[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:37.06 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் சூழல் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த தேர்தல் முறை காரணமாக நாட்டின் அரசியலுக்கு இழிவானதும் வெட்கமானதுமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனை மாற்ற விருப்பமா என்று நாங்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டோம். அதனை மாற்ற அவர் இணங்கினார்.
அரசியல்வாதிகள் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கலாசாரம் கொண்டு வரப்பட வேண்டும் மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை வழங்கினால், அதனை வெளிப்படை தன்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசியல் இப்படியானதாகவே இருக்கின்றது. இலங்கையை அந்த இடத்திற்கு கொண்டு செல்ல வில்லை என்றால் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajo7.html
ஜப்பானிய நிபுணரின் நியமனம் ஆணைக்குழுவை வலுப்படுத்துமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:41.15 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் பரபரப்புக்குள், இந்த செய்தி அவ்வளவாக ஊடகங்களில் எடுபட்டிருக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் கூட, தாம் இந்த விவகாரத்தில் கூடிய சிரத்தை எடுத்துக் கொள்வதாக, ஜப்பானிய நிபுணர் ஒருவரை நியமித்துள்ளதன் மூலம், வெளியுலகிற்குக் காட்டிக் கொள்ள முயன்றிருக்கிறது அரசாங்கம்.
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, பிரித்தானியாவைச் சேர்ந்த சேர் டெஸ்மன்ட் டி சில்வா தலைமையிலான சர்வதேச நிபுணர் குழுவொன்று கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவில், சேர் டெஸ்மன்ட் டி சில்வாவுடன், பிரித்தானியாவைச் சேர்ந்த சேர். ஜெப்ரி நைஸ், அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் கிரேன், இந்தியாவைச் சேர்ந்த அவ்டாஸ் கௌஷல், பாகிஸ்தானைச் சேர்ந்த அஹ்மர் பிலால் சூபி ஆகிய ஐந்து பேர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த சர்வதேச ஆலோசனைக் குழுவிலேயே ஆறாவது உறுப்பினரான ஜப்பானிய நிபுணரான மோட்டு நுகுசி (Motoo Noguchi) இணைக்கப்பட்டுள்ளார்.
மோட்டு நுகுசி, கம்போடியாவில் கெமர் ரூஜ் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக 2006ம் ஆண்டு தொடக்கம், 2012ம் ஆண்டு ஜூலை மாதம் வரை பணியாற்றியவர்.
ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் செயற்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவராகவும் இவர் இருந்தவர்.
ஜப்பானிய நீதிபதி மோட்டு நுகுசியை, வெளிநாட்டு ஆலோசனைக் குழுவுக்கு இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளது விருப்பின் பேரிலா அல்லது அழுத்தங்களின் பேரிலா என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
இலங்கையில், சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவு தெரிவிக்காத ஒரு நாடாக ஜப்பான் இருந்து வருகிறது.
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளை வலுப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு ஜப்பான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது.
இதன் அடிப்படையில் தான், ஜப்பானிய நிபுணர் ஒருவரை ஆலோசனைக் குழுவில் நியமிக்க இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.
ஐந்து வெளிநாட்டு நிபுணர்கள் ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்தே இந்த நியமனம் குறித்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஆனால், ஜப்பான் தரப்பில் இரண்டு நிபுணர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பல மாதங்களாகி விட்டன.
ஆனாலும், இழுத்தடித்தே இந்த நியமனத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது விருப்பத்தின் பேரில் வழங்கப்பட்ட நியமனமாக இருக்காது என்பதையே வெளிப்படுத்துகிறது.
இலங்கைக்கு பொருளாதார ரீதியாக ஆதரவளிக்கும் ஒரு நாடு என்ற வகையிலும், சர்வதேச ஆதரவை ஜப்பான் மூலம் பெற முடியும் என்பதாலும் தான், நீதிபதி மோட்டு நுகுசியை ஆலோசனைக் குழுவில் நியமிக்க அரசாங்கம் இணங்கியிருக்கிறது.
ஜப்பானைப் பொறுத்தவரையில், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை வலுப்பெறுவதை விரும்புகிறது.
அதற்கேற்ற வகையில், சர்வதேச தரம் வாய்ந்த ஒரு நிபுணரை நியமிக்க வேண்டுமென்ற வகையில் செயற்பட்டிருக்கிறது.
அதனால் தான், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய, கம்போடியாவில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்த சர்வதேச தீர்ப்பாயத்தில் பணியாற்றிய நீதிபதியைத் தெரிவு செய்திருக்கிறது ஜப்பான்.
ஆரம்பத்தில் மூன்று பிரித்தானிய, அமெரிக்க நிபுணர்களை அரசாங்கம் தன்னிச்சையாகவே ஆலோசனைக் குழுவுக்கு நியமித்திருந்தது.
அதற்கு அந்த நாடுகளிடம் இலங்கை அரசு ஆலோசனை கேட்கவோ, பெயர்களைப் பரிந்துரை செய்யுமாறு கோரவோ இல்லை.
அதையடுத்து, பாகிஸ்தான், இந்திய நிபுணர்களின் பெயர்களைத் தெரிவு செய்யும் போதும், இலங்கை அரசாங்கம் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களிடமிருந்து பரிந்துரைப் பட்டியல் எதையும் பெற்றிருக்கவில்லை.
ஆனால், இந்திய, பாகிஸ்தான் அரசாங்கங்களுடன், நியமனங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டிருந்தது.
என்றாலும், கடைசியாக நியமிக்கப்ப ட்ட ஜப்பானிய நிபுணரான மோட்டு நுகுசி விடயத்தில் அவ்வாறு நிகழ்ந்திருக்கவில்லை.
இவர் ஜப்பானிய அரசாங்கத்தினால், கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர். நேரடியாகவே ஜப்பானிய அரசின் தலையீடு இதில் இருந்தது.
ஜப்பானின் ஆதரவு தேவை என்பதால் இலங்கையும், உள்நாட்டுப் பொறிமுறை வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதால் ஜப்பானும், இந்த நியமன விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர நேர்ந்தது.
எவ்வாறாயினும், நீதிபதி மோட்டு நுகுசியை நியமித்த விடயத்தில், இலங்கை அரசாங்கம் அவ்வளவு திருப்தி கொள்ள முடியாது. ஏனென்றால், அவர் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த நீதிபதி.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமித்த ஏனைய நிபுணர்கள், ஒன்றில் மனித உரிமை ஆர்வலர்களாகவோ, சட்டப் பேராசிரியர்களாகவோ, அல்லது சர்வதேச சட்டங்களை அறிந்த சட்டத்தரணிகளாகவோ தான் இருந்திருக்கின்றனர்.
ஆனால், ஒரு சட்டப் பேராசியராகப் பணியாற்றும் அனுபவத்தையும், சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த அனுபவத்தையும் கொண்டவராக மோட்டு நுகுசி விளங்குகிறார்.
இந்த வகையில், ஏனைய ஐந்து நிபுணர்களையும் விட ஜப்பானிய நிபுணர் வலுவானவர் என்றே குறிப்பிடலாம்.
என்றாலும், ஏற்கனவே நியமிக்கப்பட்ட வெளிநாட்டு ஆலோசனைக் குழுவினர், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எந்தளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்ற கேள்வி உள்ளது.
அவர்களை ஜனாதிபதி ஆணைக்குழு தமது தேவைக்கேற்ப, விரும்பினால் பயன்படுத்த முடியும்.
ஜனாதிபதி ஆணைக்குழு அந்த நிபுணர்களை விசாரணைகளில் பங்கேற்று விடாமல் ஒதுக்கி வைத்து, தமக்கு ஏதேனும் சட்ட ஆலோசனைகள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறோம் என்று கூறி அனு ப்பி வைத்துவிட்டது.
ஆக, ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவினர், விசாரணைகளின் முன்னேற்றத்துக்கு காத்திரமான எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை.
நியாயமான முறையில் விசாரணைகள் இடம்பெறுகிறதா, அது எந்தளவுக்கு நம்பகமானதாக இடம்பெறுகிறது என்பதைப் பார்வையிடக் கூடிய சந்தர்ப்பங்களும் கூட அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.
இது ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விடயமாகவே இருந்து வருகிறது.
கடந்த வாரம் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்ட 12 பக்க அறிக்கை ஒன்றில், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
நம்பகமான விசாரணைகள் நடப்பது உறுதி செய்யப்படாவிட்டால் சர்வதேச விசாரணைகள் அவசியம் என்ற கருத்தை வலுப்படுத்தும் என்றும் அதில் கூறப்பட் டுள்ளது. ஆனால், அரசாங்கம் அதுபற்றி அக்கறை எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை.
காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 10 வீதம் கூட இன்னமும் சாட்சியம் பெறப்படவில்லை.
சாட்சிப் பதிவுக்காக, ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமர்வுகளை நடத்தும் போது, அழைக்கப்பட்டவர்களை விடவும் அதிகமாக புதிய முறைப்பாடுகள் தான் பதிவு செய்யப்படுகின்றன.
கடந்தவாரம் வவுனியாவில் நடந்த அமர்வில் 179 சாட்சிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் புதிதாக 328 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆக, காணாமற்போனோர் குறித்த முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்ற போதும், விசாரணைகளை துரிதப்படுத்தி, இந்தப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்கு போதிய நகர்வுகள் மேற்கொள்ளப்படவி ல்லை.
அதைவிட, நம்பகம் வாய்ந்தது என்று பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் நம்பக்கூடிய வகையிலும், ஆணைக்குழுவின் விசாரணைகளும் அணுகுமுறைகளும் அமைந்திருக்கவில்லை.
இத்தகைய நிலையில், சர்வதேச நிபுணர்களின் உதவியை பெற்றிருப்பதாக அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், அவர்கள் ஏனோ தானோ என்று தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிபுணத்துவ ஆலோசனை தேவைப்பட்டால் பெறமுடியும் என்ற அளவில் தான் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதுவிடயத்தில் இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷல் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜப்பானிய நிபுணரை அரசாங்கம் நியமித்துள்ளது.
இது ஜப்பானைத் திருப்திப்படுத்துவதற்கான நகர்வே தவிர, ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கான நகர்வாகக் கருதமுடியாது.
ஆனால், ஒரு விடயத்தை இலங்கை மறந்துவிட முடியாது.
ஜப்பானிய நீதிபதி மோட்டு நுகுசி சாதாரணமான ஒருவரல்ல.
அவர், தான் சர்வதேச அளவில் பணியாற்றிய எல்லாச் சந்தர்ப்பங்களிலும், அந்தப் பொறிமுறைகள் குறித்த எழுத்து மூலமான ஆவணங்களை வெளியிட்டு வருபவர்.
கம்போடிய போர்க்குற்ற விசாரணை குறித்தும், அனைத்துலக நீதிதிமன்றத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்தும் வேறு பல விடயங்கள் குறித்தும் அவர் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளவர்.
அவை, சர்வதேச பொறிமுறைகள் கட்டமைப்புகளின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன.
இலங்கை அரசாங்கம், வெறும் கறிவேப்பிலையாக அவரைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தால், அது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஏற்கனவே. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தும், விசாரணைக்கு உதவுவதற்காக, சில்வியா கார்ட் ரைட் என்ற நியுசிலாந்து நீதிபதி ஆலோசனை வழங்கும் நிபுணராக இருக்கிறார்.
அவரும் கம்போடிய தீர்ப்பாயத்தில் நீதிபதியாக பணியாற்றியவர்தான்.
அதற்குப் போட்டியாக, மோட்டு நுகுசி நியமிக்கப்பட்டாலும் கூட, இவரை எதற்காக நியமித்தோம் என்ற ஒரு காலத்தில் இலங்கை வருத்தப்படும் நிலை ஏற்படலாம்.
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmszCRVKajpy.html
திருகோணமலை விபத்தில் இருவர் பலி!
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:45.09 AM GMT ]
மூதூர் பச்சனூர் பிரதேசத்தின் 64 வது மைல் கல் பகுதிக்கு அருகில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் அதன் சாரதி பலியானார்.
பஸ்ஸில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்றகால நிலைய காரணமாக வீதியின் உராய்வு தன்மை குறைந்துள்ளதால்,பஸ் வழுக்கி சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதேவேளை உப்புவெளி பிரதேசத்தில் கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியாகியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajpz.html
சந்திரிக்காவும் மைத்திரியும் நேரடியாக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:45.57 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் 18 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இருவரும் நேரடியாக களத்தில் இறங்கி ஆளும் கட்சி முக்கியஸ்தர்களின் ஆதரவினை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக சில சிரேஸ்ட அமைச்சர்களை எதிர்க்கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் நேரடியாக தொலைபேசி மூலம் அழைப்புக்களை ஏற்படுத்தி அமைச்சர்களுடன் பேசி வருகின்றனர்.
முதலில் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து பின்னர் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த பலரை மீள இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சிலரை இரகசியமாக சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலருக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp0.html
மைத்திரிபாலவுக்கு எந்த தரப்பும் உச்ச ஆதரவை வழங்கவில்லை: எஸ்.பி.திஸாநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:50.13 AM GMT ]
கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி பாடுபட்ட வேலை செய்வதில்லை. ஜே.வி.பி அவருக்கு ஆதரவாக எதனையுமே செய்வதில்லை.
ஓரமாக இருந்து ஆதரவை வழங்கி வருகிறது. ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து சென்றவர்களில் இரண்டு பேரை தவிர ஏனைய அனைவரும் அரசாங்கத்திற்கு திரும்பினர்.
கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியது.
இம்முறை அந்த கட்சியினரும் பொது வேட்பாளருக்காக தேர்தல் பணிகளை செய்வதில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கின்றது. கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளருக்கு கடுமையாக உழைத்தது.
இம்முறை அவர்களும் இல்லை. இதனால், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக சந்திரிக்கா மாத்திரமே இருக்கின்றார்.
இதனால், பொன்சேகாவை விட மைத்திரிபால படுதோல்வியடைய நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp1.html
மக்கள் சக்தியை விடவும் பெரிய சக்தி எதுவும் கிடையாது: மைத்திரிபால சிறிசேன
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 07:08.48 AM GMT ]
அண்மையில் உடுநுவரெ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச அதிகாரம், பண பலம், குண்டர் கூட்டங்களின் அதிகாரம் போன்றவற்றைப் பயன்படுத்தி அரசாங்கம் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
எனினும், இந்த அனைத்து சக்திகளை விடவும் மக்கள் சக்தி வலுவானது என்பது எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி வெளிச்சமாகிவிடும்.
தற்போதைய அரசாங்கம் மாநாயக்க தேரர்கள், அரச அதிகாரிகள், அமைச்சர்கள் கூறும் அறிவுரைகளுக்கு செவி சாய்ப்பதில்லை.
வீட்டில் உள்ள சிறிய இளவரசர் கண்டியில் கார் பந்தயம் வைக்க வேண்டுமென தந்தையிடம் கோரியவுடன், மாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காது கண்டியில் கார் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
வடக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு அனைவரும் வரவேற்பை வெளியிட்டனர்.
ஆரம்பத்தில் ஒரு கிலோ மீற்றர் அமைப்பதற்கு 44 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது. இதனை அமைச்சர் டலஸ் அழப்பெரும முன்மொழிந்திருந்தார்.
எனினும் திட்டத்திலிருந்து அமைச்சர் அழப்பெருமவை நீக்கி புதிய திட்டமொன்று உருவாக்கப்பட்டது. அதற்கு அமைய ஒரு கிலோ மீற்றர் அமைக்க 340 மில்லியன் ரூபா செலவாகும் என அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு தரகுப் பணம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. சட்டம் நிலைநாட்டப்படும் என கூறும் அரசாங்கம் வீதி ஓரங்களில் பாரியளவில் கட் அவுட்களை வைத்துள்ளது.
இப்படி கட்அவுட் வைப்பது சட்டத்தை பாதுகாப்பதாக அமையுமா என மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp3.html
கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? அழுத்தம் கொடுக்கும் மேற்குலக நாடு?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 07:28.32 AM GMT ]
முக்கியமான மேற்குலக நாடொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது தொடர்பில் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொது வேட்பாளர் மைத்திரபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோரை கொழும்பில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசியமாக சந்தித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிநாடு செல்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென்ற நோக்கில் குறித்த மேற்குலக நாடு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கூட்டமைப்பிற்கும் பொது வேட்பாளருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை எதனையும் கைச்சாத்திடாது, நம்பிக்கை அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் ஏற்பாட்டை குறித்த மேற்குலக நாடு செய்துள்ளதாகவும், மேற்குலக நாடு மத்தியஸ்தம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இறுதி நேரத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த போதிலும், கீழ் மட்ட அளவில் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்குமாறு கோரப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொகுதி அமைப்பாளர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகை தெரித்துள்ளது.
இதன் ஓர் கட்டமாக அண்மையில் ஆலையடி வேம்பில் மாவை சேனாதிராஜ உள்ளிட்டவர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் கூட்டமொன்றை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp5.html
Geen opmerkingen:
Een reactie posten