தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 november 2014

இருளில் மூழ்கியது கொழும்பு! கடும் மழையினால் மின்சாரம் துண்டிப்பு

காலியாகப் போகும் அமைச்சர்களின் கூடாரம்: அதிர்ச்சியில் உறைந்துள்ள அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 12:04.09 PM GMT ]
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் 43 பேர் அளவில் எதிர்வரும் நாட்களில் ஆளுங்கட்சிக்கு குட்பை சொல்லத் தயாராக இருப்பதாக உளவுத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் வரவு அமைச்சர்களின் மனமாற்றத்துக்கு காரணமாக அமைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களும் ராஜபக்ஷவினரிடம் மட்டுமே குவிந்து கிடக்கும் நிலையில், தாம் பெயரளவுக்கு அமைச்சராக இருக்க நேர்ந்துள்ளதாக அமைச்சர்கள் சிலர் தற்போது வெளிப்படையாகவே கருத்துத் தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவாக பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைந்து கொள்ள அமைச்சர்கள் பலர் முடிவு செய்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் ஜனாதிபதி தரப்பு சற்று ஆடிப்போயுள்ளது. அமைச்சர்களின் கட்சி தாவலை தடுக்க ஜனாதிபதி தற்போது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக சந்தேக பட்டியலில் இருக்கும் அமைச்சர்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மூலம் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு வருகின்றது. மேலும் ஒரு சில அமைச்சர்களை அலரி மாளிகைக்கு வரவழைத்தும், வேறு சிலரை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்றும் ஜனாதிபதி தரப்பினர் அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும் உரிய நேரம் வரும்போது அமைச்சர்கள் கட்சி தாவும் முடிவில் தீர்க்கமாக இருப்பதுடன், ஹெல உறுமய, சோபித தேரர் ஆகிய தரப்பினருடனான தொடர்புகளையும் துண்டித்துள்ளனர். இவர்கள் ஆளுங்கட்சிக்கு மறைமுக ஆதரவுடன் நாடகமொன்றை மேடையேற்றிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர்களில் பலர் விமர்சித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlsz.html
இருளில் மூழ்கியது கொழும்பு! கடும் மழையினால் மின்சாரம் துண்டிப்பு
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 12:53.08 PM GMT ]
கொழும்பு மாநகரப் பகுதியில் கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரின் பெரும்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.
கொழும்பு நகரப் பகுதியில் இன்று மாலை நேரம் சற்றும் எதிர்பாராத வகையில் கடுமையான மழை கொட்டத் தொடங்கியுள்ளது. நகரின் பெரும்பாலான பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணமாக கொழும்பு நகரின் பெரும்பகுதி தற்போது இருளில் மூழ்கியுள்ளது.
நகரைச் சூழ்ந்துள்ள இருள் மற்றும் வெள்ளம் என்பவற்றுக்கிடையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருப்பதால் அலுவலகங்களை விட்டு வீடு திரும்புவதற்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடும் அவதியை எதிர்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYls6.html

Geen opmerkingen:

Een reactie posten