இவர்களுக்கு தீவிர வலதுசாரி ஸ்காட்டிஷ் பாதுகாப்பு லீக் தொடர்பு இருந்ததும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. அச்சுறுத்தல் மற்றும் தவறான நடத்தையை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தியதாக நேற்று விசாரணை முடிவில் தெரிவித்த நீதிபதி, டக்லசுக்கு 9 மாத சிறைத்தணடனை விதித்தார். செல்சியாவை 12 மாதங்கள் இளம் குற்றவாளிகளுக்கான ஒரு நிறுவனத்தில் இருக்குமாறு அந்த நீதிபதி உத்தரவிட்டார். இவர்கள் தவிர இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட 25 வயதுடைய வெய்ன் ஸ்டில்வெல் கடந்த செப்டம்பரில் இருந்தே 10 மாத சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றான்.
ஸ்காட்டிஷ் சமூகத்தின் மதிப்புமிக்க ஒருங்கிணைந்த பகுதியாக முஸ்லிம் சமூகத்தினர் இருந்து வருகின்றனர். எனவே நவீன ஸ்காட்லாந்தில் இது போன்ற தாக்குதல்களுக்கு இடமில்லை என்று நீதிபதி ஜான் லோக் குறிப்பிட்டார்.
http://www.athirvu.com/newsdetail/232.html
Geen opmerkingen:
Een reactie posten