[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 11:39.30 AM GMT ]
தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தோல்வியடைந்து வரும் நிலையில் ராஜபக்ஷவுக்காக நீலப்படையணி அமைப்பால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றில் 2020 ஆம் ஆண்டில் நாட்டின் தனி நபர் வருமானம் 7.500 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இது வாக்காளர்களை முற்றாக தவறாக வழிநடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி என ஜே.வி.பியின் இணையத்தளம் கூறியுள்ளது.
ஒரு பில்லியன் ரூபா என்பது 100 கோடி ரூபா. அப்படியானால் குறித்த துண்டுப் பிரசுரத்தின்படி 2020 ஆம் ஆண்டில் இலங்கை தனிநபர் வருமானம் என்பது 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா.
அமெரிக்காவில் தனிநபர் வருமானம் 53 ஆயிரத்து 960 டொலர்கள். கனடாவில் தனிநபர் வருமானம் 42 ஆயிரத்து 610 டொலர்கள். சீனாவில் தனிநபர் வருமானம் 11 ஆயிரத்து 850 டொலர்கள்.
இவ்வாறான நிலையில், வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் கீழ்த்தரமான முயற்சியை நீலப்படையணி அமைப்பு மேற்கொண்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRWKajx2.html
வடமத்திய மாகாண எதிர்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு ஆதரவு
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 11:24.40 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKajx1.html
கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என மக்களாகிய நீங்கள் நினைக்கிறீர்கள் (நீங்களும் வாக்களிக்கலாம்)
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 11:09.33 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமாக களமிறக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரில் யாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என மக்களாகிய நீங்கள் நினைக்கிறீர்கள்.
வாக்களியுங்கள்
http://www.tamilwin.com/show-RUmszCRWKajx0.html
தம்பி பிரபாகரனுக்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன்! கௌதமனிடம் பாரதிராஜா
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 11:51.07 AM GMT ]
என் இனத்திற்கும் நான் பெரிதும் மதிக்கும் தம்பி பிரபாகரனுக்கும் ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன் என இயக்குனர் பாரதிராசா இலங்கை பயணம் பற்றி வ.கௌதமனிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குனர் கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு...
இயக்குனர் பாரதிராசா இலங்கை பயணம் பற்றி ஒரு விளக்கம்:
உலகமுழுக்க வாழ்ந்து கொண்டிருக்கும் என் உயிருக்கு நிகரான தமிழ் உறவுகளுக்கு வணக்கம். உங்கள் இயக்குனர் வ.கௌதமன்
உங்களை போலவே இயக்குனர். பாரதிராசா அவர்களின் இலங்கை பயணத்தை கண்டு நானும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் சொன்னது போல "தவறு யார் செய்தாலும் அது தவறு தான்".
இயக்குனர். பாரதிராசா அவர்களிடம் உடனடியாக நான் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பொது "இந்த வயதில் நான் சோரம் போவேனா" என்று பேச தொடங்கி, என் இனத்திற்கும் நான் பெரிதும் மதிக்கும் தம்பி பிரபாகரனுக்கும் ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன்.
நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அண்ணன் மாவை சோனாதிராஜா, தம்பி சி.சிறீதரன் இன்னும் பல மாகாணக் கட்டமைப்பின் பிரமுகர்களை சந்தித்தேன், அது போன்று வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களையும், அமைச்சர் ஐயங்கரன் நேசன் அவர்களையும் சந்தித்தேன்.
சம்மந்தமே இல்லாமல் நான் இருக்கும் இடத்தை தேடிவந்து டக்ளஸ் தேவானந்தா என்னை சந்தித்த போது விருப்பம் இல்லாமலேயே பேச நேர்ந்தது.
மீனவர் பிரச்சினை பற்றிப் பேச அரம்பதித்த உடனே அரசியல் இப்போது பேச வேண்டாமே என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர்களது ஆட்கள் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். ஒரு வழியாக அவரை பேசி அனுப்பிவிட்டு,
மற்றவர்களை சந்திப்பதற்குள் அவசர அவசரமாக டக்ளஸ் தேவானந்தா குழு எடுத்த புகைபடத்தை வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.
அது மட்டும் அல்ல, என்னை அழைத்தது லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தை பராமரிக்கும் மரியாதைக்குரிய கோபால் அவர்கள் தான். அவர்களை தவிர என் இனத்திற்கு எதிரானவர்களின் அழைப்பின் பேரில் நான் இலங்கைக்கு செல்லவில்லை.
என்னுடைய தாய் தமிழ்நாட்டின் மண்ணை மிதிப்பதற்குள் நான் உயிராய் நேசிக்கும் உலகமெங்கும் வாழும் என் தமிழ் உறவுகளிடம் இந்த பயணத்தை பற்றிய விளக்கத்தை சொல்லிவிட்டுத் தான் இலங்கை மண்ணில் இருந்து புறப்படுவேன், என் உயிரே போனாலும் சரி என்ற வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டார்.
முள்ளிவாய்க்கால் இனபடுக்கொலை நடந்த காலகட்டத்தில் இயக்குனர் பாரதிராசா - என் இனத்தை அழிக்க காரணமாய் இருந்த இந்திய அரசு கொடுத்த தேசிய விருதையும், பத்மபூசன் விருதையும் பல்லாயிர கணக்கான தமிழ் உறவுகளின் முன்னால் இரு கைகளிலும் ஏந்தி உடைக்கவா இல்லை திருப்பி இந்திய அரசிடமே அனுப்பவா என்று கேட்டவர்.
ஆகவே அவரை பற்றி தீர ஆராய்ந்து பார்க்காமல் விமர்சனம் செய்வதை சிறிது யோசித்து செய்யுங்கள் என்று என் தாய் தமிழ் உறவுகளிடம் தாழ்மையோடும், உரிமையுடனுடம் கேட்டுகொள்கிறோன்.
அதே நேரத்தில் தவறு நடந்திருந்தால் என் தாய்க்கும், தாய் மொழிக்கும் சமமான என்னுடைய தமிழீழ தேசிய தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் சொன்னது போல சமரசம் இல்லாமல் விமர்சனம் செய்வோம்.
இப்படிக்கு,
இயக்குனர்.
வ.கௌதமன்
இயக்குனர்.
வ.கௌதமன்
புழு கூட புலியானது ஈழத்தமிழ் மண்ணில்: யாழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா
தமிழர்கள் என்ற இனம் தனித்துவத்தோடு உலகமே வியந்து நின்ற அளவில் சாதனைகளைப் புரிந்திருக்கிறது. இப்பூமிப்பந்திலே உலகெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்ந்தாலும் ஈழத்திலே வாழ்கின்ற உத்தமர்கள் செய்த தியாகங்கள் விடுதலை வேண்டிய அர்ப்பணிப்பான பயணங்கள் கட்டுக்கோப்பான தலைமைத்துவத்தில் தலை நிமிரச் செய்த ஆட்சி முறை என்பவற்றால்தான் தமிழர்களை பற்றிய எண்ணத்தால் உலகத்தவர்கள் உவகை கொள்கிறார்கள் என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று யாழ் மாவட்ட கலைஞர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.
இவருடன் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத்துணைத்தூதுவராலயத்தின் தூதுவர் மூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா,பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் லண்டன் வோல்தம்ஸ்ரோவ் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கொடைவள்ளல் கோபாலகிருஸ்ணன், வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் ரில்கோ விடுதி உரிமையாளர் திலகர் எனப்பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா மேலும் தெரிவிக்கையில்
புழுகூட புலியான ஈழத்தமிழ் மண்ணில் என் பாதங்கள் படும் போது தமிழன் என்ற நிலையின் நான் பரவசமடைகிறேன்.
உலகத்தமிழருக்கு தமிழன் என்ற அடையாளத்தை தந்தவர்கள் ஈழத்தமிழர்கள்.
நீங்கள் கடந்து வந்த பாதைகளை, வாழ்ந்த வாழ்க்கை முறைகளை எண்ணிப்பார்க்கிற போது எங்கள் ஒவ்வொருவரின் இதயவேதனையை யாராலும் இலகுவில் மாற்றமுடியாது.
எதிர்ப்பு சக்தி இல்லாத எந்த உயிரினமும் இந்த உலகில் வாழமுடியாது என்பது கூர்ப்புக்கொள்கையாகும். புழு பூச்சி கூட எதிர்க்கும் ஆற்றலை பெறுகின்ற போதுதான் தன் வாழ்வியலை பெற்றுக்கொள்கிறது.
ஈழத்தமிழர்களும் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருந்தமையால்தான் தம் வாழ்வியலுரிமைக்காக யாரையும் எதிர்க்கும் சக்தியாக அவர்கள் உருவெடுத்தார்கள். எனவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKajx3.html
Geen opmerkingen:
Een reactie posten