நாட்டு மக்களே போதைவஸ்துக்காரர்கள் தொடர்பில் அறிந்து வைத்திருக்கையில், அதனைப் பற்றி அறியாதிருக்க நாமல் சின்ன குழந்தையா? ( பேபியா?) என்று மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் போதைவஸ்து கடத்தல்காரர்கள் யார் என்று தெரியும். எனினும் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சவுக்கு மாத்திரம் அது தெரிந்திருக்கவில்லை.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,
தாம் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிந்த நிலையில் நாமல் ராஜபக்ச தம்மையும் தமது தாயாரையும் சந்தித்ததாக குறிப்பிட்டார்.
இதன்போது தமது தாயார் போதைவஸ்து கடத்தல்காரர்கள் யார் என்று நாமல் ராஜபக்சவிடம் கேட்டபோது அது தொடர்பில் தாம் அறி;ந்திருக்கவி;ல்லை என்று நாமல் குறிப்பிட்டதாக ஹிருனிக்கா தெரிவித்தார்.
நாட்டு மக்களே போதைவஸ்துக்காரர்கள் தொடர்பில் அறிந்து வைத்திருக்கையில், அதனைப் பற்றி அறியாதிருக்க நாமல் சின்ன குழந்தையா? ( பேபியா?) என்று ஹிருணிகா கேள்வி எழுப்பினார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaiq3.html
Geen opmerkingen:
Een reactie posten