தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 december 2014

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

மஹேல, சங்கக்கார மகிந்தவின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட மறுப்பு
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 07:09.10 AM GMT ]
இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோரை மகிந்தவின் தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அவர்கள் மறுப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரத்ன டில்ஷான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmszCRZKahs7.html
அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிழக்கிற்கு பிரசார பயணம்!
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 07:17.37 AM GMT ]
சமூகத்தின் விடுதலைக்காகவும், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அடிமைத்தனத்திலிருந்து சமூகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்; கிழக்கிற்கான பயணம் இன்று ஆரம்பமாகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிலிருந்து வெளியேறி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததன் பிற்பாடு தலைவர் ரிசாத் மேற்கொள்ளும் முதலாவது சமுக விடுதலைக்கான பிரச்சாரப் பயணம் இதுவாகும்.
இன்று (2014-12-25) காலை கொழும்பிலிருந்து புறப்பட்ட தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் முதலாவதாக காத்தான்குடிக்கு விஜயம் செய்கின்றார்.
கிழக்கு மாகாண சபையின் அ.இ.ம.கா உறுப்பினரும் பிரதியமைசசர் ஹிஸ்புல்லாஹ்வின் வலது கையுமான சிப்லி பாறுக் தலைமையில் இன்று காத்தான்குடி கூட்டம் இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 02 மணிக்கு காத்தான்குடியை சென்றடையும் தலைவர் ரிசாத் பதியுதீன் முதலில் கட்சிப்போராளிகளை சந்தித்து உiராடவுள்ளதுடன் அதனை தொடர்ந்து காத்தான்குடி மக்களை சந்திக்கவுள்ளார்.
இதன்பின்னர் பிற்பகல் 03.30 மணிக்கு ஏறாவூர் நகரைச் சென்றடையும் தலைவர் ரிசாத் பதியுதீனுக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் அ.இ.ம.கா உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் இவ்வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஏறாவூர் நகர மணிக்கூட்டுச் சந்தியிலிருந்து தலைவர் ரிசாத் வரவேற்கப்படவுள்ளார்.
இதன்பின் ஏறாவூரில் உள்ள கட்சிப் போராளிகளையும் பொதுமக்களையும் தலைவர் ரிசாத் பதியுதீன் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அ.இ.ம.காவின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியை கல்குடா தொகுதி மக்கள் ஒன்றுபட்டு வரவேற்கும் நிகழ்வில் தலைவர் ரிசாத் பதியுதீன் கலந்துகொள்ளும் பொருட்டு ஓட்டடாவடிக்கு பயணமாகின்றார்.
அதன் பின்னர் அங்கு இடம்பெறும் பொதுக் கூட்டத்திலும் ஊர்வலத்திலும் தலைவர் ரிசாத் பதியுதீன் கலந்;து கொண்டு உரையாற்றவுள்ளார்.
ரிசாத் பதியுதீனின் கிழக்கிற்கான இன்றைய பயணத்தின் இறுதிநிகழ்வாக கல்முனை நோக்கிச் செல்;லும் தலைவர் ரிசாத் பதியுதீன் அப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களை சந்தித்து உரையாடவுள்ளார்.
மாலை 07 மணிக்கு இடம்பெறவுள்ள இச்சந்திப்புக்கான ஏற்பாடுகளை கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மேற்கொண்டு வருகின்றார்.
இங்கு தலைவர் ரிசாத் பதியுதீனை பிரமாண்ட முறையில் வரவேற்க இளைஞர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய இந்நிகழ்வை அடுத்து கிழக்கில் மேலும் பல பகுதிகளுக்கும் தலைவர் ரிசாத் பதியுதீன் அடுத்தடுத்த தினங்களில் மக்களின் வேண்டுகோளை ஏற்று விஜயம் செய்யவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahty.html
பைஸர் முஸ்தபா நாளை தீர்மானத்தை அறிவிக்கவுள்ளார்!
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 07:28.14 AM GMT ]
இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாளை தமது இறுதி தீர்மானத்தை அறிவிக்கவுள்ளார்.
பொதுபலசேனா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தால் தாம் அவருக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று முஸ்தபா ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது பொதுபலசேனா மஹிந்த ராஜபக்சவுக்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக தெளிவான அறிவித்தலை விடுத்துள்ளது.
இந்தநிலையில் முஸ்தபா தமது முடிவை நாளை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முஸ்தபா 2010ஆம் ஆண்டில் கண்டியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
அத்துடன் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளராகவும் செயற்படுகிறார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahtz.html

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 07:35.56 AM GMT ]
மட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க நாள்
தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது.
தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்து வருகின்ற தெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.
அவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும்.
விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்
பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம்.
தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.
இன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள்.
ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.
கதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை? ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.
காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா?
ஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா?
குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா?
அந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா? இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும் உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும் என்பதே.
மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKaht0.html

Geen opmerkingen:

Een reactie posten