22 Dec 2014 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1419247599&archive=&start_from=&ucat=1&
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதில்லை..
|
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்த போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களை புறக்கணிப்பதன் மூலம் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் வெகு விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ தேவைகளுக்காக இந்தியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியவுடன் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். |
22 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1419247737&archive=&start_from=&ucat=1&
வடக்கில் மஹிந்தவிற்கு வெற்றிவாய்ப்பாம்! அரச அமைச்சர் சுசில் பிரேமஜேயந்த! (படங்கள் இணைப்பு)
|
வடமாகாண சபை சுயமாக செயற்படுவதற்குரிய அதிகாரங்களை அரசாங்கம் முழுமையாக வழங்கியுள்ளது. ஆனாலும் எதனையும் செய்ய இயலாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமாக சுசில் பிரேமஜேயந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்திடம் வடமாகாண சபை வந்திருந்தால் வடபுலம் எங்கும் தேனும் பாலும் ஓடியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மகிந்தவிற்கு ஆதரவு திரட்டும் முகமாக நேற்று மானிப்பாய் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் முகவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்:-
வடமாகாண சபையின் அதிகாரம் இன்று எதிர்கட்சியினருடைய கைகளில் உள்ளது. அவர்களுக்கான முழுமையான அதிகாரங்களினை இந்த அரசாங்கம் வழங்கியுள்ள போதும் எதனையும் செய்ய முடியாத நிலையில் இன்று அவர்கள் இருக்கின்றார்கள். இதனால்தான் அரசாங்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்டவர்கள் ஊடாக பெரும் தொகையான நிதியினை செலவழித்து வடக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து மக்களிடம் கையளிக்கின்றது என்பதை இந்த இடத்தில் செல்லிக் காட்ட வேண்டிய நிலை உள்ளளது.
வடமாகாண சபையின் ஆட்சியானது எங்களுக்கு கிடைத்திருந்தால் இங்கு தேனும் பாலும் ஓடியிருக்கும். அதுமட்டுமல்லாமல் மக்களுக்க சேவை செய்யக் கூடிய சபையாக அது மாற்றமடைந்திருக்கும். இருந்த போதும் வடக்கின் அபிவிருத்தியில் நாங்கள் சளைக்கவில்லை. குறிப்பாக யாழ்.தேவியினைக் கொண்டுவந்துள்ளோம். 24 மணிநேர மின்சாரம், நவின வைத்திய சாலை, காப்பெற் வீதி, ஊழியர்களுக்கான நிரந்தர நியமணங்கள், வாழ்வாதார உதவிகள் என்று அனைத்தினையும் இந்த அரசாங்கத்தின் ஊடாக நாங்கள் வழங்கியுள்ளோம்.
வாக்களிப்பு நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை தயார்ப்படுத்தும் முகமாகவே இக்கூட்டத்தை அவசரமாக கூட்டியுள்ளோம். அதுமட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மகிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளார். அவர் வருகைதரும் போது ஆயிரக்கணக்கில் மக்களை திரட்டிக் அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான ஏற்பாட்டுக் கூட்டமாகவே இக்கூட்டம் அமைந்துள்ளது.
எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது வடக்கில் உள்ள மக்களில் பெரும்பாலான மக்கள் சரத் பொன்சேகாவிற்கு உங்களுடைய வாக்குகளை அழித்திருந்தீர்கள்.
அந்த வகையில் சரத் பென்சேன்;சேகாவிற்கு நீங்கள் அதிக வாக்குகளை வழங்கியிருந்த போதும் நாடளாவிய ரீதியில் 18 இலட்சம் வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டிருந்தார் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் நல்ல அறிவார்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்று நான் நம்புகின்றோன். எனவே தான் ஜனாதிபதிக்கு பெறப்போகும் அமேக வெற்றியில் தமிழ் மக்களுடைய பங்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது.
பெண்களே அதிகமாக இந்தக் கூட்டத்தில் இருக்கின்றார்கள். எனவே முழுமையான நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதிக்கு வெற்றி உறுதி என்றும் மேலும் தெரிவித்தார்.


 |
22 Dec 2014
|
|
|
Geen opmerkingen:
Een reactie posten