தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 december 2014

ஆஸி அமைச்சரவையில் மாற்றம்! மொரிசனிடம் இருந்து குடிவரவுத்துறை பறிப்பு!

மைத்திரிபாலவின் மகனிடம் புலம்பெயர்வாளர்களின் பணம்!- விமல் வீரவன்ச
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 02:06.29 AM GMT ]
எதிரணிக் கூட்டணிக்கு புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து பணம் கிடைக்கிறது என்பதை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் தமது மனைவியின் தந்தைக்கு சுவிஸ் பிராங், அமெரிக்க டொலர்கள் என்பவற்றை கொடுத்துள்ளார்.
இதனை இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பணம் எவ்வாறு நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நேற்று மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்தார்.
எனவே இந்த பணம் தேர்தலுக்காக புலம்பெயர்ந்தவர்களால் வழங்கப்பட்டது என்பதை மைத்திரிபால ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்தார்.
மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்குவதன் மூலம் வடக்கு கிழக்கை இணைக்க புலம்பெயர்ந்தோர் முயற்சிப்பதாக வீரவன்ச குறிப்பிட்டார்.
 http://www.newstamilwin.com/show-RUmszCRWKajuy.html

ஆஸி அமைச்சரவையில் மாற்றம்! மொரிசனிடம் இருந்து குடிவரவுத்துறை பறிப்பு
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 02:36.09 AM GMT ]
அவுஸ்திரேலியாவின் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிரதம மந்திரி ரோனி அபொட் அறிவித்துள்ளார்.
ஸ்கொட் மொரிசன் சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நலன்புரி, குடும்பங்கள், சிறுவர் பராமரிப்பு, சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுமுறைத் திட்டம் போன்ற பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம், அரசாங்கத்தின் அடுத்த ஆண்டிற்குரிய நிகழ்ச்சி நிரலில் ஸ்கொட் மொரிசன் மையமாகத் திகழ்கிறார்.
குடிவரவுத்துறையில் அவர் அடைந்த வெற்றிகளைத் தொடர்ந்து புதிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதாக ஏபிசி செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKaju0.html

Geen opmerkingen:

Een reactie posten