தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

யாழ். குருநகர்ப் பகுதியில் இரண்டு வீடுகள் தீக்கிரை!



யாழ். குருநகர் பாங்ஷால் வீதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் இன்று தீக்கிரையாகியுள்ளதுடன், மற்றொரு வீடு பகுதியாக எரிந்து சேதமடைந்துள்ளது.
சம்பவம் அறிந்த யாழ்.மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரும் படையினரும் இணைந்து அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர்.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnx5.html

Geen opmerkingen:

Een reactie posten