தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 december 2014

திஸ்ஸ அத்தநாயக்க உடைத்த இரகசிய உடன்படிக்கை

ஜனாதிபதி மஹிந்தவுடன் இறுதித் தேனீர் அருந்துகிறார் ரவூப் ஹக்கீம்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 04:10.32 PM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை பெரும்பாலும் எடுத்துள்ளது.
இந்தநிலையில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அலரி மாளிகைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவர் ஜனாதிபதியுடன் இறுதி தேனீர் அருந்துவார் என்று கூறப்படுகிறது.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லி;ம் காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நாளை இறுதி அறிவிப்பை வெளியிடவுள்ளது.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்த தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்கத்தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாளை இறுதிமுடிவை அறிவிக்கும் நிலையில் அந்தக்கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன்படி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்;ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பர் என்று கூறப்படுகிறது.
எனினும் அரசாங்கத்தில் இருந்து விலகி பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டிய பாரிய அழுத்தத்துக்கு கட்சி தலைமை தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaip0.html
திஸ்ஸ அத்தநாயக்க உடைத்த இரகசிய உடன்படிக்கை
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 04:34.34 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கிய விதத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் இரகசிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க இன்று இந்த தகவலை ஊடகங்களிடம் வெளியிட்டார்.
எனினும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த உடன்படிக்கை தமக்கு காட்டப்படவில்லை என்று அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.
அதேநேரம் தற்போது அந்த இரகசிய உடன்படிக்கை எவ்வாறு தமக்கு கிடைத்தது என்றும் அத்தநாயக்க குறிப்பிடவில்லை.
இதற்கிடையில் இரகசிய உடன்படிக்கை என்று கூறி திஸ்ஸ அத்தநாயக்க காண்பித்த உடன்படிக்கையில் உள்ள கையொப்பங்கள், ரணில் மற்றும் மைத்திரிபாலவின் வழமையான கையொப்பங்கள் இல்லை என்று கொழும்பு செய்தி இணையம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaip3.html

Geen opmerkingen:

Een reactie posten