[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 04:42.12 AM GMT ]
இதில் தொழில்நுட்ப ஆய்வு அமைச்சின் நிதி ஒதுக்கீடு குறித்தும் விவாதம் செய்யப்பட உள்ளது.
இந்த அமைச்சிற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது பதவியை நேற்று ராஜினாமா செய்திருந்தார்.
இதன் காரணமாக துறைசார் அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் ஒருவரது பிரசன்னமின்றி தொழில்நுட்ப ஆய்வு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதம் நடத்தப்பட உள்ளது.
பெரும்பாலும் இன்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அமர்வுகளில் பங்கேற்க மாட்டார் எனத்தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த துறைக்கான சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் பதவி வகிப்பதாகவும் விவாதத்தில அவர் பங்கேற்பார் எனவும் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நேற்று பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYio5.html
சிரேஸ்ட அமைச்சர்கள் உதாசீனம் செய்யப்படுகின்றனர்: சுனில் ஹந்துநெத்தி
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 05:18.37 AM GMT ]
வரவு செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிரேஸ்ட அமைச்சர்கள் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களை விடவும் தரம் தாழ்ந்த நிலையில் நடத்தப்படுகின்றனர்.
ஜனாதிபதியின் பயணச் செலவுகளுக்காக 2500 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் சிரேஸ்ட அமைச்சர்களுக்கு 500 மில்லியன் ரூபா ரூபா நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிரேஸ்ட அமைச்சர்களின் அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்ற செயற்குழுக்களை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYio6.html
மு.கா. - தமிழ்க் கூட்டமைப்புடன் எதிரணியினர் செய்த உடன்படிக்கை என்ன? வெளியிடுங்கள்!- பொதுபலசேனா
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 05:24.02 AM GMT ]
கொழும்பில் கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்;
ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அரச தரப்பை சார்ந்த சிலரும் எதிர்க்கட்சியை சார்ந்தவர்களும் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சதிகாரர்களுக்கு துணை போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனும் முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். சில நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு உடன்படிக்கைகளையும் செய்து கொண்டுள்ளனர்.
எனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் என்ன? நிபந்தனைகள் என்ன? செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் என்ன? என்பது தொடர்பில் நாட்டுக்கும் மக்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும்.
இந்நாட்டின் தலைவர்கள் யாரென்பதை சிறுபான்மையின அரசியல் கட்சிகள் தீர்மானிக்கும் காலம் மலையேறி விட்டது. இனி ஒருபோதும் அதற்கு இடமளிக்கமாட்டோம்.
இந்நாட்டின் தலைவரை தீர்மானிக்கும் சக்தியாக பொதுபலசேனா உருவாகி விட்டது. சிங்கள பெளத்தர்களே இந்நாட்டை ஆள வேண்டும். அதனை நாமே தீர்மானிப்போம்.
எனவே அரச தரப்பினரும் எதிர்க்கட்சியினரும் நாட்டை காட்டிக்கொடுக்கும் சிங்கள பௌத்தர்களை காட்டிக்கொடுக்கும் வரலாற்றுத் தவறை செய்வதற்கு முன்வரக்கூடாது.
இங்கு பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேசிய தலைமைத்துவமே எமது இலக்காகும்.
சிங்கள பௌத்தர்களை யார் பாதுகாக்கின்றார்களோ அவர்களுக்கே எமது ஆதரவு.
அவ்வாறு இல்லாவிட்டால் எமது கையில் தேசிய வேட்பாளர் இருக்கிறார். தக்க தருணத்தில் களமிறக்குவோம்.
அதற்காக விசேடமாக அரசியல் குழுவொன்றை நியமித்துள்ளோம். எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சிக்கு இன்று தலைமைத்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தான் பொது வேட்பாளரை தேடி ஓடுகிறது. இவ்வாறு எதிர்க்கட்சியின் நிலை தொடர்ந்தால் விலாசம் இல்லாமல் போய்விடும்.
சிங்கள பௌத்தர்களின் உரிமைகள் பாதுகாப்பு பறிபோவதை எதிர்த்து கடந்த காலங்களில் நாம் போராடினோம்.
ஹலால் பிரச்சினை, வில்பத்துவில் காடுகள் அழிப்பு, காணிகள் பறிமுதல் ஷரிஆ வங்கிகள் என பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக குரல்கொடுத்தோம்.
ஆனால், இவை தொடர்பில் ஆளும் தரப்பினரோ, எதிர்த்தரப்பினரோ எவரும் குரல் கொடுக்கவில்லை மௌனம் சாதித்தனர்.
இன்று ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும். ஊழல் மோசடிகளை ஒழிக்க வேண்டும். குடும்ப அரசியலையே ஒழிக்க வேண்டும் என தேசிய பிரச்சினைகளை உதறித்தள்ளி விட்டு அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வழமையான அரசியல் விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.
யுத்த காலத்தில் பிரபாகரனைப் பார்த்துக் கொண்டு தேசிய பிரச்சினைகளை மறந்தோம். ஆனால், இன்று பிரபாகரன் இல்லை. எனவே, தேசிய பிரச்சினைகளுக்கு முதலிடம் கொடுப்போம்.
சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை இங்கு உருவாக்குவோம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
வேட்பாளரை நிறுத்த மூன்று அரசியல் கட்சிகளிடம் பேசும் பொதுபல சேனா
சிங்கள பௌத்த வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட மூன்று அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கிருலப்பனையில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தீர்மானிக்கும் கட்டியெழுப்பும் பலம் சிங்கள பௌத்தர்களிடம் உள்ளது. அதற்கான வாக்கு பலம் பொதுபல சேனாவிடம் இருக்கின்றது.
அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடாத பல சிங்கள, தமிழ், முஸ்லிம் அமைப்புகள் பொதுபல சேனாவுடன் கைகோர்த்துள்ளன.
பொதுபல சேனா அமைப்பிடம் இருக்கும் வேட்பாளர் யார் என்பது பற்றி தற்போது அறிவிக்க போவதில்லை. தேர்தல் நடைபெறும் திகதி வெளியிடப்பட்டதும் அவர் யார் என்பது பகிரங்கப்படுத்தப்படும்.
மேலும் நாட்டில் வலுவான எதிர்க்கட்சி ஒன்று தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் அந்த பணியை ஐக்கிய தேசியக் கட்சி செய்யும் என எதிர்பார்க்கின்றோம்.
மக்களை வெற்றியடைய செய்யும் அரசாங்கமோ, எதிர்க்கட்சியோ இன்னும் நாட்டில் உருவாகவில்லை எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYio7.html
Geen opmerkingen:
Een reactie posten