[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 01:25.16 PM GMT ]
கணக்கியல் தொடர்பான தேசிய உயர்நிலை டிப்ளோமா பாடத்திட்டத்தின் தரம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
சில கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளர்.
குறித்த மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் நுழைவதற்கு முயற்சித்தபோது பொலிஸாரால் கண்ணீ்ர்ப் புகைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள், கொழும்பு – கோட்டையில் இருந்து பேரணியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அருகிற்கு வருகைத் தந்திருந்தனர்.
அங்கு கூடிய மாணவர்கள் உயர்கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்போது, 04 மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் கைதான மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
எவ்வாறாயினும், அமைதியற்ற முறையில் செயற்பட்ட மாணவர்களை கலைப்பதற்கு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்திய போதிலும், எவரையும் கைது செய்யவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKajx7.html
ஜனவரி 13 திகதி பொது விடுமுறை: ஜோன் அமரதுங்க
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 01:38.38 PM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் ஜனவரி 14 ஆம் திகதி கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறும் பிரதான திருப்பலி பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக நாடு முழுவதிலும் இருந்து இலவசமாக பஸ் சேவை நடத்தப்படும் எனவும் ஜோன் அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaioy.html
புகையிலை நிறுவனத்திடம் பணம் பெற்றார் மைத்திரி: ஆதாரம் உண்டு என்கிறார் மகிந்த
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 01:54.54 PM GMT ]
முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன புகையிலை நிறுவனத்திடம் பணத்தை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதம் சம்பந்தமான அறிக்கை தன்னிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளை – ஹாலி-எல பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த சிந்தனை மூலம் மதுவுக்கு முற்றுபுள்ளி வைக்க இன்றைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
பஸ்களில் புகைத்தல், பொது இடங்களில் சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டதுடன் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது.
முன்னாள் சுகாதார அமைச்சர் சிகரெட் பக்கெட்டுகளில் புகைத்தல் எச்சரிக்கை தொடர்பான புகைப்படத்தை 80 வீதமாக அச்சிடுமாறு உத்தரவிட்டார். அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், நீதிமன்றத்திற்கு செல்லும் உரிமை நிறுவனத்திற்கு இருப்பதால், நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது தவறானது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaioz.html
Geen opmerkingen:
Een reactie posten