[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 05:30.55 AM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ஷ இதற்கான அழுத்தங்களை கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வாலிப வயதில் நாமல் ராஜபக்ஷ காலடி எடுத்து வைத்த காலத்தில் அவரின் முதலாவது பெண்தோழியாக இருந்தவர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர.
எனினும் மஹிந்த ஜனாதிபதியானவுடன் தங்கள் அந்தஸ்திற்கு அவர் பொருந்தி வர மாட்டார் என்று ஷிரந்தி ராஜபக்ஷ ஹிருணிக்காவை விரட்டியடித்துவிட்டார்.
தனது தந்தை பாரத லக்ஷ்மணின் மறைவின் பின்னர் அரசியலுக்குள் குதித்த ஹிருணிக்கா, மாகாண சபை தேர்தலில் பெரும் எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றிருந்தார்.
அதன் பின் வந்த காலத்தில் அவருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் ஹரீன் பெர்னாண்டோவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உருவாகியிருந்தது.
எனினும் அண்மைக்காலமாக மீண்டும் நாமலின் பார்வை ஹிருணிக்கா பக்கம் திரும்பியுள்ளது.
பழைய கோபங்களை மறந்து ஹிருணிக்காவும் நாமலின் நில்பலகாய கூட்டங்களிலும் கலந்து கொள்கின்றார்.
இந்நிலையில் உதய கம்மன்பில ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறியதன் காரணமாக மேல் மாகாண சபையில் ஒரு அமைச்சு பதவி காலியாகியுள்ளது.
இதனை பெற்று கொள்வதற்கு ஹெக்டர் பெத்மகே உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் நாமல் ராஜபக்ஷவின் வற்புறுத்தல் காரணமாக குறித்த அமைச்சு பதவியை ஹிருணிக்காவுக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானிததுள்ளார்.
பெரும்பாலும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் அவர் மாகாண அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgv4.html
மூட்டை முடிச்சுகளை தயார் செய்யும் அமைச்சர் ஏக்கநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 06:34.32 AM GMT ]
நேற்று சனிக்கிழமை தொடக்கம் ஆரம்பித்துள்ள இந்த நடவடிக்கை விடுமுறை நாளான இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
தன்னுடைய தனிப்பட்ட கோப்புகள், தனிப்பட்ட முறையில் கிடைத்த பரிசுகள், முக்கிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் என்பவற்றை அமைச்சர் ஏக்கநாயக்க முன்னின்று தெரிவு செய்து அலுவலகத்தை விட்டும் அகற்றி கொண்டிருப்பதாக குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் அறிய கிடைத்துள்ளது.
இது தொடர்பான தகவல் அறிந்த ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரும், முக்கிய அமைச்சு ஒன்றின் செயலாளரும் அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்கவை தொடர்புகொள்ள பல தடவைகள் முயன்றும் அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த உயர்மட்ட அமைச்சர் தற்போது டீ.பி. ஏக்கநாயக்கவை நேரடியாக சந்திப்பதற்கு விரைந்து கொண்டிருப்பதாக குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgwy.html
Geen opmerkingen:
Een reactie posten