தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 december 2014

இனப் பிரச்சினை தீராத புதிய தேசம் சாத்தியப்படுமா?

ஜனாதிபதி பொதுவேட்பாளர் தரப்பு இந்திய சார்புக் கொள்கையை கடைப்பிடிக்கிறது: தெ ஹிந்து
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 03:15.00 PM GMT ]
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இந்தியா கரிசனை கொண்டுள்ள நிலையில், இலங்கையின் எதிர்க்கட்சி தரப்பும் சீனாவுக்கு எதிரான கொள்கையை கடைபிடிப்பதாக தெ ஹிந்து கருத்து வெளியிட்டுள்ளது.
அண்மையில் வர்த்தகத் துறையினரை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால ஜனாதிபதியாக பதவியேற்றதும் காலிமுகத்திடல் கடலை நிரப்பி சீன நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு போட் சிட்டி திட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த திட்டம் 1.34 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் 580 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த திட்டத்தினால் இலங்கையின் கரையோர கடல் வளம் பாரிய பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சம் காரணமாகவே அதனை ரத்து செய்யப் போவதாக ரணில் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் சீனாவிடம் இலங்கை பெறும் கடன்களால் பாரிய கட்ன்சுமை நாட்டின் மீது சுமத்தப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில், இந்தியாவுடனும் சீனாவுடனும் சமநிலை உறவை பேணப் போவதாக அறிவித்துள்ளார்.
எனவே பொதுவில் பார்க்கும்போது ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் இந்தியாவுக்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajsz.html

இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் நாளை திறப்பு! நிலைமைகளை பார்வையிட்டார் சி.சிறீதரன் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 03:24.28 PM GMT ]
இலங்கையின் மிகப்பெரிய நீர்தேக்கங்களில் ஒன்றாகவும் கிளிநொச்சி மாவட்ட விவாசாய பெருமக்களின் நீர்க்கொடை தாயாகவும் கடந்த வருடங்களில் முக்கிய கலந்துரையாடல் மையப்பொருளாகவும் விளங்கிய இரணைமடு பெருங்குளம் இன்றைய நிலவரத்தின்படி 31 அடிவரை நீர் உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் நாளை காலை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படும் என கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்றில் இல்லாத அளவு கொடும் வரட்சியை மக்கள் சந்தித்து மழைக்காக ஏங்கியிருந்தபோது பருவமழை பெய்து இரணைமடுக்குளம் நீண்ட காலத்துக்குபின் இப்பொழுது தற்போது வான்கதவுகள் திறக்கும் நிலையை எட்டியுள்ளது.
நாளை வான்கதவுகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் இன்று பா.உறுப்பினர் சி.சிறீதரன் அங்கு நேரடியாக சென்று குளத்தின் நீர்பேணல் நிலைமைகள் அணைகளின் நிலைமைகளை அங்கு இரவுபகல் பணியில் இருந்து கொண்டிருக்கும் கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
நூற்றாண்டு பெருமைவாய்ந்த அணைகளை கொண்டுள்ள இரணைமடுக் குளத்தில் அணைகளில் சில பகுதிகளில் நீர் கசிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அதை பொறியியலாளர்கள் சீர்செய்து அவதானித்து வருகின்றார்கள்.
அணையின் நிலைமைகள் மற்றும் வான்பாயும் பகுதிகளில் காணப்படும் பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர்களைகளை கருத்திற்கொண்டு இரணைமடுவின் நீர்மட்டம் கடந்த காலங்களில் ஒரு சீராக பேணுப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
பா.உறுப்பினர் சி.சிறீதரனுடன் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் முக்கியஸ்தர் சிவமோகன், பா.உறுப்பினரின் செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தலைவருமான பொன்.காந்தன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் செயலாளர் கு.சர்வானந்தா, இளைஞர் அணி உறுப்பினர் அஜந்தன் ஆகியோரும் சென்றிருந்ததுடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரனும் அங்கு பிரசன்னமாயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajs0.html
இனப் பிரச்சினை தீராத புதிய தேசம் சாத்தியப்படுமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 03:38.56 PM GMT ]
நூறு நாளில் புதிய தேசம் என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை ஒட்டி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் நூறு நாட்களில் இலங்கையை புதிய தேசமாக மாற்றும் திட்டங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னைய ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச­  அவர்களால் மகிந்த சிந்தனை வெளியிடப்பட்டு தற்போது அது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக, புதிய தேசமாக இலங்கையை மாற்றியமைத்தல் என்ற திட்டம் மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனமாக முன்மொழியப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே தேர்தல் விஞ்ஞாபனங்களின் அமுலாக்கம் பற்றிக் கூறமுடியும் என்பதால் அதுபற்றி நாம் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்.
எனினும் இலங்கையை புதிய தேசமாக மாற்றுவோம் என்று கூறுவோரும் மகிந்த சிந்தனையின் கீழ் நாட்டை நவீனமாக்குவோம் என்று சூளுரைப்போரும் நாட்டின் அமைதி நிலை குறித்து இம்மியும் கவனம் கொண்டிலர்.
உண்மையில் ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அந்த நாட்டில் நிலவக் கூடிய சமாதானம், அமைதி, இன ஒற்றுமை, என்ற அடிப்படைகளில் தங்கியுள்ளன.
இருந்தும் இலங்கை ஆட்சியாளர்கள் இன ஒற்றுமை, சிறுபான்மை இனத்தின் வகிபங்கு பற்றி ஒருபோதும் கவனம் செலுத்துவது கிடையாது.
பெரும்பான்மையினம் நினைத்தால் எதுவும் செய்யலாம் என்ற நினைப்பிலேயே எந்தத் திட்டமும் தயார் செய்யப்படுகின்றது.
அந்த வகையிலேயே பெரும்பான்மை இனம் சார்ந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் அமைந்துள்ளன.
சிறுபான்மை இனம் பற்றிக் கவலை கொள்ளாத ஒரு அரசால் எங்ஙனம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமானதாயினும், பெரும்பான்மை இனத்தின் அரசியல் போக்கு சிறுபான்மை பற்றி நமக்கு எந்தக் கவலையும் கிடையாது என்பதாக வேதனைக்குரியது.
நூறு நாட்களில் இந்த நாட்டை புதிய தேசமாக மாற்றுவோம் என்ற தொனிப் பொருளில் அந்த மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் சாத்தியமாகலாம்.
ஆனால் நூறு நாட்களில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு, சிறுபான்மை மக்களையும் கைகோர்த்து இந்த நாடு புதிய தேசமாக்கப்படும் என்ற வாக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இதை விடுத்து நூறு நாட்களில் கட்டி எழுப்பப்படும் புதிய தேசத்திலும் பெளத்த பிக்குகள் மதவாதம் பேசினால், பெளத்தமும் சிங்களமுமே இந்த நாட்டின் ஆட்சி மதமும், ஆட்சி மொழியும் என்று மார்தட்டினால் நிலைமை என்னவாவது?
எனவே, யார் வேண்டுமானாலும் எந்த விஞ்ஞாபனங்களையும் கொண்டு வரலாம். ஆனால் அவை அனைத்திலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சாத்தியப்பாட்டுடன் முன்மொழியப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் இந்த நாட்டை எந்த வழியிலும் முன்னேற்ற முடியாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல்களின் போது மகிந்த ராஜபக்ச­, மகிந்த சிந்தனை என்பதை தனது தேர்தல் விஞ்ஞாபனமாக முன் மொழிந்தார்.

ஆனால் மகிந்த சிந்தனையின் செயலாக்கம் அனேக விடயங்களில் அரையும் குறையுமாக அவலப்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
எனவே வீறாப்புடன் அபிவிருத்தி செய்வதை விட நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம் என்பவற்றின் ஊடாக இனத்துவ ஒற்றுமையின் கீழ் சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்புவதே சாத்தியமானதும் தேவையானதுமாகும்.
ஆகையால் மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் திட்டம் இலங்கையை புதிய தேசமாக மாற்ற வேண்டுமாயின் முதலில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக்காண வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajs1.html

Geen opmerkingen:

Een reactie posten