றமடைந்திருக்கும். இருந்த போதும் வடக்கின் அபிவிருத்தியில் நாங்கள் சளைக்கவில்லை. குறிப்பாக யாழ்.தேவியினைக் கொண்டுவந்துள்ளோம். 24 மணிநேர மின்சாரம், நவின வைத்திய சாலை, காப்பெற் வீதி, ஊழியர்களுக்கான நிரந்தர நியமணங்கள், வாழ்வாதார உதவிகள் என்று அனைத்தினையும் இந்த அரசாங்கத்தின் ஊடாக நாங்கள் வழங்கியுள்ளோம்.

வாக்களிப்பு நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை தயார்ப்படுத்தும் முகமாகவே இக்கூட்டத்தை அவசரமாக கூட்டியுள்ளோம். அதுமட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மகிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளார். அவர் வருகைதரும் போது ஆயிரக்கணக்கில் மக்களை திரட்டிக் அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான ஏற்பாட்டுக் கூட்டமாகவே இக்கூட்டம் அமைந்துள்ளது.

எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது வடக்கில் உள்ள மக்களில் பெரும்பாலான மக்கள் சரத் பொன்சேகாவிற்கு உங்களுடைய வாக்குகளை அழித்திருந்தீர்கள்.

அந்த வகையில் சரத் பென்சேன்;சேகாவிற்கு நீங்கள் அதிக வாக்குகளை வழங்கியிருந்த போதும் நாடளாவிய ரீதியில் 18 இலட்சம் வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டிருந்தார் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் நல்ல அறிவார்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்று நான் நம்புகின்றோன். எனவே தான் ஜனாதிபதிக்கு பெறப்போகும் அமேக வெற்றியில் தமிழ் மக்களுடைய பங்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது.

பெண்களே அதிகமாக இந்தக் கூட்டத்தில் இருக்கின்றார்கள். எனவே முழுமையான நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதிக்கு வெற்றி உறுதி என்றும் மேலும் தெரிவித்தார்.


22 Dec 2014

Geen opmerkingen:

Een reactie posten