தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

மக்கள் கொல்லப்படவில்லையென்றால் அரசு ஏன் விசாரணைக்கு மறுக்கிறது! பாரிய சிக்கல் என்கிறது ஐதேக

இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்: நாமல்
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 02:33.44 AM GMT ]
இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனைத்து இன மக்களும் பேதங்களை களைந்து ஒன்றாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் கடின முயற்சியின் ஊடாக ஈட்டப்பட்ட சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கில் நாடு முழுவதிலும் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.
இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் கருத்தரங்குகள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதனை தடுக்கும் பொறுப்பு இளைஞர்களிடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்களது மதங்களை வழிபடும் அதேவேளை, ஏனைய மதங்களையும் மதிக்கக்கூடிய சமூகமொன்றை உருவாக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையை கட்டியெழுப்பும் கருத்தரங்கு தொடர்பில் சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmq7.html

மக்கள் கொல்லப்படவில்லையென்றால் அரசு ஏன் விசாரணைக்கு மறுக்கிறது! பாரிய சிக்கல் என்கிறது ஐதேக
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 04:39.05 AM GMT ]
விடு­தலைப் புலி­க­ளு­ட­னான இறுதி யுத்­தத்தில் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்றால் அர­சாங்கம் ஏன் விசா­ர­ணைக்கு மறுப்பு தெரி­விக்­கின்­றது. சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இட­ம­ளிக்­கா­விடின் அர­சாங்கம் பாரிய சிக்­கல்­களை எதிர்­நோக்கும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.
இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ரணை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்ற நிலையில் அது தொடர்­பாக வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்­தின் ­போது இரா­ணு­வத்­தினால் யுத்த குற்­றங்கள் இடம்­பெற்­ற­தாக சர்­வ­தேசம் குற்றம் சுமத்­தி­யுள்­ளது. அதற்­கான ஆதா­ரங்­க­ளையும் முன்­வைத்­துள்­ளனர். இதில் எந்­த­ளவு உண்­மைத்­தன்மை உள்­ள­தென்­பதை எம்மால் உறு­திப்­ப­டுத்த முடி­யாது. ஆனால் இதில் உண்­மைத்­தன்மை உள்­ளதா? இல்­லையா? என்­பதை அர­சாங்கம் நிரூ­பிக்க வேண்­டிய தேவை உள்­ளது.
சர்­வ­தேச விசா­ரணை இடம்­பெ­று­வது நாட்­டிற்கு பாதிப்பு என்றால் அர­சாங்கம் இலங்­கையின் சுயா­தீன உள்­ளக விசா­ர­ணை­யொன்றை நடத்தி தீர்வு கண்­டி­ருக்க வேண்டும். ஆனால் யுத்தம் முடி­வ­டைந்து இந்த ஐந்து ஆண்­டு­களில் அர­சாங்­கத்­தினால் எந்­த­வொரு விசா­ர­ணையும் இடம்­பெ­ற­வில்லை.
விடு­தலைப் புலி­க­ளு­ட­னான இறுதி யுத்­தத்தில் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்றால் அர­சாங்கம் உண்­மை­யான அறிக்­கை­யினை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். அல்­லது பய­மின்றி சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்­றினை அனு­ம­தித்­தி­ருக்க முடியும். ஆனால் அர­சாங்கம் தவ­றி­ழைத்­தி­ருக்­கின்­ற­மை­யி­னா­லேயே இலங்கை மீதான விசா­ர­ணைக்கு அஞ்­சு­கின்­றது.
இலங்­கையில் இன்று நிலை­மைகள் மிக மோச­மா­ன­தாக மாறி­விட்­டது. யுத்த கால­கட்­டத்தில் வடக்கில் மட்­டுமே அச்­சு­றுத்தல் அதி­க­ரித்­தி­ருந்­தது. ஆனால் இன்று நாடு பூரா­கவும் இனக்­க­ல­வ­ரங்­களும், போராட்­டங்­களும் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது.
சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே இன­வா­தத்­தினை பரப்பி இனக்­க­ல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். மத­வாத அமைப்­புகள், தீவி­ர­வாத குழுக்­க­ளிடம் அதி­கா­ரங்­களை வழங்கி அவர்­க­ளுக்கு பாது­காப்­பி­னையும் இந்த அர­சாங்கம் வழங்­கு­கின்­றது.
இந்த சர்­வா­தி­கார ஆட்­சியில் மக்­களே பலிக்­க­டா­வாகி துன்­பப்­ப­டு­கின்­றனர். நாட்டில் ஜன­நா­யக ஆட்சி இடம்­பெற வேண்­டு­மாயின் சிறு­பான்மை மக்­களின் உரி­மை­க­ளுக்கும், சுதந்­தி­ரத்­திற்கும் முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும்.
தென்­னா­பி­ரிக்கா இன்று ஜன­நா­ய­கத்தின் முறையில் செல்­வதும், அங்கு இன வேற்­றுமை அழிக்­கப்­பட்­ட­மை­யி­னா­லேயே இலங்­கை­யிலும் இந்த நிலைமை ஏற்­பட வேண்டும். மூவின மக்­க­ளுக்­கு­மான சம உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும்.
மேலும், சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இந்த அர­சாங்கம் இணங்­கு­வதால் நாட்டின் மீதான அழுத்தம் குறைக்­கப்­படும். அரசாங்கமே விசாரணைக்கான அனுமதியினை சர்வதேசத்திற்கு கொடுத்தது. இப்போது சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என அரசாங்கம் கூறுவதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு மறுத்தால் பொருளாதார ரீதியில் மட்டுமன்றி அரசியல் ரீதியிலும் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmr0.html

Geen opmerkingen:

Een reactie posten