[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 03:33.05 PM GMT ]
தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்தார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
மொஹமட் ஹுசைனி என்ற இந்த இலங்கையர், மலேசிய பொலிஸாரால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 29ல் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த மற்றும் ஒருவரான ஹுசைன் வழங்கிய தகவலின் அடிப்படையில் தமிழக பொலிஸாரினால் முன்னதாக இவருக்கு எதிராக இன்டர்போல் சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே ஹுசைனி மலேசியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgr4.html
மீனவர்கள் கைது – மோடிக்கு கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 09:45.32 PM GMT ]
தலைமன்னார் பகுதியில் வைத்து 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியும் கைது செய்தும் வருகிறது.
இந்த விடயம் தொடர்பாக கடந்த மூன்று வருடங்களாக காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்துக்கு பல கடிதங்கள் எழுதப்பட்டுள்ள போதும் எந்த விதமான காத்திரமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன் காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு அச்சம் கொண்டு செயற்பட்டது.
எனினும் தங்களின் தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அரசாங்கம் இலங்கைக்கு அடிபணியாமல் இந்த விடயத்தில் தீர்க்கமான இறுதி முடிவு ஒன்றை எடுக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgr7.html
Geen opmerkingen:
Een reactie posten