தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

தடை தகர்த்து மாவீரர்களை அஞ்சலிப்போம்! தமிழ்க் கூட்டமைப்பு சூளுரை

நாவாந்துறை மோதல்கள்! பொலிசார் மீதும் தாக்குதல்…..

நாவாந்துறை குழு மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இன்று யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இடம்பெற்ற மைலோ கிண்ண தொடரில் வெற்றியீட்டிய சென் .மேரிஸ் அணியினருக்கும் சென்.நீக்கிலஸ் அணியினருக்கும் இடையில் நேற்று முன்தினம் முதல் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் நாவாந்துறைப் பகுதி பதற்ற நிலையில் உள்ளது. பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு தொடர்ந்தும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சென்.மேரிஸ் அணியைச் சேர்ந்த ஒருவரை 10 பேர் கொண்ட குழுவினர் வைத்தீஸ்வரா சந்திப்பகுதியில் வைத்து அடித்துக் காயப்படுத்திவிட்டு அவரது துவிச்சக்கர வண்டியையும் பறித்துச் சென்றுள்ளனர்.
அதனையடுத்து விடயம் அறிந்த சென்.மேரிஸ் அணி சார்பானவர்கள் எதிரணி சென்.நீக்கிலஸ்அணியினர் பக்கம் கோபத்துடன் கற்கள் மற்றும் போத்தல்களை வீசிய வண்ணம் சென்று கொண்டிருந்தனர். அதன்போது பொலிஸார் ஒருவரும் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளார்.
எனினும் இரு அணியினரையும் சமாதானமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் சென்.நீக்கிலஸ் அணியினரைச் சந்தித்து யாழ்ப்பாணம் பிரதேச செயலகர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமையால் மோதல் வெடிக்கவில்லை. எனினும் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் நாவாந்துறை சந்தி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பதற்ற சூழலும் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை வைத்தீஸ்வரா பகுதியில் தன்னைத் தாக்கினர் என்று பொலிஸாரிடம் பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் சென்.நீக்கிலஸ் அணியைச் சார்ந்த நால்வர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இரண்டு அணிகளையும் சமாதானப்படுத்துவதில் பிரதேச செயலர் மற்றும் கிராம சேவையாளர் மற்றும் பொலிஸாரும் மும்முரமாக உள்ளனர். இன்றைய தினமே சென். மேரிஸ் அணியுடனும் பேசவுள்ளதாகவும் அவ்வாறு இரண்டு அணிகளும் சமாதானமாகினால் மட்டுமே கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாவது, இரண்டு அணிகளிலும் பிழைகள் உண்டு. இவ்வாறான மோதல்கள் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இவர்கள் இன்று மோதுவார்கள் பின்னர் சேர்ந்து விடுவார்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். எனினும் குறித்த பகுதியில் தொடர்ந்தும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.NavanthuraiNavanthurai-01
http://www.jvpnews.com/srilanka/88020.html

தடை தகர்த்து மாவீரர்களை அஞ்சலிப்போம்! தமிழ்க் கூட்டமைப்பு சூளுரை

“தமிழர் பிரச்சினையை உலக அரங்கிற்கு கொண்டுசென்றவர்கள் மாவீரர்கள். எனவே, எத்தடைவரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து இந்தத் தியாகிகளை நாம் நவம்பர் 27ஆம் திகதி அமைதியான வழியில் நினைவுகூர்ந்து – விளக்கேற்றி அஞ்சலிப்போம்” என்றும் கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது. மண் மீட்புப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மறவர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் நாளை 27ஆம் திகதி வியாழக்கிழமை உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இந்தத் தினத்தை இலங்கையில் எந்தவொரு இடத்திலும் நினைவுகூர்வதற்கு விடமாட்டோம் என்று இராணுவத்தினரும் பொலிஸாரும் அறிவித்துள்ளனர். “விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு.
மாவீரர் என்ற பெயரிலோ அல்லது வேறு பெயர்களிலோ, தீவிரவாதத்தை மகிமைப்படுத்துவதற்கு – பகிரங்கமாக நினைவுகூருவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். அத்தகைய நிகழ்வுகளை நாம் தடுத்துநிறுத்துவோம்” என்றும் இராணுவத்தினரும் பொலிஸாரும் மேலும் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இந்தத் தடை உத்தரவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு
செல்வம் அடைக்கலநாதன் “தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது பாரிய மனித உரிமை மீறலாகும். தமிழரின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்த உத்தம தியாகிகளை தீவிரவாதிகள் – பயங்கரவாதிகள் என்று அரசும் அதன் படைகளும் முத்திரை குத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
எத்தடைவரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து மரணித்த எமது உறவுகளுக்குத் தமிழர்களாகிய நாம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவோம்” என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். பா.அரியநேத்திரன்: “தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்து தமிழர் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி தமது இன்னுயிர்களைத் தாயக மண்ணுக்காக அர்ப்பணித்து தமிழர் பிரச்சினையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர்கள் மாவீரர்கள்.
எனவே, இந்தத் தியாகிகளை நாம் நவம்பர் 27ஆம் திகதி நினைவு கூர்ந்து விளக்கேற்றி அஞ்சலிப்போம். தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் நல்லாட்சியை ஏற்படுத்த அயராது போராடி தமது உயிர்களைத் துறந்த இந்த வீரமறவர்களை அவர்களின் உறவுகள் அமைதியான வழி யில் நினைவுகூருவதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதையடுத்து இவ்வா றான நிகழ்வுக்கு அரச படைகள் தடை விதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், மாவீரர்கள் உயிருடன் உள்ளவர்கள் அல்லர். அவர்கள் இறந்தவர்கள். இறந்தவர்களை நினைவு கூருவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு” – என்று தெரி வித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன்.
http://www.jvpnews.com/srilanka/88024.html

Geen opmerkingen:

Een reactie posten