தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 december 2014

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின் பிரச்சினை குறித்து பேசினால் விபரீதமாக.......?

மகிந்த சிந்தனை வெளியீட்டு நிகழ்வை புறக்கணித்த ரத்னசிறி விக்ரமநாயக்க!
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 09:36.22 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட நிகழ்வில், மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க கலந்து கொள்ளவில்லை. 
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ‘மகிந்த சிந்தனை – முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை மகிந்த ராஜபக்ச வெளியிட்டு வைத்தார்.
இந்தநிகழ்வில் அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க பங்கேற்காதது, அவர் எதிரணிக்குத் தாவலாம் என்ற சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக அண்மைய நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் அவர் இதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மெளனம் காத்து வருகிறார்.
இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவின் தேர்தல்விஞ்ஞாபனம் வெளியீட்டு நிகழ்வில் ரத்னசிறி விக்கிரமநாயக்கவை அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும், தேடிய போதும், அவர் எங்குமே தென்படவில்லை.
இதையடுத்து. அவர், எதிரணியின் பக்கம் சாயலாம் என்ற ஊகங்கள் மேலும் வலுத்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், பண்டாரநாயக்க குடும்பத்தின் தீவிர விசுவாசியுமான ரத்னசிறி விக்ரமநாயக்க, அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் மீது அதிருப்தியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRXKait1.html
ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின் பிரச்சினை குறித்து பேசினால் விபரீதமாக.......?
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 10:06.29 AM GMT ]
கடந்த ஒருவார காலமாக ஜனாதிபதி தேர்தல் மிகவும் விருவிருப்பான பிரச்சாரங்களை கட்சி தாவல்கள் உணர்ச்சி வசப்பட பேசுகின்ற தன்மை யுத்த காலத்தில் உயிர் நீத்த தமிழ் உறவுகளின் ஆத்மாவையும் தேடி அதற்கான வியாக்கியானம் உரைக்கும் சிங்கள அடிப்படைவாதிகளின் பேச்சுக்களை....
....நாம் சற்று நிதானமாக ஆராய்ந்தால் இவர்கள் தமிழ் மக்கள் வாக்களித்தால் அரசுக்கு இல்லையேல் வாக்களிக்க கூடாது என்ற தோற்றமே மிகத் தெளிவாக காணப்படுகின்றது.
அதேவேளை எங்காவது யாராவது தமிழர் பிரச்சினைப் பற்றி பேசுகின்றர்களா என்பதையும் மிக கவனமாக நோக்கப்படுகின்றது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் கூட சிறுபான்மை குறிப்பாக தமிழனத்தின் எதிர்காலம் சம்பந்தமாகவோ எதுவும் எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை நாட்டை அபிவிருத்தி செய்கின்றேன் வெளிநாட்டு புலம் பெயர் தமிழர்களைப் பற்றியும்,மற்றும் விடுதலைப் புலிகளை அடித்து அழித்ததையுமே கூறுகின்றனர்.
அதன்மூலம் தமிழர்களைப் பற்றிய பேச்சுக்களை எதிரணி தொட்டால் கூட சிங்கள மக்களை தம் வசம் ஈர்த்துக்கொள்ளும் நடவடிக்கையாக மாறிவிட்டது.
பொதுவாக இந்த ஜனாதிபதி தேர்தல் சிங்கள மக்களுக்கு மாத்திரமே என்ற மாயையை நாம் பார்க்க கூடியதாக இருக்கின்றது இது சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளினால் நீண்ட நாட்களாக திட்டமிட்ட செயலாகவும் கருதலாம்.
அதன் காரணமாகவே இலங்கையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை மறைத்து அவர்கள் வாக்குகளை யாருக்கும் அளிக்காது விட்டால் அதன் மூலம் இலாபம் பெறும் முயற்சி மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது.
இது மலையக பகுதிகளுக்கு ஏற்றதாக இருக்கலாம் ஆனால் இம்மக்களை பயமுருத்தியோ அல்லது வேறு விதமாகவோ வசப்படுத்தலாம் என்ற காரணத்தினால் அங்குள்ள தலைமைகளின் சுய தேவைகளை பூர்த்தி செய்தால் போதும் என்ற எண்ணத்திலும் செயற்பாடுகள் நடைபெறுகின்றது. அவர்களுக்கு புதுவருட பரிசாக பல வரப்பிரசாதங்கள் வழங்கியும் வழங்கப்பட்டும் உள்ளது.
ஆனால் இந்த வாரத்தில் ஓர் அரசியல் சிறுபாண்மை தலைவர் வாக்களிப்பை புறக்கணிக்குமாறு வேண்டுகின்றார். இது தான் இந்த சிங்கள பேரினவாதிகளுக்கு வேண்டும் அதை நாம் நிறைவேற்றுவோம்மானால் அது அவர்களுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும்.
இவரின் கருத்தில் பல உண்மைகள் இருக்கின்ற போதும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றதாக நாம் எண்ணக்கூடாது.இதுவே வரலாற்றில் நாம் செய்யும் இரண்டாவது தவறாகவும் மாறலாம்.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை இரண்டு சிங்கள வேட்பாளர்களுக்கிடையே உள்ள போட்டி இதில் நமக்கு அக்கறை இல்லாது இருக்கலாம்.
ஆனால் இந்த இருவர் யார் என்பதே முக்கியம். 45 நாட்கள்முன் வரை ஒன்றாக திட்டமிட்டு செயற்பட்டு அதனை நியாயப்படுத்திக்கொண்டு முழு உலகத்தையும் ஏமாற்றியவர்கள் இவர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த பிளவை நாம் ஏன் சாதகமாக்க கூடாது என்றும் எண்ணவேண்டும்.
அது மட்டுமல்லாது நமது இனம்,உறவுகள்,என்று இழக்கவேண்டிய அத்தனையையும் இழந்துள்ளோம் இருப்பவர்கள் நாளாந்தம் இதைப்பற்றிய கவலையுடனேயே வாழ்கின்றோம் என்பது உண்மை.
இந்த நிலையில் உலக நாடுகள் நம் மீது அனுதாபத்துடனோ அல்லது அவர்களின் சுய இலாபத்திற்காகவோ இப்பொழுது அனுதாபத்தை காட்டுகின்றார்கள் இதுமட்டுமல்ல அவர்கள் முன்னாள் நாம் கூறுவது எல்லாம் சமாதானத்துடனும்,உரிமையுடனும் சமத்துவமான ஜனநாயக முறையிலான வாழ்வு இங்கே ஜனநாயகம் என்று கூறும் போது வாக்குரிமை மிக முக்கிய மானதாகும்.
ஆகவே நாம் வாக்களித்தாலும் அளிக்காவிட்டாலும் இருவரில் ஒருவர் வருவது நிச்சயம் ஏன் நாம் வாக்களித்து சர்வதேசத்திற்கு நாம் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் என்ற உண்மையை ஒருமுகமாக தெரிவித்தால் என்ன?
அது நமது பிரச்சினைக்களுக்கு சாதகமான வழியை வலுப்படுத்தலாம் அதேவேளை நாம் பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவே உலகத்திற்கு காட்டலாம்.
நாம் போட மறுக்கும் வாக்கை அவர்களே போட்டுக்கொண்டால் என்ன செய்வது. எனவே நாம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைபாட்டை எடுப்போம் அதே நேரம் கடந்த வார சிங்கள அடிப்படைவாத அரசியல் தலைவர்களின் எண்ணத்தை அழிப்போம் அவர்களுக்கு முன் நாம் நமது பிரிச்சினையை உலகிற்கு காட்டுவதற்காக 90 வீதத்தில் மேல் வாக்களித்து உலக நாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருப்போம்,ஆனால் யாருக்கு வாக்களிப்பது என்ற எண்ணத்தை மக்கள் தீர்மானத்தின் படி தமிழ் தலைவர்களை நடந்துகொள்ள தூண்டுவோம்.
நமது அமைதியான ஜனநாயக தீர்மானம் இலங்கை அரசியல் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளின் நிலையை தீர்மானத்தை சிதறடிக்கவேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுதாக்கலின் பின் பலர் அங்கும் இங்கும் ஆதரவை தெரிவித்து வந்தாலும் இதன் தாக்கம் மக்கள் மத்தியில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக எம்மால் அறியமுடியவில்லை.சாதாரண பொது மக்கள் தங்களின் அன்றாட கடமைகளிலேயே காலத்தை கடத்துகின்றார்கள்.
காலநிலை மிக மோசமாக இருகின்ற காரணத்தால் மக்களை கூட்டமாக சந்திக்கமுடியாத நிலை அதிகமாக காணப்படுகின்றது.எனினும் இரண்டு வேட்பாளர்களைப் பற்றிய செய்திகளையும் கூட்டங்களையுமே காணக்கூடியதாக இருக்கின்றது.மிகுதி 17 வேட்பாளர்கள் யார் என்றுக்கூட தெரியபடுத்த அவர்களால் முடியாது உள்ளது.
அரசு தனது பணபலம், அதிகாரம் மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஏற்பாடு செய்துள்ள சகல வளங்களும் முழுமையான பலத்தையும் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றது.
அரசு எத்தனை கோடி பணத்தை அள்ளி வீசி பிரசாரத்தை மேற்கொண்ட போதிலும் ஜனாதிபதி அவர்கள் தனது கருத்துக்களை முன்வைக்கின்ற போதும் அதை விட மக்கள் எதிரணி வேட்பாளர் என்ன சொல்கின்றார் என்பதை அறியவே ஆவல் கொண்டுள்ளார். அதனால் அரசின் கோடிக்கணக்கான ரூபாய் விளம்பரங்களும் மைத்தரிபால சிறிசேனவிற்கு சாதகமாகவே இருக்கின்றது என கருதக்கூடிய நிலையே இன்றுவரை உள்ளது.
இதில் பயன் அடையப்போவது மகிந்தவா? மைத்திரியா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் ஏன் என்றால் மக்கள் நாம் முன்பு குறிப்பிட்டது போல் குறிப்பாக சிறுபான்மையினரும் பெரும்பான்மை பொது மக்களும் அலட்டிக்கொள்ளாத நிலையையே காணக்கூடியதாகவுள்ளது.
ஆனால் அரசியல் தலைமைகளும் அவர்களின் அடியாட்களுமே தங்களின் தலைமைத்தவத்தின் தீர்மானத்தை மிக உயர்வாக நினைத்து ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள். இதன் மூலமே பல வன்முறைச் சம்பவங்களும் அங்காற்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
இதன் மூலம் அவர்கள் தங்கள் தலைமைகளின் அனுதாப ,ஆதரவை வசப்படும் செயலில் ஈடுப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள் இது வரும் வாரங்களில் மிக வேகமாக இருக்கப் போகின்றது எனலாம்.
இவ்வாறான செயல்கள் தேர்தல் சட்டத்திற்கு எதிராக இருக்கின்ற போதிலும் அதை தடுக்க உள்ளூர் தலைமைகளும் அல்லது மேலிடமும் தயாராக இல்லாத நிலை தோன்றியுள்ளது.  இதற்கு உதாரணமாக காலியில் எதிரணி ஏற்பாடு செய்த பிரசார மேடை தீவைத்து தாக்குதல் நடத்தியமை அதன் பின் சட்டத்தை அமுல்படுத்த திறன் அற்ற பொலிசாரால் அவர்களை நீதிமன்றத்திற்கு கூட தங்களின் வாகனங்களில் ஏற்றி செல்ல முடியாத துர்பாக்கிய நிலை சட்டம், சீர்குலைந்துள்ளதாக கோடிட்டு காட்டும் சம்பவமாகியுள்ளதை குறிப்பிடலாம்.
அதேபோல் வடகிழக்கு மாகாணங்களில் அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களுக்கு பிறமாவட்ட மக்களை கொண்டு சென்று கூட்டங்கள் நடாத்தப்படுவதும் அதற்கான செலவு தொகையை எவ்வாறு ஈடுசெய்ய போகின்றார்கள் என்ற கேள்வியும் மக்கள் பணத்தை இவ்வாறு வீண் செய்வதை ஊடகங்களும் இணையத்தளங்களும் உடனுக்குடன் வெளிப்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
மகிந்த மைத்திரி ,ஆகிய இருவருமே சிறுபான்மை மக்கள் முன் ஒன்றே என்ற நிலையில் மக்கள் மத்தியில் இருந்தாலும் ஆண்டு பார்த்தவரை விட ஆளவருபவரை பார்ப்போமே என்ன செய்வார் என்ற மாறுதலை மக்கள் நினைக்கிள்றார்கள் என்பது பொதுவான கருத்தாக இருக்கின்றது.
நடக்கின்றது தீமையானலும் நடப்பது நல்லதாக இருக்கவேண்டும் என்பது சிறுபான்மை பொது மக்களின் வேண்டுகோள் ஆனால் நடக்கப்போவது சிறுபான்மை தலைவர்களின் சுயநலமாக இருக்குமா? அல்லது சிறுபான்மை மக்களின் உரிமைகளா?இது பொதுவான விடயமாக இருந்தாலும் புதுவருட பரிசாக கிடைக்கப்போவது சிறுபான்மை தலைவர்களின் சுயநல கிருஸ்மஸ் பரிசாகலாம் என நாம் நினைக்கின்றோம்.
ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள தடை ஏன்?இது தான் எதிர்கால இளம் தமிழ் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினை.?நடந்தது படுமோசமாக இருந்தாலும் நடக்கப் போவது நல்லதாக இருக்க முழு தமிழ் இனமும் இந்த வேளையிலாவது ஒன்றுபடுமா? இது தான் எதிர்கால தமிழ் இனத்தின் வேண்டுகோள் ஆகவேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKait2.html

Geen opmerkingen:

Een reactie posten