தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 december 2014

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ஆபத்து உள்ளது!- வெளிவிவகார அமைச்சர்

விடுமுறையிலும் ஆசிரியர்கள், மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்த ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 03:06.34 AM GMT ]
பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 19ஆம் திகதி வரை கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சையும் நடைபெற்றது.
எனினும் இவற்றையெல்லாம் கருத்திற்கொள்ளாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரசாரத்துக்காக பெற்றோரும் மாணவர்களும் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டதாக ஆசிரியர் தொழிற்சங்கம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் இந்த நிகழ்வுகளை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சையில் இடம்பெற்ற இந்தக்காலக் கட்டத்தில் கம்பஹாவிலும் புத்தளத்திலும் அவசர அவசரமாக 6 மஹிந்தோதய நூலகங்கள் திறக்கப்பட்டன.
இதன்போது பாடசாலைகளுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு மஹிந்த ராஜபக்சவின் அபிவிருத்திகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஹம்பாந்தோட்டையிலும் மட்டக்களப்பிலும் 5 நூலகங்கள் திறக்கப்படவுள்ளன.எனினும் இவற்றை தேர்தல்கள் ஆணையாளர் கண்டுக்கொள்ளவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKair1.html
மனச்சாட்சிக்கு ஏற்ற வகையில் வாக்களிக்குமாறு ஹக்கீம் முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 02:51.42 AM GMT ]
மனச்சாட்சிக்கு ஏற்ற வகையில் வாக்களிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சியின் தபால் மூல வாக்காளர்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாத வகையில் வாக்களிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சி, முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை கருத்திற் கொண்டும், ஜனநாயக அடிப்படையிலும் வாக்களிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் ஊடாக அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதேவேளை,  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இதுவரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவு எதனையும் எடுக்கவில்லை.
பெரும்பாலும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRXKairz.html
அரசாங்கத்தின் அத்துமீறல்களை தடுக்க இயலாதவராக தேர்தல்கள் ஆணையாளர்!- அத்துரலியே ரத்ன தேரர்
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 02:47.04 AM GMT ]
அரசாங்க ஊடகங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை தடுப்பதில் இருந்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தவறியுள்ளார் என்று மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக்குழு தலைவர் அத்துரலியே ரத்ன தேரர் இந்தக் குற்றச்சாட்டை செய்தியாளர் சந்திப்பின் போது சுமத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுக்காக அரச சொத்துக்கள் வீணடிக்கப்படுகின்றன.
கட்டிடங்கள், வாகனங்கள் என்று பல்வேறு சொத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
படையினரும் பிரசாரப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஏற்கனவே படையினர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும் பொலிஸ் நிலையங்கள் அரசியல் அலுவலகங்களாக மாறியுள்ளன என்று தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதில் தேர்தல்கள் ஆணையாளர் இயலாதவராக உள்ளார் என்றும் தேரர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKairy.html
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ஆபத்து உள்ளது!- வெளிவிவகார அமைச்சர்
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 02:32.54 AM GMT ]
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடாவிட்டாலும், இலங்கைக்கு ஆபத்து உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிரணியின் பொதுவேட்பாளர், மைத்திரிபால சிறிசேன, போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு விளக்கம் கோரி வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆயுதப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்ற தனது நோக்கை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தூரநோக்குடனான பல விளைவுகளை உள்ளடக்கியதாகும்.
இந்த விசாரணையின் தன்மை பற்றி எதிரணி வேட்பாளர் விளக்க வேண்டும். இந்த விசாரணைக் குழுவின் அதிகாரங்கள், நோக்கம் குறித்து வெளிப்படுத்த வேண்டும்.
ஆயுதப் படையினரை விசாரணைக்கு அழைக்கும் அதிகாரம் பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும்.
இலங்கைக்கு எதிரான அனைத்துலக விசாரணையை அணுகும் விடயத்தில் முழுமையான, மாற்றமான ஓர் அணுகுமுறை கையாளப்படும் என்று எதிரணி தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சரணடையும் கோரிக்கைள் தொடர்பாகவும் எதிரணியின் வேட்பாளர் விளக்கமளிக்க வேண்டும்.
உலகளாவிய ரீதியில் இந்தக் கோரிக்கைகள் ஏற்கக் கூடியவை அல்ல என நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் அரபுலகம், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள நாடுகளின் பெரும்பாலான நாடுகளும் இந்த தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள நெருக்கடியான விடயங்களுக்கு ஆதரவு வழங்க மறுத்துள்ளன.
இந்த விடயத்தில் குறுகிய அரசியல் இலாபம் தேடும் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு தொடர்பாக அறியும் உரிமை நாட்டுக்கு உண்டு.
ரோம் பிரகடனத்தில்  இலங்கை கைச்சாத்திடாததால் எமக்கு ஆபத்து இல்லை என அவர் தவறான கருத்தைக் கொண்டுள்ளார்.
ஆனால், இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடாத நாடுகளும், பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன என்பது, அண்மைய அனுபவமாக உள்ளது என்றும் அமைச்சர் பீரிஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaiq7.html

Geen opmerkingen:

Een reactie posten