திருடர்களின் தொல்லைகளில் இருந்து பெண்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் நோக்குடன் முன்னெச்சரிக்கையாக திருட்டுக்கள் இடம்பெறும் இடத்தைக் குறிப்பிட்டு யாழ்ப்பாணத்தில் திருடர்கள் கவனம் என்ற சுலோக அட்டைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மேற் படி வீதியால் செல்லும் பெண்கள் மிக அவதானத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் மத்திய சந்தைக்கு முன்பாகச் செல்லும் முத்துத்தம்பி வீதியில் குறிப்பிட்ட இடத்தில் சுலோக அட்டைகள் தொங்கவிட ப்பட்டுள்ளன.
மேற்படி வீதியில் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைந்துள்ள காணிப் பகுதியிலுள்ள இருபக்க வேலிகளும் சுமார் பத்து மீற்றர் நீளம் வரை புதர்கள் வளர்ந்து மறைவிடம் போல் காட்சியளிப்பதனால் இப்பகுதியில் ஏற்கனவே திருட்டுச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, ''கவனம் தாலிக்கொடி, சங்கிலி அறுக்குமிடம்'' என்று எழுதப்பட்ட சுலோக அட்டைகள் தொங்க விடப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBScKYju0.html
Geen opmerkingen:
Een reactie posten