தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

பணம் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பௌத்த பிக்குவை கொலை செய்தோம்: சந்தேக நபர்கள் சாட்சியம்!

என்னைக் கைது செய்தால் பல உண்­மை­களை வெளிப்­ப­டுத்­துவேன்! மங்­கள சம­ர­வீர
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:09.35 AM GMT ]
நான் வெளி­யிட்ட கருத்­துக்கள் தொடர்பில் எந்­த­வொரு விசா­ர­ணைக்கும் முகம் கொடுக்க தயா­ராக உள்ளேன். என்னை கைது செய்­தாலும் அர­சாங்­கத்தின் மோச­டிகள் தொடர்பில் இன்னும் பல உண்­மை­களை வெளிப்­ப­டுத்­துவேன் என தெரி­வித்த மங்­கள சம­ர­வீர எம்.பி., அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் பாது­காப்பு செய­லா­ளரே உள்ளார் எனவும் குறிப்­பிட்டார்.
மங்­கள எம்.பி. வெளி­யிட்ட கருத்­துக்கள் தொடர்பில் விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பித்­துள்ள நிலையில் இது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
நாட்டின் குழப்­ப­க­ர­மான சூழ­லுக்கு இந்த அர­சாங்­கமே முழுப் பொறுப்­பி­னையும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம் தமிழ் இனத்­தவர் மிக கொடூ­ர­மாக தாக்­கப்­ப­டு­கின்­ற­மைக்கும் சிங்­கள மக்­களின் மத்­தியில் இன­வா­தத்­தினை பரப்பி நாட்டில் அமை­தியை சீர­ழிக்­கின்­ற­மைக்கும் அர­சாங்­கமே காரணம்.
இன்று அர­சாங்­கத்தின் தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக புல­னாய்வு பிரி­வினை பயன்­ப­டுத்தி பல அட்­டூ­ழி­யங்­களை செய்து கொண்­டி­ருக்­கின்­றனர். நான் வெளி­யிட்ட கருத்­துக்கள் அனைத்தும் உண்­மை­க­ளே­யாகும்.
அதேபோல் நான் குறிப்­பிட்ட கருத்­துக்கள் பாது­காப்பு பிரிவின் இர­க­சி­யங்­களோ அல்­லது இந்த நாட்டை பாதிக்கும் இர­க­சிய தக­வல்­களோ அல்ல. இவை இந்த நாட்டில் அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் அட்­டூ­ழி­யங்­களும் அதற்கு துணை போகும் நபர்­களின் பெயர்­க­ளு­மே­யாகும்.
இதை வெளி­யி­டு­வது இந்த நாட்டை நேசிப்­பவன் என்ற வகையில் எனது கட­மை­யாகும். எனது கட­மை­யி­னையே நான் செய்­துள்ளேன்.
கேள்வி: நீங்கள் வெளி­யிட்ட கருத்­தினால் இப்­போது விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளதே?
பதில்:  எனது கருத்­துக்கள் நான் ஊட­கங்­களின் முன்­னி­லையில் வெளி­யிட்ட தக­வல்கள் அனைத்தும் உண்மை. புல­னாய்வு பிரிவின் தக­வல்­களை வெளி­யிட்­ட­த­னாலோ அல்­லது பாது­காப்பு செய­லாளர் செய்யும் தவ­று­களை வெளி­யிட்­ட­த­னாலோ இவர்கள் என்னை விசா­ரிக்க போவ­தில்லை. அவர்கள் தொடர்­பான உண்­மை­களை வெளி­யிட்­டதே இப்­போது இவர்­களின் பிரச்­சி­னை­யாக உள்­ளது. எனது கருத்­துக்கள் தொடர்பில் என்­மீது எந்­த­வொரு விசா­ர­ணை­யினை மேற்­கொண்­டாலும் அதற்கு முகம்­கொ­டுக்க நான் தயா­ரா­கவே உள்ளேன். நான் எதற்கும் அஞ்­சப்­போ­வ­தில்லை.
கேள்வி: புல­னாய்வு பிரிவு தொடர்பில் நீங்கள் வெளி­யிட்ட செய்­தி­க­ளுக்­கான ஆதாரம் உங்­க­ளிடம் உள்­ளதா..?
பதில்:  இந்த அர­சாங்கம் செய்யும் கடந்த காலங்­களில் செய்த குற்­றங்கள் தொடர்பில் சகல ஆதா­ரங்­களும் என்­னிடம் உள்­ளது. புல­னாய்வு பிரி­வினை பயன்­ப­டுத்தி இந்த அர­சாங்கம் பெரிய குற்­றங்­களை செய்து கொண்­டி­ருக்­கின்­றது.
அளுத்­கம இனக்­க­ல­வரம் மட்­டு­மல்ல இன்றும் சில சம்­ப­வங்கள் அர­சாங்­கத்தின் ஆத­ர­வுடன் பாது­காப்பு செய­லா­ளரின் கட்­ட­ளை­யுடன் இடம்­பெற்­றுள்­ளது. என்னைக் கைது செய்­தாலும் இல்லாவிட்­டாலும் இந்த அர­சாங்­கத்தின் மோச­டிகள் தொடர்­பி­லான இன்னும் பல உண்­மை­களை வெளி­யி­டுவேன். இந்த நாட்டில் அப்­பாவி மக்­களை கொடு­மைப்­ப­டுத்தும் இந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு இனி­மேலும் இட­ம­ளிக்­கக்­கூ­டாது.
கேள்வி : பாது­காப்பு செய­லாளர் மீது வெளிப்­ப­டை­யா­கவே குற்றம் சுமத்­து­வது ஏன்?
பதில்:  நாட்டில் இரா­ணுவ ஆதிக்கம் அதி­க­ரிப்­ப­தற்கும் தீவி­ர­வாத அமைப்­புகள் பலப்­ப­டு­வ­தற்கும் பாது­காப்பு செய­லாளர் காரணம் என நான் கடந்த இரு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே தெரி­வித்து விட்டேன். இப்­போது குறிப்­பி­டு­வது புதிய விட­ய­மல்ல. இன்று பொது­ப­ல­சேனா என்ற பௌத்த அமைப்பு தலை­தூக்­கவும் அவர்கள் சிறு­பான்மை இனத்­திற்கு அடக்கு முறை­களை பயன்­ப­டுத்­தவும் பாது­காப்பு செய­லாளர் கோத்தபாய ராஜபக்சவே காரணம். அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் பொது­ப­ல­சேனா அமைப்பு செயற்­பட்­டது என்­பதே உண்மை. இவ் அமைப்­பிற்­கான உத­வி­க­ளையும் பாது­காப்­பி­னையும் பாது­காப்பு செய­லா­ளரே செய்­துள்ளார்.
கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் பொது­ப­ல­சேனா அமைப்­பினை இவர் சந்­தித்­துள்ளார். இவ்­வா­றான பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு துணை­போகும் செய­லையும் பொது­ப­ல­சே­னா­வுக்கு உத­வி­க­ளையும் பாது­காப்­பி­னையும் வழங்­கு­வது பாது­காப்பு செய­லா­ளரே. அவர்­க­ளுக்­கி­டையில் நெருங்­கிய தொடர்பு உள்ளது. இவர்களுக்கான நிதி உதவிகளையும் இவரே செய்து கொண்டுள்ளார்.
இலங்கையில் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த இனிமேல் இடமளிக்கக்கூடாது. சர்வதேச சக்திகள் அரசாங்கத்திற்கு எதிராக பலமடைந்து விட்டன. இனிமேல் இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அடக்கு முறைகளை கையாள்வது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். இது சிங்கள மக்களையே பாதிக்கும் என்பதை இந்த அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnu5.html
ஜெனிவா 26வது அமர்வு இன்றுடன் நிறைவு! செப்டெம்பரில் இலங்கை குறித்து வாய்மூல அறிக்கை!
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:20.13 AM GMT ]
ஜெனி­வாவில் நடை­பெற்­று­  வ­ரு­கின்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 26வது கூட்டத் தொடர் இன்று 27ம் திகதி வெள்ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­கின்­றது.
ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 26 வது கூட்டத் தொடர் இம்­மாதம் 10ம் திகதி ஆரம்­ப­மா­னது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் மனித உரிமைப் பேர­வையின் இம்­முறைக் கூட்டத் தொடரில் 48 பிரே­ர­ணைகள் தாக்கல் செய்யப்பட்டுள்­ளன.
நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் மற்றும் பொது­வான மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்தே இந்த பிரே­ர­ணைகள் உறுப்பு நாடுகள் மற்றும் அரச சார்­பற்ற அமைப்­புக்­க­ளினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.
இலங்­கையை பொறுத்­த­வரை இம்­முறை கூட்டத் தொடரில் இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி ஜெனிவா மனித உரிமைப் பேர­வைக்­கான இலங்­கையின் நிரந்­தர வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான அதிகாரிகள் மட்ட குழு­வினர் கலந்­து­கொண்­டனர். அத்­துடன் ரவி­நாத ஆரிய­சிங்க கூட்­டத்தில் உரை­யாற்­றி­யி­ருந்தார்.
அதே­வேளை இம்­முறை கூட்டத் தொடரின் ஆரம்­பத்தில் உரை­யாற்­றிய ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை, இலங்­கையில் பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான பரந்­து­பட்ட விசாரணையை மேற்­கொள்­வ­தற்­கான நிபு­ணர்கள் மற்றும் விசேட அறிக்­கையா­ளர்கள் உள்­ள­டங்­கிய விசா­ரணைக் குழுவை நிய­மித்­துள்­ள­தாக குறிப்­பிட்டார்.
இம்­முறைக் கூட்டத் தொடரே ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை ஆணை­யா­ள­ராக கலந்­து­கொள்ளும் இறுதிக் கூட்டத் தொட­ராகும். அவர் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்­துடன் ஓய்­வு­பெ­று­கின்றார்.
அவ­ருக்கு பதி­லாக ஜோர்தான் நாட்­டுக்­கான ஐ.நா வின் நிரந்­தரத் தூதர் செயித் அல் ஹுசைன் புதிய ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். சயித் அல்-­ஹுசைன், ஜான்ஸ் ஷாப்கன்ஸ் பல்­க­ லைக்­க­ழ­கத்தில் பயின்­றவர். கேம்­பிரிட்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்டம் பெற்­றவர்.
இதே­வேளை நேற்று முன்­தினம் இலங்கை தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­கான விசா­ரணைக் குழுவின் விசேட நிபு­ணர்கள் குழுவை மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை அறி­வித்தார். அந்­த­வ­கையில் பின்­லாந்தின் முன்னாள் ஜனா­தி­பதி மார்டி அத்­தி­சாரி, நியூ­சி­லாந்தின் உயர் நீதி­மன்ற நீதிவான் சில்­வியா கட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்ச நீதி­மன்றின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹான்கீர் ஆகியோர் இந்த விசா­ர­ணைக் ­கு­ழுவின் நிபுணத்துவ ஆலோ­ச­கர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.
இம்­முறைக் கூட்டத் தொட­ரின்­போது ஐக்­கிய நாடு­களின் இடம்­பெ­யர்ந்த மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் சலோகா பெயானியும் தனது அறிக்­கையை வெளி­யிட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட அவர் இலங்­கையின் மீள்­கு­டி­யேற்றம் குறித்த விசேட அறிக்கை ஒன்றை இம்­முறை மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொட­ருக்கு கைய­ளித்­தி­ருந்தார். அத்­துடன் கடந்த 12 ஆம் திகதி அமர்­வின்­போதும் அவர் உரை­யாற்­றி­யி­ருந்தார்.
அதில் இலங்­கையில் நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்த நிலையில் இருக்­கின்ற மக்­களின் நிலை குறித்தும் வடக்கில் மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட நிலையில் ஆபத்­தான நிலையில் வாழ்­கின்ற மக்கள் குறித்தும் அர­சாங்கம் கவனம் செலுத்­த வேண்டும் என அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­வ­தாக குறிப்பிட்டிருந்தார்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 27வது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளதுடன் அதில் இலங்கை குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு தனது வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnu6.html
பணம் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பௌத்த பிக்குவை கொலை செய்தோம்: சந்தேக நபர்கள் சாட்சியம்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 04:37.40 AM GMT ]
ஒரு லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பௌத்த பிக்குவை கொலை செய்ததாக, சந்தேக நபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அலஹர பகமுன ஹிரடிய புன்யாராமயவின் விஹாராதிபதி அலகொலமடல தம்மரதன தேரர் கடந்த 22ம் திகதி கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
பௌத்த பிக்குவின் கொலை தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவரை கைது செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18, 20 மற்றும் 28 வயதான இளைஞர்களே சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிடும் நோக்கில் பௌத்த பிக்குவை கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததாகவும், எனினும் விஹாரையில் வெறும் 2100 ரூபா பணமே காணப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பௌத்த பிக்குவுடன் மிக நெருக்கமான தொடர்பை பேணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்கள் ஹிங்குராக்கொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இதேவேளை, இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புக்கள் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பௌத்த பிக்கு ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அளுத்கம பேருவளை வன்முறைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnv0.html

Geen opmerkingen:

Een reactie posten