தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

ஆளுனர் சந்திரசிறியை கேள்விகளால் துளைத்த சுவிஸ் தூதுவர்!

அல் ஜசீரா ஊடகவியலாளரை கைது செய்ய அரச ஊடகம் தீவிரம்

அல் ஜசீரா ஊடகவியலாளரை கைது செய்யுமாறு அரச ஊடகமொன்றின் செய்தி ஆசிரியர் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க ஊடகமான டெய்லி நியூஸ் ஊடகத்தின் செய்தி ஆசிரியர் ராஜ்பால் அபேயநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இலங்கையில் இன, மத வன்முறைகளைத் தூண்டும் வகையில் செய்தி அறிக்கையிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

உயிரிழப்பு தகவல்களை இரட்டிப்பாக்கி வன்முறைகளைத் தூண்டும் வகையில் அல்ஜசீரா ஊடகவியலளார் செயற்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். உள்நாட்டு ஊடகங்களில் அரசாங்கத்தினை விமர்சனம் செய்யும் செய்திகள் வெளியிடப்படுவது குறைவு எனவும் சர்வதேச ஊடகங்களில் இந்த தகல்கள் வெளியிடப்படுவதாகவும் தினுக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.இதேவேளை, தமது நிறுவனத்தின் ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அல் ஜசீரா அறிவித்துள்ளது.


all
http://www.jvpnews.com/srilanka/74506.html

ஆளுனர் சந்திரசிறியை கேள்விகளால் துளைத்த சுவிஸ் தூதுவர்

அபிவிருத்தி, மற்றும் வடக்கு நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் இன்று (25.06.14) யாழ்ப்பாணம் சென்றுள்ள இலங்கைக்கான சுவிஸ் தூதுவர், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரை கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். வடக்கின் அபிவிருத்தி பற்றி ஆளுநருடன் சுவிஸ் குழுவினர் ஆராய்வு
இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் தூதுவர் தோமஸ் லிட்செருடனான குழுவினர் இன்று யாழ் சென்று வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியையும் சந்தித்து கலந்துரையாடினர். இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண ஆளுநரை அவரது அலுவலகத்திலே சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கில் ஏற்பட்ட அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பிலும் வடக்கில் தேவைப்படும் அபிவிருத்திகள் குறித்தும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பியதுடன் இதுவரை காலமும் வடக்கில் பாரிய அபிவிருத்தி முன்னேற்றங்கள் பாராட்டத்தக்க விடயம் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதற்கு ஆளுநர் தற்போது வடக்கில் பாரிய அபிவிருத்திகள் பூர்த்தியாக்கப்பட்டு உள்ளதுடன் இன்னமும் வடக்கில் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.Jaffna-Visit-SwissJaffna-Visit-Swiss-01
வட மாகாண ஆளுநர்ரைச் சந்தித்தார் சுவிஸ் தூதுவர்
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் தோமஸ் லிட்செருடனான குழுவினர், வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இன்று காலை காலை 9.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் வடக்கில் இடம்பெற்றுள்ள அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பிலும் தேவைப்படும் அபிவிருத்திகள் குறித்தும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.
இதுவரை காலமும் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி முன்னேற்றங்கள் பாராட்டத்தக்க விடயம் எனவும் சுவிஸ் தூதுவர் தெரிவித்துள்ளனர்.Jaffna-SwissJaffna-Swiss-01Jaffna-Swiss-02Jaffna-Swiss-03Jaffna-Swiss-04Jaffna-Visit-Swiss-03Jaffna-Visit-Swiss-04
 http://www.jvpnews.com/srilanka/74511.html

Geen opmerkingen:

Een reactie posten