தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 december 2014

100 isis தீவிரவாதிகள் சுட்டுப்படுகொலை!

4450
உலகத்தை படுகொலைகளால் பதற வைத்துக் கொண்டிருக்கும் படுபாதகர்களான ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்குடன் போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிரியாவிலிருந்து தப்பித்து வேறு நாடுகளுக்கு செல்ல முற்பட்ட 100 ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஈராக், சிரியா ஆகிய நாடு களில் ஷியா பிரிவு அரசு களை எதிர்த்து சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தவிர வாதிகள் சண்டையிட்டு வருகின்றனர்.
முக்கிய வெற்றிகளைப் பெற்ற நிலையில், அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து நடத்திய வான்தாக்குதல்கள், அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.
இதன் காரணமாக மேற் கொண்டு முன்னேற முடியாமல் அந்த இயக்கத்தினர் தத்தளித்து வருகின்றனர்.
இது அந்த இயக்கத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கு மனத்தளர்வையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
100 தீவிரவாதிகள் கொலை
இந்த நிலையில், சிரியா வில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த ரக்கா நகரில் உள்ள தளத் தில் இருந்து தப்பி, தங்கள் நாடுகளுக்கு ஓட தயாரான 100 ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்த இயக்கத்தினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் நிர்வாகத்துக்கும் எதிரான ஒருவ ர் உறுதி செய்தார்.
கைதும் செய்யப்படுகின்றனர்
இது தொடர்பாக அவர் இங்கிலாந்தில் இருந்து வெளி வருகிற ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அந்த பேட் டியில் அவர், “ஐ.எஸ். ஐ.எஸ். தீவிர வாதிகளின் மன உறுதி குறைந்து விட்டது என்று கூற முடியாது.
அவர்களின் மன உறுதி, மண்ணோடு மண்ணாக விழுந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
உள் ர் போராளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் கடுமையாக உழைத்தும், உயிரிழந்து வருவதாக கருதுகின்றனர்.
வெளிநாட்டு போரா ளிகளைப் பொறுத்தமட்டில், சாகச செயல்களில் ஈடுபடுவதாக நினைத்தவர்களிடம், இப்போது அந்த உணர்வு வற்றிப்போய் விட்டது” என கூறி உள்ளார்.
ரக்காவில் உள்ள ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாதிகள் அந்த பத்திரிகை நிறுவனத்திடம் கூறும் போது, “ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுக்கு என்று பொலிஸ் படையை உருவாக்கி உள்ளனர்.
களத்துக்கு வராத ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அந்த பொலிஸ் படையினர் கண்டறிந்து பிடித்து வருகின்றனர்.
ஐ.எஸ். ஐ.எஸ்.போராளிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் சோதனை போட்டுள்ளனர். ஏராளமானவர்களை கைதும் செய்துள்ளனர்” என்றனர்.
இதுவரை 400 ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
உறுதியான தகவல்
ரக்காவில் 100 ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தியை ‘நியூஸ் 24’ செய்தி சனலும் வெளியிட்டுள்ளது.
அதில், ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், ஜனா திபதி பஷார் அல் ஆசாத்தின் நிர்வாகத்துக்கும் எதிரான நபர், ‘வெளிநாடுகளை சேர்ந்த ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிர வாதிகள் 100 பேர் சுட்டுக் கொல் லப்பட்டுள் ளதை தான் சோதித்து உறுதி செய்துள்ளதாகவும் தெரி வித்தார்.
http://lankan.info/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/100-isis-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/?utm_source=dlvr.it&utm_medium=facebook

Geen opmerkingen:

Een reactie posten