தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

தாய் தந்தைக்கிடையில் சண்டை: தடுக்கச் சென்ற மகள் தந்தையின் வாள் வெட்டுக்கு இரை!

யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள் வெட்டுக்கு இலக்காகி மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் கோடீஸ்வரன் தர்மிகா என்ற 22 வயதான நபரே வாள் வெட்டுக்கு இலக்காகி சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தாய்க்கும் தந்தைக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையை மகள் தடுக்கச் சென்ற வேளை  தந்தை மகளை வாளால் வெட்டியுள்ளார்.
இதேவேளை, இப்பகுதியில் காணிச் சண்டை காரணமாக இருவருக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
மீசாலை வடக்கைச் சேர்ந்த வயோதிபர்களான கணபதிப்பிள்ளை கந்தசாமி, கே.மயில்வாகனம் இருவரையும்  அவர்களுடைய மைத்துனன் தாக்கி இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணையை   பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்..
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmt2.html

Geen opmerkingen:

Een reactie posten