இவர் இப்படியாம் ! அவர் அப்படியாம் ! என்ன தான் நடக்கிறது என்று தெரியவில்லையே ? SORRY WHAT DO THEY MEAN ?
[ Aug 30, 2014 05:44:02 AM | வாசித்தோர் : 5650 ]
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் அங்குரார்ப்பண நிகழ்வில்(27) கலந்து கொண்டு உரையாற்றும் போதுதான் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் காணமுடிகின்றது. இலங்கை மக்களினது தேவைகளுக்கேற்பவே இந்திய அரசு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றது. எனவே மத்திய அரசு(அதாவது மகிந்தரின் அரசுடன்) தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து செயல்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது தான் இந்தியாவின் விரும்பம் என்கிறார் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே சிங்ஹா !
ஆனால் நாங்கள் இந்தியா சென்றுவிட்டோம், மோடியை சந்தித்துவிட்டோம் இனி என்ன நடக்கப்போகிறது பாருங்கள் என்று, நிலவுக்கு சென்று இறங்கிய நீல் ஆம்ஸ்ராங் குதித்தது போல தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தர் குதிக்கிறார். உண்மையில் என்ன தான் நடக்கிறது ? நடிகர் மேஜர் சுந்தரராஜன் போல ... What do they mean ?????????????? என்று கேட்டால்... சாரி இது மீன்(mean) இல்ல கருவாடு !
http://www.athirvu.com/newsdetail/895.html
Geen opmerkingen:
Een reactie posten