தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

பொலிஸ் உத்தியோகமே வேண்டாம்! வட- கிழக்குத் தமிழர்கள்

அடிப்படைவாதிகளை கைது செய்தால் மேலும் கலவரம் ஏற்படும்: இராணுவத் தளபதி
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 06:55.27 AM GMT ]
அடிப்படைவாதிகளை கைது செய்தால், மேலும் கலவரங்கள் ஏற்படக் கூடும். இதனால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்து கொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தெஹிவளை ஜூம்மா பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு உறுதி வழங்குவதாகவும் எதிர்காலத்தில் அளுத்கம போன்ற சம்பவங்கள் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnw1.html
பொலிஸ் உத்தியோகமே வேண்டாம்! வட- கிழக்குத் தமிழர்கள்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 07:00.12 AM GMT ]
பொலிஸ் திணைக்களத்துக்கு தமிழ் அலுவலர்களை இணைத்துக் கொள்ள வட - கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் உதவி பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட வெற்றிடங்களுக்கு தமிழ் யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கான முன்னெடுப்பு பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் பொலிஸ் திணைக்களம் எதிர்பார்த்த அளவில் இந்தச் செயற்திட்டம் வட- கிழக்கு பகுதிகளில் வெற்றியளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுவரை குறைவான விண்ணப்பங்களே கிடைத்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மூலமாக இது தொடர்பான விழிப்பூட்டல் செயற்திட்டமொன்றை முன்னெடுக்க பொலிஸ் தலைமையகம் உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnw2.html

Geen opmerkingen:

Een reactie posten