முன்னர் துப்பாக்கியோடு ஓடி பின்னர் அது பொய் துப்பாக்கி என்று கூறிய ஹம்பாந்தோட்டை நகரசபை உறுப்பினர் கைது !
[ Dec 23, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4265 ]
ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் இராஜ் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற வீதி நாடக நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல வீதி நாடக கலைஞர் விசாரத ஜயதிலக பண்டார உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராஜ் பெனாண்டோ கைது செய்யப்பட்ட தகவலை கொழும்பில் இடம்பெறும் ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை சென்ற ஐதேக உறுப்பினர்களை நோக்கி துப்பாக்கியுடன் ஓடிவந்து அச்சுறுத்தி பின்னர் அதனை விளையாட்டு துப்பாக்கி என்று கூறி நாட்டு ஊடகங்களால் பெரிதும் பேசப்பட்டவர் இராஜ் பெனாண்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/1704.htmlதேர்தல் மோசடியில் ஈடுபட பொலன்னறுவைக்கு மேலதிக இராணுவப் படையணிகள் !
[ Dec 23, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 6645 ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில் கேந்திரமுக்கியஸ்துவம் வாய்ந்த பொலன்னறுவ மாவட்டத்துக்கு மேலதிகமாக ஒன்பது இராணுவப் படையணிகள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அனுப்பி வைத்திருப்பதாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிடப்பட்டிருக்கிறது. ஜனவரி எட்டாம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் மோசடியில் ஈடுபடுவதற்காகவே வட மத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தில் புதிதாக ஒன்பது இராணுவப் படையணிகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளன.
எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கும் மைத்திரிபால சிறிசேனவின் சொந்த இடமான பொலன்னறுவை மாவட்டத்திலும், அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் வாக்காளர்கள் பெருமளவில் சென்று அவருக்காக வாக்களிப்பதனையும், நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதையும் திட்டமிட்டு தடுக்கும் நோக்கிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து கிழக்கு உட்பட ஏனைய மாவட்டங்களுக்கு படைகளை விநியோகங்களை இலகுவாக மேற்கொள்ள முடியும் என்பதாலேயே மேலதிக படையணிகள் இங்கு நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். யார் எங்கு சென்றாலும், எதிர்வரும் தேர்தலில் தானே வெற்றுபெறுவேன் என்றும், ஜனவரி 9 க்குப் பின்னரும் தானே ஜானதிபதியென்று மஹிந்த ராஜபக்ஷ அடிக்கடி தேர்தல் பிரச்சார மேடைகளில் தெரிவித்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/1707.htmlமண்ணை தொட்டு வணங்கும் மஹிந்தவை பார்த்து "ஊ.." சத்தம் போட்ட இராணுவத்தினர் !
[ Dec 23, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 19985 ]
ஊனமுற்ற இராணுவ சிப்பாய்கள் நலன்கருதி 20ம் திகதி வெயங்கொட – நைய்வல சனச அரங்கில் பிரபல நாடகக் கலைஞர் வில்சன் குணரத்னவின் 8 கதாபாத்திரங்கள் மேடையேற்றப்பட்டன. இந்த நாடகத்தை காண விசேட அதிரடிப்படை ஊனமுற்றோர், ராகம ரணவிரு செவன ஊனமுற்ற இராணுவ சிப்பாய்கள், ஊனமுற்று படை சிப்பாய்கள் உள்ளிட்டவர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த கதாபாத்திரங்களில் ஒன்றான தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வரவு 2009 யுத்த வெற்றியின் பின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கி ராஜபக்ஸ மண்டியிட்டு இலங்கை மண்ணை தொட்டு வணங்கும் காட்சி வருகிறது. நாடகக் கலைஞர் வில்சன் குணரத்ன அந்த கதாபாத்திரத்தை நடித்த போது ஊனமுற்ற படை சிப்பாய்களிடம் இருந்து நல்ல கைத்தட்டல்கள் எதிர்பார்க்கப்பட்ட போதும், மாறாக ஊனமுற்ற இராணுவ சிப்பாய்கள் ஒரேடியாக ஊ.. சத்தம் எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.
ஊ.. சத்தத்திற்கு மத்தியில் நடிப்பை தொடர முடியாத வில்சன் ஆசனத்தில் அமர்ந்து ஊ சத்தம் எழுப்பிய ஊனமுற்ற இராணுவ சிப்பாய்களை ஒருமுறை உற்று பார்த்துள்ளார். 'இவர்தான் எங்கள் சம்பளத்திற்கு ஆப்பு வைத்தார். யுத்தம் செய்தது நாம். இவன் யுத்தத்தை விற்று எம்மை கவனிப்பது இப்படித்தான்' என்று அரங்கத்தின் நாலா பக்கமும் ஊனமுற்ற இராணுவ சிப்பாய்கள் சத்தமிட, நாடகம் பார்க்க அதிதிகளாக வந்த மேஜர் ஜெனரல் மார்கள், பிரிகேடியர்கள் தங்களது முகங்களை பார்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/1705.html
Geen opmerkingen:
Een reactie posten