தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

தனியார் கிளினிக் வைத்து பெண்களுடன் சேஷ்டை விடும் போதனா வைத்தியசாலை வைத்தியர் !

யாழ் போதனா வைத்தியசாலையில் வேலைபார்க்கும் மருத்துவர் ஒருவர், தனியார் கிளினிக் ஒன்றை ஆரம்பித்து அங்கே வரும் இளம்பெண்களோடு பாலியல் சேஷ்டைகளி ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜீவன் என்னும் மருத்துவரே இவ்வாறு சேஷ்டைகளின் ஈடுபட்டுவருகிறார். கடந்த வருடமும் கனகர்-கடைச் சந்தியில் கிளினிக் அமைத்து இவர் தன்னிடம் வந்த பெண் நோயளர்களுடன் பாலியல் சேஷ்டைகள் விட்டு அவர்களின் உறவினர்களால் எச்சரிக்கப்பட்டார். இவரிடம் நெஞ்சு நோ எனத் தெரிவித்துச் சென்ற பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உள்ளாக்க முற்பட்டபோது மாணவி அவரிடம் இருந்து தப்பி வந்து, தனது தமயனுக்கு விடையத்தை தெரிவிக்க, இவரது கிளினிக் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்தது அனைவரும் அறிந்ததே.
இவ்வாறு கிளினிக் தாக்கப்பட்ட போது குறித்த வைத்தியர் அதனை இராணுவத்திற்கு தவறான முறையில் தெரிவித்து, தனக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்களுக்கு கூறி தனது கிளினிக் முன்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வித்தார் எனவும் அதிர்வு இணையம் அறிகிறது. சில நாட்களுக்கு முன்னரும் 3 வயதுக் குழந்தைக்கு மலச்சிக்கல் எனத் தெரிவித்துக் காட்டுவதற்குச் சென்ற குடும்பப் பெண்ணுடன் தவறாக நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியுற்ற குடும்பப் பெண் அங்கிருந்தவர்களுக்கு முன்னாள் அவரை தாறுமாறாக ஏசிவிட்டுச் சென்றுள்ளார்.
இதேவேளை தற்போது இவர் தவறாக முறையில் ஏற்படும் கர்ப்பத்தைக் கலைக்கும் வேலையிலும் சட்டவிரோதமாக ஈடுபடுவதாகவும் இது தொடர்பாக அந்தக் கிளினிக்குக்கு அருகில் இருப்பவர்கள் அறிந்து அவரை எச்சரித்ததாகவும் தெரியவருகின்றது. யாழ் சுண்டுகுழி பண்டியன் தாழ்வுப் பகுதியில் இவரது கிளிகின் இருக்கிறது. இந்த மருத்துவர் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/290.html

Geen opmerkingen:

Een reactie posten