தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 december 2014

முஸ்லிம் காங்கிரசுக்குள் பாரிய குழப்பம்?

அம்பாந்தோட்டை நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல்?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 08:32.51 AM GMT ]
அம்பாந்தோட்டை நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அயூப் கான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாந்தோட்டை நகரில் வீதி நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்த நாடகக் கலைஞர்கள் மீது அம்பாந்தோட்டை நகர சபைத் தலைவர் உள்ளிட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் வீதி நாடகக் கலைஞர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர். வீதி நாடகக் கலைஞர் ஜயதிலக்க பண்டாரவும் காயமடைந்துள்ளார்.
கலைஞர் பண்டார அம்பாந்தோட்டைக்கு வெளியே உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர்,
“பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்த போது நகரசபைத் தலைவர் எம்மைத் தாக்கினார். சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு 50 மீற்றர் தூரம் கூட இல்லை.
பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கிருந்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது நகரசபைத் தலைவர் எம்மீது தாக்குதல் நடத்தினார்” என நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கான் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp6.html
ஜனவரி 9ல் நடக்கப் போவது என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 08:33.56 AM GMT ]
அடுத்­த­ மாதம் நடக்­க­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச தோல்­வியைத் தழு­வினால் என்ன நடக்கும் என்­பது பற்­றிய விவா­தங்கள் இப்­போதே தொடங்கி விட்­டன. 
அர­சியல், ஊடக வட்­டா­ரங்­களில் மட்­டு மன்றி, தேர்தல் பிர­சார மேடை­க­ளிலும் இது­பற்றி சிலா­கிக்­கப்­ப­டு­கி­றது.
எதி­ர­ணியின் பொது­ வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­சார மேடை­களில், ஊழல் செய்­த­வர்கள் நாட்டை விட்டுத் தப்­பி­யோ­டாத வகையில், வரும் ஜன­வரி 8ம் திகதி நள்­ளி­ர­வுடன் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை மூடப் போவ­தாக கூறி­யி­ருந்தார்.
அத்­த­கைய கட்­டத்தில் இந்­தி­யாவோ அல்­லது வேறு நாடு­களோ, அவரைக் காப்­பாற்ற முனையக் கூடாது என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.
இன்­னொரு பக்­கத்தில் தாம் தோல்­வி­யுற்றால், சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் கொண்டு போய் நிறுத்­து­வ­தற்கு, புலம்­பெயர் தமி­ழர்­களும் புலி­களும், சர்­வ­தேச சக்­திகளும், மட்­டு­மன்றி உள்­ளூ­ரி­லுள்ள சிலரும் முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ள­தாக, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச மேடை மேடை­யாக கூறி வரு­கிறார்.
என்­றாலும், தாம் ஒரு போதும் நாட்டை விட்டு ஓடப் போவ­தில்லை என்றும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச பிர­சார மேடை­களில் நம்­பிக்­கை­யூட்ட முனை­கிறார்.
இறுக்­க­மான போட்­டி­யொன்று நில­வு­கின்ற சூழலில், யார் பக்கம் வெற்றிக் காற்று வீசும் என்று சரி­யாக உய்த்­து­ணர முடி­யாத ஒரு நிலை தான் இப்­போது உள்­ளது.
இந்­த­நி­லையில், எப்­போ­துமே வெற்­றியைப் பற்­றியே பேசி வந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச, தோல்வி குறித்தும், தோல்­விக்குப் பிந்­திய நிலை குறித்தும் பேச ஆரம்­பித்­தி­ருப்­பது முக்­கி­ய­மா­னது.
அதா­வது, தமது வெற்­றியின் மீது அவ­ருக்கு நூறு­வீத நம்­பிக்கை இல்லை என்­பதால் தான், எதி­ர­ணி­யி­னரின் பிர­சா­ரங்­க­ளுக்கு அவர் பதி­ல­ளிக்க வேண்­டிய நிலைக்குள் தள்­ளப்­பட்­டி­ருக்­கிறார்.
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச ஒரு வேளை, இந்த தேர்­தலில் தோல்­வியைத் தழு­வினால், அவர்,
*எதி­ர­ணி­யினர் கூறு­வது போன்று ஊழல் குற்­றச்­சாட்­டு­களைச் சந்­திக்க நேரி­டுமா? 
 *சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ர­ணைக்­காக கொண்டு செல்­லப்­படும் நிலை உரு­வா­குமா?
*தோல்­வி­யுற்­ற­வுடன், வெளி­நாட்­டுக்குத் தப்­பிச்­ செல்ல முனை­வாரா?
* ஆட்­சி­ய­தி­கா­ரத்தை சுமு­க­மாக ஒப்­ப­டைக்க முன்­வ­ரு­வாரா? இந்தக் கேள்­விகள் இப்­போது பர­வ­லா­கவே கேட்­கப்­ப­டு­கின்­றன.
மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை மூடி, ஊழல் செய்­த­வர்கள் தப்­பி­யோ­டாமல் தடுக்­கப்­படும் என்று கூறி­யது, பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
பொது­வா­கவே, நீண்­ட ­காலம் ஆட்­சியில் இருந்­த­வர்கள், தேர்தல் ஒன்றில் தோற்­க­டிக்­கப்­படும் போது, நாட்டை விட்டு இர­வோடு இர­வாகத் தப்­பி­யோ­டு­வது வழக்கம். அல்­லது இரா­ணு­வத்தின் துணை­யுடன், அதி­கா­ரத்தை இறுகப் பற்றிக் கொள்­வ­தற்கு முயற்­சிப்­பார்கள்.
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்­த­வ­ரையில், இர­வோடு இர­வாக நாட்டை விட்டு தப்­பிச்­ செல்லும் முடிவை எடுப்பார் என்று நம்­பு­வ­தற்­கில்லை.
ஏனென்றால், அவர் உள்­நாட்டில் இருந்து கொண்டு எத்­த­கைய நிலை­மை­க­ளையும் எதிர்­கொள்­வ­தற்கு அவ்­வ­ள­வாக அஞ்ச வேண்­டிய நிலை இல்லை.
சரத் பொன்­சே­காவைப் பிடித்து அடைத்­தது போன்று, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவை இர­வோடு இர­வாகப் பிடித்து சிறையில் போட முடி­யாது.
அதற்கு இந்­தியா போன்ற நாடுகள் அனு­ம­திக்க வாய்ப்­பில்லை.
அதே­வேளை, தோல்­வி­யுற்ற ஆட்­சி­யா­ளர்கள் எப்­போதும், இரா­ணு­வத்தின் துணை­யுடன் ஆட்­சியைத் தக்­க­ வைத்துக் கொள்ளும் முயற்­சியில் ஈடு­ப­டு­வது போல, இங்கு நிக­ழாது என்று கூறு­வ­தற்­கில்லை.
ஏனென்றால், முப்­ப­டை­க­ளி­னதும் முழு­மை­யான கட்­டுப்­பாடும், ஜனா­தி­ப­தி­யி­னதும், பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக்சவி­னதும் கட்­டுப்­பாட்டில் தான் இருக்­கின்­றன. இத்­த­கை­ய­தொரு நிலையில், எதி­ர­ணி­யி­னரின் எத்­த­கைய நகர்­வு­க­ளையும் தடுப்­ப­தற்கு, அவர்கள் படை­ப­லத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்ள முனை­வது ஆச்­ச­ரி­ய­மா­ன­தாக இருக்­காது.
தனது பத­விக்­காலம் முடி­வ­டைய முன்­னரே தேர்தல் நடத்­தப்­ப­டு­வதால், தோல்­வி­யுற்­றாலும் இன்னும் இரண்டு ஆண்­டுகள் பத­வியில் நீடிக்­கலாம் என்ற விவாதம் ஒன்று பல­மாக நடந்து கொண்­டி­ருக்­கின்ற பின்­ன­ணியில் இத்­த­கைய வாய்ப்­பு­களை நிரா­க­ரிக்க முடி­யாது.
ஆனால், ஜனா­தி­பதித் தேர்தல் ஒன்றில் வேட்­பாளர் ஒருவர் வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்ட மறு­க­ணமே, அவர் தான் நாட்டின் ஜனா­தி­பதி என்று அர­சி­ய­ல­மைப்பில் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ள­தாக, முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா, சட்­டத்­த­ரணி விஜே­தாச ராஜபக்ச போன்­ற­வர்கள் வாதி­டு­கின் ­றனர்.
வெற்­றி­பெற்ற 14 நாட்­க­ளுக்குள், புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்க வேண்டும் என்றும் அர­சி­ய­ல­மைப்பின் 31வது பிரிவில் கூறப்­பட்­டுள்­ள­தாக சரத் என் சில்வா கூறி­யி­ருக்­கிறார்.
எனவே பத­வியில் இருக்­கின்ற ஜனா­தி­பதி ஒருவர் தோல்­வி­யுற்­றாலும் கூட, எஞ்­சிய பத­விக்­காலம் வரை தானே பத­வியில் இருப்பேன் என்று அடம்­பி­டிக்க முடி­யாது.
ஆனால், இக்­கட்­டான சூழல் வரும் போது எல்­லோரும் சட்­டத்தை மதித்து நடந்து கொள்­வார்கள் என்று உறு­தி­யாக கூற­மு­டி­யாது.
என்ன நடக்கும் என்­பதை, வரும் ஜன­வரி 9ம் திகதி தான் உறு­தி­யாக கூற முடியும்.
அதே­வேளை, இந்த தேர்­தலில் ஏற்­படும் தோல்­வி­யா­னது ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவை சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு கொண்டு செல்லும் என்றும் எதிர்­பார்க்க முடி­யாது.
ஏனென்றால், மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் வெற்றி பெற்றால், மஹிந்த ராஜபக்சவையோ அவ­ரது குடும்­பத்­தி­ன­ரையோ, போரில் ஈடு­பட்ட படை­யி­ன­ரையோ சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு கொண்டு செல்ல விட­மாட்டேன் என்று ஆரம்­பத்­தி­லேயே உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.
அதை­விட, இலங்கை தொடர்­பான சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கப் போவ­தில்லை என்றும், உள்­நாட்டு பொறி­மு­றை­களின் மூலமே தீர்வு காணப்­ போ­வ­தா­கவும் அறி­வித்­தி­ருக்­கிறார் மைத்­தி­ரி­பால சிறி­சேன.
எனவே, அவர் வெற்றி பெற்றால் கூட, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவை சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு இழுத்துச் செல்ல ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டார்.
மேலும், எதி­ர­ணியில் உள்ள ஜாதிக ஹெல உறு­மய அத்­த­கை­ய­தொரு முடி­வுக்கு அனு­ம­திக்­கவும் மாட்­டாது.
ஜாதிக ஹெல உறு­ம­ய­வுக்கும், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடையில் செய்து கொள்­ளப்­பட்­டுள்ள புரிந்­து­ணர்வு உடன்­பாட்டில் இது­பற்­றிய ஒரு அம்­சமும் உள்­ளது.
எனவே, சர்­வ­தேச விசா­ரணை ஒன்­றுக்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கொண்டு செல்­லப்­ப­டு­வ­தற்கு, உள்­நாட்டில் சூழல்கள் ஏதும் உரு­வாக வாய்ப்­பில்லை.
அது­போ­லவே, அயல் நாடான இந்­தி­யாவும் கூட அத்­த­கைய முயற்­சி­களை தடுத்து நிறுத்­து­வ­தற்குத் தயங்­காது.
சர்­வ­தேச விசா­ரணை என்ற பேரில் இலங்­கையில் இருந்து எவ­ரை­யேனும், சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு கொண்டு செல்­வ­தற்கு இந்­தியா அனு­ம­திக்­காது என்றே கரு­தப்­ப­டு­கி­றது.
ஏனென்றால், காஷ்­மீரில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெ­று­வ­தான குற்­றச்­சாட்டை இந்­தியா எதிர்­கொள்­கி­றது.
எனவே, இலங்­கையில் இருந்து எவ­ரேனும் சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு கொண்டு, செல்­லப்­ப­டு­வதை இந்­தியா ஆத­ரிக்­காது, அனு­ம­திக்­காது.
ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு, சர்­வ­தேச நீதிமன்றத்துக்கு ஆட்சியாளர்களையோ, இராணுவ அதிகாரிகளையோ இழுத்துச் செல்வதற்கான வாசல்களை உடனடியாகத் திறக்கும் என்று எவரும் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
சர்வதேச நீதிமன்றத்துக்கு எவரையேனும் கொண்டு செல்வதென்பது ஒரு நீண்டகால செயல்முறையாக இருக்குமே தவிர, ஒரு தேர்தலின் முடிவு போன்ற குறுகிய கால நிகழ்வுகள் அதனைத் தீர்மானித்து விடாது.
தமக்கே வெற்றி என்று பிரசாரம் செய்யாமல், தோல்வியுற்றால் என்ன நிகழும் என்று எதிர்மறையாக பிரசாரம் செய்து அனுதாபம் தேடும் நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குத் தோன்றியுள்ளது.
அதனால் தான், தோல்வியின் பிந்திய நிலை குறித்து அரசியல் அரங்கிலும் பிரசார அரங்கிலும் அதிகளவு, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அரசதரப்பும் கூட இதனைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
சத்ரியன்
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp7.html
சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் தற்கொலை!
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 08:39.19 AM GMT ]
சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குளியலறையில் வைத்து அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குளியலறை கதவினை மூடிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வீட்டு எஜமானர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
2ம் இணைப்பு
சவுதியில் இலங்கை பெண் தற்கொலை
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கை பெண்ணொருவர் அவர் பணியாற்றிய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண் வீட்டில் உள்ள குளியலறையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குளியலறை கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால், வீட்டு எஜமான் கதவை தட்டியுள்ளார். உள்ளே இருந்து பதில் எதுவும் கிடைக்காத நிலையில், அவர் கதவை உடைத்து திறந்த போது பெண் இறந்து கிடந்துள்ளார்.
இலங்கை பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எந்த காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தாம் விசாரணை நடத்தி வருவதாகவும் சவூதி அரேபிய பொலிஸ் பேச்சாளர் கேர்ணல் சஹிட் அல் ருகாதி தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் வடபகுதி நகரான காப்ஜி பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajqy.html

முஸ்லிம் காங்கிரசுக்குள் பாரிய குழப்பம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 08:52.16 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படாமையால்  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறித்த தீர்மானத்தை வெளியிடுவதில் தாமதிப்பதாக கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
கட்சியின் ஒரு பகுதியினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மற்றொரு பகுதியினர் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும், கட்சியின் உயர் மட்டக்குழுவினரின் கலந்துரையாடலை மேற்கொள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் தினத்தை அறிவிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. 
இதனால் கட்சிக்குள் பாரிய மோதல் ஏற்பட்டுள்ளதாக  நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajqz.html

Geen opmerkingen:

Een reactie posten