தமிழ் மண் விடுதலையடைய வேண்டும், தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்பதற்காய் தம் உயிர்களைத் தந்த மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்ததாய் புலம்பெயர் தேசத்தில் யேர்மனியில் இப் பிரதான நினைவுத்தூபி அமைகின்றது . தாயகத்தில் எமது மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டாலும் இன்றைய நிலையில் புலம்பெயர் தேசத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் மாவீரர்களின் நினைவாக நினைவுத்தூபி அமையும் என்பது நிச்சயம் . அதே போல் எந்த மண்ணுக்காக எமது மாவீரர்களும் மக்களும் தங்கள் உயிர்களை கொடுத்தார்களோ அந்த தமிழீழ தேசத்தில் மீண்டும் சுதந்திர காற்று வீசும் மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்படும்.
பல வேற்றின மக்கள் வந்து இதனைப் பார்வையிட்டும் செல்கிறார்கள். இது புலம்பெயர் தேசத்தில் உருவாகியுள்ள புது முயற்சி. இது பல ஐரோப்பிய நாடுகளுக்கும் விரைவில் பரவும்.
http://www.athirvu.com/newsdetail/1441.html
Geen opmerkingen:
Een reactie posten