தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 december 2014

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 9வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு

வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரச்சினைகளை தீர்க்க சிலருக்கு விருப்பம் இல்லை: ஜீ.எல்.பீரிஸ்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 12:29.46 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிரணி வேட்பாளரின் அமைப்பில் பல்வேறு முரண்பட்ட கொள்கைகளை உடையவர்கள் இணைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சி, ஜாதிக ஹெல உறுமய போன்ற அடிப்படையில் கொள்கை முரண்பாடுகளை கொண்ட கட்சிகள் எதிரணியில் இணைந்துள்ளன.
எனவே இந்தக்கட்சிகளால் ஒரு பொது உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாது.
இந்தக்கட்சிகளால் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானவர்களின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்காது, களத்தில் கடந்த 5 வருடங்களில் மாற்றங்களை ஏற்படுத்திவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையின் தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை இன்று கொழும்பு 7, ஸ்டான்மோர் கிரசன்ட் ஒழுங்கையில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அமைச்சர் சந்தித்தார்.
வடக்கு கிழக்கின் இனப்பிரச்சினை, முஸ்லிம் மக்களின் பிரச்சினை, மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வைக் காண்பது முடியாதவிடயம் .
எனவே கிடைக்கின்ற தீர்வுகளை பெற்றுக்கொண்டு மேலதிக விடயங்களை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாகாணசபை முறையையும் தேச வழமை சட்டத்தையும் ஜாதிக ஹெல உறுமய எதிர்க்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தனியார் மயப்படுத்தல் திட்டத்துடன் ஜே.வி.பி முரண்படுகிறது.
இந்தநிலையில் எவ்வாறு எதிரணியால் இணைந்து செல்லமுடியும் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
அரசியல் கைதிகளின் விடுதலையை ஒரேயடியாக மேற்கொள்ள முடியாது.  அவர்களின் விடுதலை விடயம், கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
கிழக்கின் கரையோர மாவட்டம் உட்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை தொடர்பில் அந்தக்கட்சியுடன் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
வடக்குகிழக்கு மற்றும் மலையகத்தை பொறுத்தவரை சிலருக்கு பிரச்சினைகளை தீர்ப்பதில் விருப்பம் இல்லை என்றும் பீரிஸ் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahv0.html
வீதியால் சென்ற பெண்கள் மீது மோதிய வான்! ஒருவர் பலி
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 12:46.01 PM GMT ]
கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இந்தவிபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
தண்ணீர் அள்ளிக் கொண்டு வீதியால் சென்ற இரு பெண்கள் மீது வேகமாக வந்த ஹையேஸ் வான் மோதியுள்ளது.
இதனையடுத்து, குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவத்தில் கண்டி வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த சுதன் சுதா (வயது 35) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்தார்.
உலகேந்தியகரன் சுதர்சினி (வயது 20) என்ற இளம் பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வானை அடித்து நொறுக்கினர். ஹையேஸ் வானின் சாரதியைக் கைது செய்த கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்னர்.
வெள்ளத்தில் காணாமல்போன இளைஞன்! தேடுதல் தொடர்கிறது
நாவிதன்வெளிப் பிரதேசத்தினையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியினை கடக்க முற்பட்ட இரண்டு இளைஞர்களையும் வெள்ளநீர் அடித்துச் சென்றதில் ஒருவர் தப்பியுள்ளதுடன் மற்றைய இளைஞன் காணாமல்போயுள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்றைய தினம் குறித்த இளைஞர்கள் இருவரும் கிட்டங்கி வீதியினால் மோட்டார் சைக்கிளில் மண்டூர் பிரதேசத்திற்குச் செல்லும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதில் மோட்டார் சைக்கில் செலுத்திவந்த 24 வயதுடைய காக்காச்சிவட்டையினைச் சேர்ந்த யோகராசா என்ற இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிலில் வந்த 23 வயது இளைஞன் துரைவந்திய மேட்டுக்கிராமத்தில் நீந்தி கரைசேர்ந்து தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவரை தேடும் பணியில் கடல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  அதனடிப்படையில் இன்று மாலை 4.00 மணிக்கு அவர்கள் ஓட்டிச்சென்ற மோட்டர்
சைக்கிளை தேடி கண்டு பிடித்துள்ளார்கள்.
வெள்ளம் காரணமாக இந்த வீதியின் போக்குவரத்து கடந்த 5 நாட்களாக தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களின் தேவை கருதி கடற்படையினர் இயந்திரப்படகு சேவையை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahv1.html
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 9வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 01:54.39 PM GMT ]
மட்டக்களப்பில் 2005ம் ஆண்டு மார்கழி மாதம் 25ம் திகதி கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 9வது ஆண்டு நினைவு தினம் இங்கு அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், சீ,யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், கோவிந்தன் கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார் உட்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு அருட்தந்தை மேரி அடிகளார் முதல் தீபச்சுடரை ஏற்றியதை தொடர்ந்து அதிதிகளால் தீபச்சுடர் ஏற்றப்பட்டதுடன் ஆத்மசாந்தி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவுகளும் பகிரப்பட்டன.
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!
மட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க நாள்
தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது.
தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்து வருகின்ற தெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.
அவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும்.
விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்
பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம்.
தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.
இன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள்.
ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.
கதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை? ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.
காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா?
ஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா?
குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா?
அந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா? இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும் உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும் என்பதே.
மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahv2.html

Geen opmerkingen:

Een reactie posten