தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 december 2014

பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு நாமல் ராஜபக்ஸவிற்கு சவால்

கொழும்பு தமிழர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்!
கொழும்பு நகரில் அரசாங்க கட்டிடங்களில் வாழ்கின்ற தமிழர் மக்களை மகிந்தராஜபக்ஷவின் இராணுவத்தினர் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச வாசிகள் இதனைத் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு வாக்களிக்காத பட்சத்தில், கொழும்பில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
21 Dec 2014

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1419204804&archive=&start_from=&ucat=1&
பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு நாமல் ராஜபக்ஸவிற்கு சவால்
பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு, முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி சவால் விடுத்துள்ளார்.

இளைஞர்களுக்கான நாளை (தாருன்யட ஹெடக்) அமைப்பின் செயற்பாடுகள் குறித்து விவாதம் நடாத்த தயார்வ எனவும், இதற்கு நாமல் ராஜபக்ஸ தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கான நாளை அமைப்பு தேர்தல் காலத்தில் மட்டுமே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், இளைஞர்களுக்கு இந்த அமைப்பு எந்தவிதமான சேவைகளையும் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்த விவாதத்தை நடத்தத் தயார் எனவும், நாமல் ராஜபக்ஸவிற்கு தேவை என்றால் 20 பேரை விவாதத்திற்கு அழைத்து வரலாம் எனவும் தமது பக்கத்தில் இரண்டு பேர் மட்டுமே விவாதத்தில் பங்கேற்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
22 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1419247205&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten