த.தே.கூ.வின் முடிவு இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள்
[ Dec 21, 2014 08:13:38 PM | வாசித்தோர் : 10690 ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் 48 மணித்தியாலங்களுக்குள் அறிவிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கலந்துரையாடல் இன்று காலை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்கப் போகும் வேட்பாளர் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்படி இறுதி முடிவு என்ன என்பது தொடர்பில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரிசாத் பதியூதின்- அமீர் அலி தற்போது எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எமது செய்தியாளர் !
[ Dec 22, 2014 03:21:50 PM | வாசித்தோர் : 1865 ]
அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சிகளின் கூட்டணியில் பங்கேற்கும் நோக்கில் அவர்கள் எதிர்கட்சி அலுவலகம் சென்றுள்ளதாகவும் தற்போது நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் அவர்கள் தங்களது அறிவிப்பை வெளியிடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1700.htmlதேர்தலில் தோற்றால் அமைதியான முறையில் விலகிச் செல்வேன் என்று கூறிவிட்டார் மகிந்த !
[ Dec 22, 2014 03:26:48 PM | வாசித்தோர் : 3110 ]
முதலாவதாக தாம் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு தோல்வியைத் தழுவினால் மிகவும் அமைதியான முறையில் அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டு விலகிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் ஒரு போதும் தோற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்கனவே மிகவும் அமைதியான முறையில் அதிகாரங்கள் கைமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று இலங்கை அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறவில்லை எனவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பலவீனமானவை என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1701.htmlமுல்லைத்தீவில் மகிந்தரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்ட தமிழ் தாய் இவர்தான் !
[ Dec 22, 2014 04:37:05 PM | வாசித்தோர் : 2390 ]
மகிந்தர் முல்லைத்தீவு சென்றவேளை அங்கே அவரை கட்டி அணைத்து முத்தமிட்டுள்ளார் ஒரு தமிழ் தாய். இதனை புகைப்படம் எடுத்து மகிந்தரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள் சிங்கள அதிகாரிகள். ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொன்று, முல்லைத்தீவையே ரத்த களமாக்கிய மகிந்தரை பார்கவே அருவருக்கும். அப்படி இருக்க இந்த காட்டேரியை ஒரு தமிழ் தாய் கட்டி அணைத்து முத்தம் இட்டுள்ளார் என்றால் பாருங்கள்.
http://www.athirvu.com/newsdetail/1702.html
Geen opmerkingen:
Een reactie posten