சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் பணிபுரியும் வீட்டின் குளியலறையில் வைத்து இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த நாட்டுப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் வீட்டு உரிமையாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சவுதி ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எதுஎவ்வாறு இருப்பினும் இவர் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த சரியான தகவல் வெளியாகவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten