தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு விட்ட இடத்தில் இருந்து விசாரணையைத் தொடர வேண்டும்! சர்வதேச மன்னிப்புச்சபை

உண்ணாவிரதம் மேற்கொண்ட இலங்கை அகதி கைது
தன்னையும் தனது குடும்பத்தினரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு பதிலாக ஐக்கிய நாடுகளில் ஒப்படைக்க வேண்டுமென்று இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து சாகும்வரையான உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவந்த இலங்கை அகதியான செந்தூரன் என்பவர் செய்யார் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் சென்னையிலுள்ள புழல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவந்திருந்தார்.

நலன்புரி நிலையத்துக்கு வெளியிலான இவரது நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக இவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர் செங்கல்பட்டிலுள்ள சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிறப்பு முகாமுக்கு ஏனைய 30 கைதிகளுடன் இவர் மாற்றப்பட்டிருந்தார்.

செந்தூரனை திருப்பி அனுப்பும் முகமாக மத்திய அரசாங்கத்தினுடைய உட்துறை திணைக்களத்தின் அனுமதிக்காக எழுத்து மூலம் கடந்த வருடம் மாநில அரசாங்கம் கோரியிருந்தது.

இந்த திருப்பி அனுப்பும் உத்தரவுக்கு எதிராக இவர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எவ்வாறாயினும், தன்னையும் தனது குடுபத்தினரையும் ஐ.நா.வில் ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து செந்தூரன் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
27 Jun 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1403865020&archive=&start_from=&ucat=1&

பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு விட்ட இடத்தில் இருந்து விசாரணையைத் தொடர வேண்டும்! சர்வதேச மன்னிப்புச்சபை
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மூன்று நிபுணர்களை நியமித்ததை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழுவினர் முடித்த இடத்தில் இருந்து புதிய விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும்.

என வேண்டுகோள் விடுத்துள்ளது. அக்குழுவினர் நம்பகத் தன்மை மிக்க தகவல்களை பெற்றுக் கொண்டனர். அந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அது இலங்கையில் யுத்த குற்றமும் மனித குலத்திற்கு எதிரான குற்றமும் இடம்பெற்றதை உறுதிப்படுத்தப்படும்.

தற்போதைய விசாரணைகள் மிக ஆழமாக முன்னெடுக்கப்பட வேண்டும். குற்றச் செயல்களுக்கு காரணமான இராணுவத் தளபதிகள், உயரதிகாரிகள் போன்றோரும் விசாரிக்கப் படவேண்டும் எனவும் கோரியுள்ள மன்னிப்புச் சபை, இலங்கை அரசாங்கத்தை விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விசாரணைகள் வலுவானவை ஆவும், ஆழமானவையாகவும் அமைவதற்கான அரசியல் மற்றும் ஏனைய ஆதரவை ஐ.நாவும், சர்வதேச சமூகமும் வழங்க வேண்டும். சாட்சியங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அது கேட்டுள்ளது.
27 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1403864640&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten