தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 december 2014

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற அன்ரன் பாலசிங்கம், சு.ப.தமிழ்ச்செல்வன், கேணல் பருதி உட்பட 7 மாவீரர்களினது வணக்க நிகழ்வு

சீரற்ற காலநிலை! திருமலையில் 10 ஆயிரம் பேர் இடம்பெயர்வு
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 02:19.16 PM GMT ]
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 502 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 27 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களை தங்க வைப்பதற்காக மாவட்டத்தில் 18 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் விராஜ் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மகாவலி கங்கை பெருக்ககெடுத்தன் காரணமாக கிண்ணியா, மூதூர், வெருகல், சேருவில், கந்தளாய், தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மக்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மழை வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு வீடுகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 130 வீடுகள் பாதியளவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaio0.html

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற அன்ரன் பாலசிங்கம், சு.ப.தமிழ்ச்செல்வன், கேணல் பருதி உட்பட 7 மாவீரர்களினது வணக்க நிகழ்வு
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 02:43.24 PM GMT ]
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது நேற்று சுவிஸ், லுட்சேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
மக்களால் சுடர், மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் கலை பண்பாட்டுக் கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.
நீண்ட காலங்களுக்குப் பிறகு லுட்சேர்ன் மாநிலத்தில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமையானது மீள் எழுச்சியுடன், மிகவும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.
தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை அறுபதை முன்னிட்டு, தேசிய தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் ஓவியப்படங்களுக்கு ஏற்ற சிந்தனைகளின் தொகுப்புடன் சிறப்பு நூலும், தலைவர் அவர்களின் அகவை அறுபதின், அறுபது வெண்பாக்களையும் உள்ளடக்கியதுமான சிறப்பு நூலுமாக இரு வெளியீடுகள் நிகழ்வில் சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டன.
உலகத் தமிழர் பேரமைப்பின் அறக்கட்டளை சார்பில் சுவிசில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் இவை வெளியிட்டு வைக்கப்பட்டன.
மாவீர வித்துக்களான அரசியல் பெருந்தகைகள் மற்றும் புலத்தில் அயராது உழைத்த கேணல் பருதி அவர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக இளையோர்களின் எழுச்சி நடனங்கள், கவியரங்கம் மற்றும் காலத்தின் தேவை கருதிய சிறப்புரையோடு, பேச்சுக்களும், கவிதைகளும் இடம்பெற்றதுடன் மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த காணொளிக் காட்சித் தொகுப்புக்களும் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaio1.html

Geen opmerkingen:

Een reactie posten