தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

மருத்துவ கவனிப்பின்றி ஈழ அகதி இந்தியாவில் சாவு; உறவினர்கள் மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம்!

ராஜபக்ஸ கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் சந்திரிக்கா

தமது தந்தையான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட கட்சியை மீட்டெடுக்கப் போவதாக சந்திரிக்கா, பலம்பொருந்திய அமைச்சர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சில மாதங்களாக லண்டனில் வாழ்ந்து வந்த சந்திரிக்கா அண்மையில் இலங்கைக்கு திரும்பியிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடமையாற்றி வருகின்றார்.
பொதுவான ஓர் கொள்கையின் அடிப்படையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை மாற்றியமைக்க ஒத்துழைப்பு வழங்கத் தயார் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார். சந்திரிக்காவிற்கு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் ஆதரவளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/74996.html

மருத்துவ கவனிப்பின்றி ஈழ அகதி இந்தியாவில் சாவு; உறவினர்கள் மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம்!

அத்துடன் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புதுப்பற்றில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜீ.சந்திரசேகரன் (வயது – 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வயிற்று வலி காரணமாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கூடத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு ஊசி மருந்து ஏற்றப்பட்டது என்றும் அதன்பின்னரே உடல் வலி அதிகரித்து அவர் உயிரிழந்தார் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அங்கு பிரதான வைத்தியர் இல்லாத நிலையில் அவருக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் சந்திரசேகரன் உயிரிழந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 200 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்துடன் சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மருத்துவ கவனக்குறைவு குறித்து அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று கீழ்ப்பாக்கம் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் கே.வரதராஜன் தெரிவித்தார்.

சந்திரசேகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக இந்திரா காந்தி அரச பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
india_eelatamil
http://www.jvpnews.com/srilanka/75005.html

Geen opmerkingen:

Een reactie posten