தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 december 2014

சிங்கள தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்க மீண்டுமொரு தேர்தல்!



சிங்களத்தின் தலைமைத்துவத்தை தேர்ந்தெடுப்பதற்கான மீண்டும் ஒரு தேர்தல் நடைபெற இருக்கிறது.இதில் தமிழர்கள் புளங்காகிதம் அடையவோ,புல்லரித்து வாகளிக்க கூடிய வேட்பாளர் யாரும் இல்லை என்பது தான் உண்மை நிலை.
மகிந்தவை எதிர்க்கிறோம் என்ற கோதாவில் மைத்திரியை ஆதரிப்பது என்பதை தான் தற்போது தமிழ் ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன. அதையொட்டியே செய்திகளை வெளியிட்டு வருவது போல் தெரிகிறது.
கருத்துக் கணிப்புக்களையும் செய்தும் மைத்திரிக்கு சாதகமான செய்திகளை பிரசுரித்தும் சிங்கள மக்களின் தலைமைத்துவத்தை தமிழ் மக்களைக் கொண்டு தெரிவு செய்ய வைக்க மட்டுமே முடியும்.
மகிந்த வந்தால் என்ன? மைத்திரி வந்தால் என்ன? தமிழ் மக்கள் நிலை மாறப்போவதில்லை. மகிந்த தமிழ் மக்களின் சிறந்த எதிரியாய் செயற்படுவார்.
மைத்திரி சிறந்த தந்திரக்காரனாக செயற்பட்டு தமிழ்மக்கள் மீது சர்வதேசம் தற்போது வைத்திருக்கும் அபிப்பிராயத்தை மாற்றுவார். நடக்க போவது இதுவே.
ரணில் என்ற குள்ளநரியின் தந்திரமான சமாதான கால செயற்பாட்டின் பின்னேயே தமிழர் தரப்பு பலமிழக்க தொடங்கியது என்பதை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.
ஒரு பலமிக்க இயக்கத்தை சமாதான காலத்தில் தான் சிதைக்க முடியும் அல்லது இல்லாதொழிக்க முடியும் என்பதை அச்சொட்டாக நிருபித்து காட்டியவர் ரணில்.
அந்த ரணிலின் மூளை தான் மைத்தியின் செய்றபாடாய் இருக்க போவது.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம் என்று ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும் சர்வ சாதாரணமாக கேட்கக்கூடிய வாக்குறுதி தான். ஏதோ இந்த தடவை தான் புதிதாய் கேட்பது போல யாவரும் புல்லரிப்பது உலக மகா நகைச்சுவை.
சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதால் தமிழருக்கு ஒன்றும் வந்துவிடப் போவதில்லை. அதை அவ்வளவு எளிதில் ஒழித்துவிடலாம் என்பதும் அரசியல் கற்றுக்குட்டித்தனம் என்பது மிகையாகாது.
அந்த பதவியை வகிக்க முன்,  பிரேமதாச,சந்திரிக்கா, ஏன் மகிந்த கூட அதை ஒழிப்பேன் என்று தான் கூறி பதவிக்கு வந்தனர்.
ஆனால் மேற்கூறிய எல்லோரும் தமிழரை கட்டுப்படுத்த அந்த பதவி முக்கியமானது என்று கூறி அதில் இருந்து இறங்க மறுத்தனர்.
தமிழரை அடக்க இனியும் இந்த பதவியும் அதற்கான காரணங்களும் இன்னும் உயிர்ப்புடன் சிங்களத்திற்கு இருக்கத்தான் செய்கிறது. அல்லது காரணங்களிற்கான நாடகங்கள் அரங்கேறப் போவதை பார்க்கத்தான் போகிறோம்.
நிறைவேற்று அதிகாரம் என்பது சிங்களவருக்கு எந்த பாதிப்பையும் இதுவரை ஏற்படுத்தியது கிடையாது. முழுப்பாதிப்பும் தமிழர் தலையிலேயே விடிந்தது தான் வரலாறு.
எது என்னவே...
இந்த தேர்தல் தமிழர் வாழ்வில் எதையும் செய்யப் போவதில்லை.மாறாக இன்னும் தமிழர் தரப்பை சிக்கலுகுள்ளாக்க தான் செய்யும்.
சர்வதேசம் அபிப்பிராயம் தமிழர்களுக்கு சாதகமாய் மாறி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்களம் சுதாகரித்துக்கொண்டு கண்டு பிடித்த உச்சாடனம் தான் பொது வேட்பாளர்.
மகிந்தவை அடுத்த தடவையும் ஆளவிட்டால் தமிழர் கை சர்வதச ரீதியாக ஓங்கும் என்பதை உய்த்தறிந்து கொண்டு சிங்களம் செயற்படுகிறது. அதனால் தான் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட சிங்களக் கட்சிகளின் கதாநாயகனாக மைத்திரி காணப்படுகிறார்.
மைத்திரியின் வாக்குறுதிகள் எவையும் தமிழர் பிரச்சினையை மையப்படுத்தவில்லை.ஆனால் போர்குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்க போவதில்லை என்பதை எந்த ஒளிவுமறைவுமின்றி சொல்லிவிட்டார்.
அத்தோடு மகிந்தவையோ, இராணுவத்தைபோ காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்பதையும் சொல்லிவிட்டார்.
இவ்வளவும் சொன்னபின் எந்த முகத்தோடு தமிழர்கள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை தமிழ் கட்சிகளோ, சர்வதேசமோ கோரப்போகிறது?
http://www.tamilwin.com/show-RUmszCRXKair2.html

Geen opmerkingen:

Een reactie posten