தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 december 2014

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களே தீர்மானிக்க வேண்டும்: ஆனந்தசங்கரி

ரிசாட் பதியுதீன் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானம்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 09:46.31 AM GMT ]
கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
சற்று முன்னர் ஆரம்பமான எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரிசாட் பதியுதின் பங்கேற்றுள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பதியுதின் தெரிவித்துள்ளார்.
அமைச்சருடன் அண்மையில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றில் இணைந்து கொண்ட அமீர் அலியும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதற்காக அண்மையில் ஏ.எச்.எம்.அஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 மாகாணசபை உறுப்பினர்களும் 69 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் ரிசாட்டுடன் எதிர்க்கட்சியில் இணைவு
7 மாகாணசபை உறுப்பினர்களும் 69 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் அமைச்சர் ரிசாட் பதியுதினுடன் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த உறுப்பினர்களே இவ்வாறு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
கொழும்பு மார்கஸ் வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.
மதவாதத்தை தூண்டும் தரப்பினருக்கு அரசாங்கம் தண்டனை விதிப்பதில்லை. தண்டனை விதிக்குமாறு கோரினாலும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை.
முஸ்லிம் சமூகத்தின் நலன்களை கருத்திற்கொண்டே ஆளும் கட்சியிலிருந்து விலகிää மைத்திரிபாலவை ஆதரிக்கின்றோம்.
மைத்திரிபால ஜனாதிபதியாக பதவி ஏற்றால் இணங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம் என ரிசாட் பதியுதின் தெரிவித்துள்ளார்.
 http://www.newstamilwin.com/show-RUmszCRWKajw4.html

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களே தீர்மானிக்க வேண்டும்: ஆனந்தசங்கரி
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 09:51.36 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு கூற வேண்டிய அவசியம் கிடையாதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பிலும் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பிலும் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துக் கருத்து தெரிவிக்கையிலேயே ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தேர்தலில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. இன்று வரையில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் மக்களுக்கு கூறவில்லை
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கூறுவோம். என தொடர்ந்தும் கூறுகின்றார்கள். அவ்வாறானால் எதிர்வரும் 23ம் திகதி தபால்மூல வாக்களிப்பினை செய்யவுள்ள மக்களுக்கு என்ன கூறப்போகின்றார்கள் என நான் கேட்க விரும்புகிறேன்.
மேலும் தற்போதுள்ள ஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியாது. அவர் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதுடன், நாட்டை ஒரு சர்வாதிகாரம் மிக்க ஆட்சிக்குள் கொண்டு சென்றிருக்கின்றார்.
இந்நிலையில் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அவ்வாறே வாக்களிக்கப் போவதானாலும் கூட நாங்கள் சொந்தபந்தங்களுடன் வாழ்ந்த வீட்டையும், எங்கள் பூர்வீக நிலத்தையும் அளப்பதற்கு வந்திருக்கும் ஒரு நில அளவையாளரையும், அதனை பொறுப்பேற்க வந்திருக்கும் ஒரு படைச்சிப்பாயினையும் கண்டதன் பின்பாகவே மக்கள் வாக்குச் சாவடிக்குச் செல்ல முடியும். அவ்வாறான மிக மோசமான நிலைமை இங்கே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே நான் நம்புகிறேன் மைத்திரியின் ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும் என அதற்கு இன்று மைத்திரியுடன் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, மற்றும் ஜக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் ஆகியோர் எமக்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். எனவே இதன் பின்னணி என்ன என்பதையே பார்க்க வேண்டும்.
அதனை விடுத்து நாங்கள் தீர்மானிக்கவில்லை. என்றும், இரு பகுதியினராலும் எமக்குப் பயனில்லை என்றும் கூறுவதில் எவ்விதமான அர்த்தமும் கிடையாது. என்பதுடன், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை கூட்டமைப்பு தீர்மானிக்க முடியாது என்றார்.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajw5.html

Geen opmerkingen:

Een reactie posten