தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 augustus 2014

அமைச்சர் அதாவுல்லா, ரவூப் ஹக்கீம் போன்றவர்களுக்கு, மக்கள் நண்பன் ஒருவர் விடுக்கும் கார மிளகாய் சவால்!

ஐ.நா விசாரணைக்குழுவிற்கு சாட்சியமளிக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவில் காரியாலயம் திறப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 01:54.00 AM GMT ]
ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு சாட்சியங்களைத் திரட்டிக் கொடுக்கும் நோக்கில் புலம்பெயர் தமிழர்களினால் அவுஸ்திரேலியாவில் காரியாலயமொன்று திறக்கப்பட உள்ளது.
உலகத் தமிழர் பேரவையும்,  அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸும் இணைந்து இந்த காரியாலயத்தை அமைக்க உள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இவ்வாறு காரியாலயமொன்று அமைக்கப்பட உள்ளது.
விசாரணைகளுக்கு தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் இவ்வாறு, புலம்பெயர் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் காரியாலயமொன்றை அமைக்க உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த காரியாலயம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவநீதம்பிள்ளையின் குழு, இலங்கைக்கு எதிரான விசாரணைக்காக புதிய ஏற்பாடுகளை உள்வாங்குகிறது
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலுப்படுத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, விசாரணைகளுக்கு வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டவாக்கங்களையும் தமது முனைப்புடன் இணைத்துக்கொள்ளவுள்ளது
புதிய சட்ட இணைப்பின்படி விசாரணைக்குழு, தமது ஆதாரங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக “நம்பிக்கைக்குரிய நியாயமான தளம்” என்ற ஐக்கிய நாடுகளின் சட்டஅம்சத்தையும் தமது விசாரணையில் இணைக்கவுள்ளது
விசாரணையின் தரத்தை உயர்த்துவதற்காக சர்வதேச நீதிமன்ற விசாரணை ஒன்றுக்கும் ஐக்கிய நாடுகள் குழு கோரிக்கை விடுக்கலாம் என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று எதிர்வு கூறியுள்ளது
இதேவேளை புதிய சட்டவாக்க இணைப்பின்படி இலங்கையை தவிர்ந்த ஏனைய அரசாங்கங்கள், தமது விசாரணைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு எதிர்பார்க்கிறது.
இதற்காக 1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலக அதிகாரிகள் கொண்டுள்ள ராஜதந்திர அந்தஸ்தை பயன்படுத்திக்கொள்ள விசாரணைக்குழு எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு அனைத்து அரசாங்கங்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டியது கடமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfsy.html
வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யாமல் அரசியலை நடத்தும் கூட்டமைப்பு: கெஹலிய ரம்புக்வெல்ல
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 01:54.39 AM GMT ]
வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு, வட மாகாணசபை அக்கறை காட்டவில்லை என்று இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அபிவிருத்திக்கு பதிலாக வடக்கு மாகாணசபை, அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
13வது அரசியலமைப்பை தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமது அரசியலுக்காக பயன்படுத்துகிறது. ஏனைய மாகாணசபைகள் யாவும் பொலிஸ் அதிகாரங்கள் இன்றி இயங்கும் போது வடக்கு மாகாணசபை மாத்திரம் ஏன் அதனை வலியுறுத்தி வருகின்றது என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இந்திய பிரதமரை சந்தித்துள்ளமை தொடர்பிலேயே கருத்து வெளியிடும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகரசபை கட்டடம், கலசார மண்டப அமைப்புக்கு இந்தியா உதவி
யாழ்ப்பாண மாநகரசபைக்கான புதிய கட்டிடம் ஒன்றும் அதனையொட்டிய கலசார மண்டபம் ஒன்றும் இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரை அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இதன்படி மாநகரசபை கட்டித்துக்கு 780 மில்லியன் ரூபாய்களும் கலசார மண்டபத்துக்கு 1030 மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கலசார மண்படம் 12 மாடியில் அமையவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfsz.html

அமைச்சர் அதாவுல்லா, ரவூப் ஹக்கீம் போன்றவர்களுக்கு, மக்கள் நண்பன் ஒருவர் விடுக்கும் கார மிளகாய் சவால்!
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 02:04.39 AM GMT ]
ஐஸ் வாளி சவால் - Ice Bucket Challenge இனைப் போன்று மக்கள் நண்பனாகிய நான் அம்பாறை மாவட்ட ஒரு சில முக்கிய அரசியல்வாதிகளிடத்தில் ஒரு சவாலை விடுக்கின்றேன். அதுதான் Hot chilli challenge அதாவது மிகவும் காரமான 2 மிளகாய்களை சாப்பிடுவது.
ஐஸ் வாளி சவால் - Ice Bucket Challenge ஆனது நரம்பியல் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிக்கும் பொருட்டு ஒரு தொண்டு நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த ஐஸ் வாளி சவாலில் தண்ணீரை வீண்விரயம் செய்கிறார்கள் என்பதற்காக நான் அவ்வாறு அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக எனது சவாலை விடுக்கின்றேன்.
நான் இந்த சவாலினை உள்ளுராl;சி சபைகள் கௌரவ அமைச்சர் அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ உதுமாலெப்பை, கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஹரீஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் முஸ்லிம் காங்ரஸ் தலைவரும், நீதியமைச்சருமான கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களிடத்திலும் விடுக்கின்றேன்.
இவர்கள் அனைவரும் இன்னும் 48 மணித்தியாலத்துக்கு இடையில் நான் இந்த வீடீயோவில் செய்வது போன்று இரண்டு காரமான மிளகாய்களை எடுத்து அதனை பகிரங்கமாக உண்டு காட்ட வேண்டும் அவர்கள் தவறும் பட்சத்தில் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதனை நிறைவேற்றித் தர வேண்டும்.
என்னுடைய கோரிக்கை என்னவென்றால் மாவடிப்பள்ளிப் பாலத்தினை அவிவிருத்தி செய்வதாகும்.
இந்த மாவடிப்பள்ளி பாலத்தினால் மக்கள் நாளாந்தம் படும் அவதிகள் சொல்லில் அடங்காதவை. மழை காலம் வந்தால் அந்த வீதியினுாடக நடைபெறும் அத்தனை போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விடும். அம்பாறைக்குச் செல்வதாக இருந்தாலும் சரி, கல்முனைக்குச் செல்வதாக இருந்தாலும் சரி அந்தப் பாதை மக்களுக்கு மிகவும் பிரயோசனமானதாக இருக்கின்றது ஆனால் அந்தப் பாலத்தின் அவலம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது.
மழை காலத்தில் பலபேரது உயிர்களையும் காவு கொண்ட அந்தப் பாலத்தை இன்னும் அரசியல்வாதிகள் யாரும் கண்டு கொள்ளாது இருக்கின்றார்கள், பல தடவைகள் அது சம்பந்தமாக முறையிட்டும் எதுவித பலனும் இன்னும் கிட்டவில்லை. நானே இது பற்றி பலமுறை பதிவிட்டிருக்கின்றேன்.
என்னுடைய Hot chilli challenge யின் நோக்கமே அந்த மாவடிப்பள்ளிப் பாலத்தினை அபிவிருத்தி செய்வதற்கான விளிப்புணர்வை உண்டு பண்னுவதே ஆகும்.
மிளகாய் சாப்பிடுவதென்பது ஒரு சாதாரணமான விடயமாக இருந்தாலும் இந்தப் பாலத்தினை அபிவிருத்தி செய்து தரும்படி அரசியல்வாதிகளுக்கு வித்தியாசமான முறையில் விளிப்புணர்வூட்ட நான் மேற்கொள்ளும் ஒரு சிறிய முயற்சியே இதுவாகும்.
ஆகவே நண்பர்களே..!!! நீங்கள் எனக்குச் செய்வதெல்லாம் இந்த வீடியோவை அத்தனை பேருக்கும் செயார் செய்யுங்கள் இது சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் எட்டி அதன் மூலம் இந்தப் பாலத்திற்கு ஒரு விமோசனம் கிடைத்தால் அந்த நன்மை உங்களையும் வந்தடையும் இன்சா அல்லாஹ்.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.
kmansar14gmailcom
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfs0.html

Geen opmerkingen:

Een reactie posten