[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 02:09.23 AM GMT ]
இலங்கையில் நடக்கின்ற தேர்தல் பிரசாரங்களில் வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச தற்போது இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.
மக்கள் ஏமாந்த காலம் எல்லாம் போய் விட்டது, இலங்கை மூவின மக்களும் தற்போது குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கின்றரர்கள். அதன் காரணமாகவே இன்று அமைசர்கள் எனக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
மக்கள் பணத்தை இதுபோன்ற காரியங்களுக்கு பாவிக்காமல் அந்த மக்களுக்கு கொடுத்திருந்தால் தற்போது இது போன்ற காரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்காது.
தனது குடும்பமே இன்று எதிராக நிற்கின்றமை யாவரும் அறிவோம், மக்கள் பணத்தை அதிகம் செலவு செய்த ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மட்டும்தான் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaiq6.html
மஹிந்தவின் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 01:20.18 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் இன்று ஆரம்பமாகும் நிலையில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.
எனவே அரசாங்க கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே அஞ்சல் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்கவுள்ளனர்.
இந்த விஞ்ஞாபனம் இன்று முற்பகல் 9 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் வைத்து வெளியிடப்படவுள்ளது.
ஏற்கனவே இந்த விஞ்ஞாபனம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26ம் திகதியே வெளியிடப்படும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேனவின் விஞ்ஞாபனம் கடந்த 19ம் திகதியன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaiq5.html
தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 01:05.08 AM GMT ]
நாட்டின் பல அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஐந்து லட்சத்து நாற்பத்து ஓராயிரத்து நாநூற்று முபத்துரெண்டு பேர் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.
இன்றும் நாளையும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
இந்தக் காலப்பகுதியில் எந்தவிதமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சுயாதீனமான முறையில் வாக்களிக்க முடியும் எனவும் சீ.சீ.ரீ.வி கமராக்கள் அல்லது வேறும் வீடியோ கமராக்களின் மூலம் யாருக்கு வாக்களிக்கின்றார்கள் என்பது பற்றி கண்காணிக்கப்படக் கூடாது எனவும், அவ்வாறு கண்காணிக்கப்பட முடியாத இடத்திலிருந்து வாக்களிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaiq4.html
திஸ்ஸ அத்தநாயக்கவின் இரகசிய உடன்படிக்கை குற்றச்சாட்டு பொய்யானது!– ரவி கருணாநாயக்க
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 12:10.34 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனூடாக வடக்கின் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதுடன், படையினர் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படுவார்கள் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று தெரிவித்திருந்தார்.
எனினும் இரகசிய உடன்படிக்கை பற்றி திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட தகவல்கள் முற்றிலும் பொய்யானது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோல்வியை ஜனாதிபதி மஹிந்தவினால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஜனாதிபதியின் சார்பில் திஸ்ஸ அத்தநாயக்க மிகவும் இழிவான அரசியலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படையும் அற்றவை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaiq2.html
Geen opmerkingen:
Een reactie posten