[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 02:56.28 PM GMT ]
நுவரெலியாவில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தின் போது இந்த உறுதிப்பாடு மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் செயலாளர் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மலையக மக்கள் முன்னணியின் யாப்புக்கு எதிராக மத்திய செயற்குழு எடுத்த முடிவுக்கு எதிராக செயற்படுபவர்களிடம் விளக்கம் கோருவதென்றும் இன்று தீர்மானிக்கப்பட்டதாக லோரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் நடப்பு தலைவரான சாந்தினிதேவி சந்திரசேகரன் மற்றும் நுவரெலிய பிரதேசசபை தலைவர் சதாசிவம் ஆகியோரே மத்திய செயற்குழு தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaio2.html
பொலிஸார் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு தவறியுள்ளனர்: கரு ஜெயசூரிய
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 02:59.56 PM GMT ]
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ சபை தலைவர் கருஜெயசூரிய இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பொதுவேட்பாளரின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை அரச பயங்கரவாதத்தின் செயற்பாடாவே கருதவேண்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று ஹப்புத்தளையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஞாயிற்றுக்கிழமையன்று ஹம்பாந்தோட்டையில் சிவில் குழுவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்றவை அரச பயங்கரவாத செயல்களாகும்.
எனினும், இந்த செயல்களின்போது பொலிஸார் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று கரு ஜெயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaio3.html
மத்தள விமான நிலையத்தின் கடன்களை அடைக்க 144,000 வருடங்கள் செல்லும்: சம்பிக்க
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 03:30.03 PM GMT ]
ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலைய அமைப்புக்காக 27பில்லியன் ரூபாய்கள் கடனாக பெறப்பட்டுள்ளன.
எனினும் அந்த விமான நிலையத்தின் மாத வருமானம் 16,000 ரூபாவாகும்.
இந்தநிலையில் குறித்த 27 பில்லியன் ரூபாய் கடனை செலுத்துவதற்கு 144, 000 வருடங்கள் பிடிக்கும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மனித குலம் பரிணாம வளர்ச்சி ஏற்படு;த்தப்பட்டு 143 வருடங்கள் கடந்துள்ளன
இந்தநிலையில் மத்தள விமான நிலையத்தின் கடன்களை அடைப்பதற்கும் மனித குல பரிணாம வளர்ச்சியின் காலங்களை எதிர்காலத்தில் கடக்க வேண்டியிருக்கும் என்று சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்தளை விமான நிலையம் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்துக்காக அமைக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும் என்றும் ரணவக்க இன்று காலை பிட்டகோட்டேயில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaio4.html
தோல்வியடைந்தால் அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும்: மகிந்த
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 03:43.31 PM GMT ] [ பி.பி.சி ]
பிரிட்டனிலிருந்து வெளியாகும் பைனான்ஸியல் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு அளித்த பதிலிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
எனினும், நான் தோல்வியடைப் போவதில்லை என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச, முதிர்ச்சியடைந்த, துடிப்புள்ள ஜனநாயகமான இலங்கையில் அமைதியான முறையிலேயே ஆட்சி கைமாற்றங்கள் நடந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.
ஆனால், மீண்டும் நான் கூறுகின்றேன். நாங்கள் வெற்றியடைவோம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலை மேற்குலகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கூறியுள்ள பைனான்ஸியல் டைம்ஸ் செய்தியாளர், புதிய அரசாங்கம் உள்நாட்டு யுத்தத்தின் போது நடந்துள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் என்ற நம்பிக்கை மேற்குலகிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல, இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ள 8 வீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பினால் சர்வதேச முதலீட்டாளர்கள் ஆர்வமடைந்துள்ளதாகவும் பைனான்ஸியல் டைம்ஸ் கூறியுள்ளது.
எதிர்வரும் 8-ம் திகதி நடக்கவுள்ள தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் மிகவும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மிகவும் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டால், ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் நிலவும் ஆட்சியை தொடர்ந்தும் தக்க வைத்திருக்க வன்முறைகளும் ஸ்திரமற்ற நிலைமைகளும் உருவாகலாம் என்று உள்நாட்டு அவதானிகள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaio5.html
தனி வீடு கோரி பதுளையில் ஆா்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 03:47.46 PM GMT ]
20 பேர்ச் காணி உரிமையும், தனி வீட்டுரிமையும் வேண்டும் என பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி இந்த பேரணி நடைபெற்றது.
பதுளை ஊவா கல்லூரியின் அருகாமிலிருந்து ஊவா மாகாண சபை வரைக்கும் பேரணி தொடர்ந்தது. அதனையடுத்து ஊவா மாகாண சபைக்கு முன்னால் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
பல வருட காலமாக மலையக மக்களின் வரலாற்றினை கொஸ்லாந்தை அனர்த்தம் உலகுக்கு வெளிகாட்டிவிட்டது.
இந்நிலை தொடருமானால் இன்னும் பல வருடங்களுக்கும் இவ் அவலநிலை தொடரதான் போகின்றது. இதற்கு நாம் இனியும் இடமளிக்க கூடாது. இதனை மாற்ற வேண்டிய தருவாயில் நாங்கள் இப்போது இருக்கின்றோம் என்பதை மலையக மக்கள் உணர வேண்டும்.
மலையகத்தில் ஏற்படுகின்ற அனர்த்தத்தின் விளைவுகள் மலையக மக்கள் மனதில் உணர்ந்தால் ஒவ்வொருவரும் சிந்தித்து இனி ஏற்படவிருக்கின்ற அனர்த்தத்தினையும் இல்லாதொழித்து பாதுகாப்பான இடங்களில் சொந்த வீடு, சொந்த காணி பெற்றுகொள்வதற்காக ஒன்றினைந்து போராட வேண்டும்.
எமது மலையக அரசியல்வாதிகள் முன்னின்று எமது மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க அரசியல் தொழிற்சங்க பேதமின்றி முன்வரவேண்டும் என இந்த பேரணியில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
20 பேர்ச் காணியூடனான தனி வீட்டு திட்டத்தை அமைக்க வேண்டும் என இந்த பேரணியில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது. இதில் மலையக பெருந்தோட்ட மக்களும், நகரவாசிகளும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaio6.html
Geen opmerkingen:
Een reactie posten