தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 december 2014

கருணாவின் கொலைகள் தொடர்பில் ஆதாரத்துடன் முறைப்பாடு செய்தால் விசாரணைகளுக்கு ஆதரவளிப்போம்!- பியசிறி

இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை தொடர்பான கலந்துரையாடல் மார்ச் 25ல்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 01:13.05 AM GMT ]
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் குழுவின் விசாரணை அறிக்கை, எதிர்வரும் 2015 மார்ச் 25ம் திகதியன்று கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 
கடந்த மார்ச் மாத அமர்வின் நிகழ்ச்சி நிரலின்படி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 28வது முறையான அமர்வு எதிர்வரும் மார்;ச் 2முதல் 27ஆம் திகதி வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.
இதன்போது இலங்கையின் விடயம் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.
2104ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி “இலங்கையின் நல்லிணக்கத்தையும்; பொறுப்புக்கூறலையும் மேம்;படுத்தல்” என்ற அடிப்படையில் சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை, ஆணையாளரை கேட்டுக்கொண்டது.
இதன்படியே 28வது அமர்வில் இலங்கையின் விசாரணை தொடர்பாக அறிக்கை ஆராயப்படவுள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRWKajt3.html#sthash.X9TyyDZy.dpuf

மஹிந்த சிந்தனையின் மூலம் கடன் சுமை மட்டுமே எஞ்சியுள்ளது!– சாந்தனி பண்டார
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 01:23.30 AM GMT ]
மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் மூலம் தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் சுமை மட்டுமே எஞ்சியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனி பண்டார தெரிவித்துள்ளார்.
மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டம் ஓர் ஆச்சரியமான எண்ணக்கருவாகவே ஆளும் கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர்.
எனினும். உண்மையிலேயே மஹிந்த சிந்தனை காரணமாக ஆசியாவின் பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியுள்ளது.
அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடன் தொகையின் அளவு எவ்வளவு என்றல் பிறந்த குழந்தைகள் மட்டுமன்றி பிறக்க இருக்கும் குழந்தைகளும் தலா நான்கு லட்ச ரூபா கடனாளியாகியுள்ளது.
பெற்றுக்கொண்டுள்ள கடன் அடைக்க வருடாந்த வருமானம் போதுமானதல்ல.
இவ்வாறு கடன் சுமை அதிகரித்தால் நாட்டை மீட்க முடியாத நிலைமை ஏற்படக்கூடும்.
இவை தொடர்பில் யதார்த்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
யாருடைய பெயரையும் மேலே கொண்டு வரவோ யாருடைய பெயரையும் அழிக்கவோ நாம் விரும்பவில்லை.
எமது தாய் நாட்டை வெளிநாட்டு சக்திகளிடமிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கம் என சாந்தனி பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று அனுராதபுரத்தில் உள்ள காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajt4.html
கருணாவின் கொலைகள் தொடர்பில் ஆதாரத்துடன் முறைப்பாடு செய்தால் விசாரணைகளுக்கு ஆதரவளிப்போம்!- பியசிறி
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 01:36.17 AM GMT ]
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா போர் இடம்பெற்ற காலத்தில் செய்ததாக கூறப்படும் கொலைகள் தொடர்பில் ஆதாரத்துடன் முறைப்பாடு செய்தால் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பியசிறி விஜயநாயக்க நேற்று பத்தரமுல்லவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருணாவிற்கு எதிராக எவரேனும் முறைப்பாடு செய்து விசாரணை நடத்துமாறு நியாயமாக கோரினால் அதற்காக குரல் கொடுக்கத் தயார்.
சாட்சியங்களுடன் கருணாவின் குற்றச் செயல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட கருணா போன்றவர்கள் சரியான பாதையில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
கருணா ஜனாதிபதியை ஹேக் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முயற்சிக்கவில்லை.
நாட்டை பிளவுபடுத்த வேண்டுமென கோரவில்லை.
எந்தவொரு நபரும் பிழை செய்தால் அதனை திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.
கருணா கொலை செய்திருந்தால் அதனை சாட்சியங்களுடன் நிரூபிக்க வேண்டும்.
வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் அர்த்தமில்லை.
குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை தண்டிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajt5.html

Geen opmerkingen:

Een reactie posten