இலங்கையின் அரசியல் தீர்வு விடயத்தில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் போக வேண்டும் என்பதில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அக்கறை கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே இது குறித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் சுவராஜ் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, 13வது திருத்தச் சட்டமா? அல்லது அதற்கு அப்பால் சென்ற தீர்வா என்பதை தான் ஆராயவதாகவும் அதனை தன்னிடம் விட்டு விடுமாறும் மோடி கூறியதாகவும் செல்வராசா கூறினார்.
அத்துடன் இந்தியா 100க்கு 100 வீதம் தம்முடன் இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் பொன். செல்வராசா இந்த தகவல்கள் வெளியிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten