தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

பின்லாந்தின் முன் நாள் ஜனாதிபதியாக இருந்த அத்திசாரி நியமிக்கப்பட்டதால் அலாடும் இலங்கை !

சிங்கள புலனாய்வுக் குழுவின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாம்: விரைவில் அவை வெளிவருமாம் !

[ Jun 26, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 26505 ]
கண்டி அத்துகிரிய "மிலேனியம்" சிற்றியிலிருந்து செயற்பட்ட இலங்கை புலனாய்வுகுழுக்களின் தகவல்கள் அப்போது அம்பல்பபடுத்தப்பட்டது யாவரும் அறிந்ததே. இச்சம்பவம் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்றது. இதனால் இக் குழுவில் செயல்பட்ட சுமார் 20 சிங்கள புலனாய்வாளர்கள் பின்னர் குறிவைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்கள். இவர்களை யார் திட்டம் தீட்டி கொலைசெய்தார்கள் என்பது தொடர்பாக நாம் சொல்லவே தேவையில்லை. தற்போதும் அதுபோல ஒரு சதி நடவடிக்கை நடந்து வருவதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவாண் வணிகசூரிய தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இவர் இதனை அறிவித்தலாக மட்டும் விடவில்லை. பதட்டமாக தெரிவித்துள்ளார் என்பது மிக முக்கியமான விடையம் ஆகும்.
பேருவளை, அளுத்கம வன்முறைகளை பயன்படுத்தி, ஏனைய பகுதிகளிற்கும் அந்த தீயை பரப்பிவிட சிலர் முயன்றனர். எனினும், புலனாய்வு சேவையினருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் முறையாக நடந்து கொண்டு, திட்மிடப்பட்ட அனர்த்தங்களை கட்டுப்படுத்தியுள்ளனர் என்று கூறிய பிரிகேடியர் ருவாண் வணிகசூரிய, மேற்குலக நாடு ஒன்றின் தூதுவராலயத்தில் ஒரு ரகசிய கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இதில் கலந்துகொண்ட சிலர், புலனாய்வு துறையில் ஒரு குழுவில் வேலைபார்க்கும் நபர்களின் பெயர்களை எடுத்துச் சென்று கொடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். இதனூடாக பேருவளை, அளுத்கம போன்ற பகுதிகளில் கலவரம் நடந்தவேளை செயல்பட்ட சில சிங்கள புலனாய்வு துறை அதிகாரிகளின் பெயர்கள் தற்போது வெளிச்சத்திற்கு வரவுள்ளது எனபதே, பிரிகேடியர் ருவாண் வணிகசூரியவின் பதட்டத்திற்கு காரணம் ஆகும்.
இந்த விடையம் தொடர்பாக நாம் பொறுத்திருந்து தான் பார்கவேண்டும். சில முஸ்லீம்கள் அமெரிக்க அரசுக்கு சில தகவலை வழங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தற்போது நன்றாகத் தெரிகிறது. இது என்ன விடையம் என்பது விரைவில் வெளியாகும். 
http://www.athirvu.com/newsdetail/266.html

பின்லாந்தின் முன் நாள் ஜனாதிபதியாக இருந்த அத்திசாரி நியமிக்கப்பட்டதால் அலாடும் இலங்கை !

[ Jun 26, 2014 05:00:48 AM | வாசித்தோர் : 10865 ]
பின்லாந்து நாட்டில் 1937ல் பிறந்து பின்னர் 20 வயதிலேயே அரசியலில் புகுந்தவர் அத்திசாரி. இவர் 1994ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டுவரை பின்லாந்தின் ஜனாதிபதியாக இருந்தவர். தற்போது கொசவோவில் நடந்த சட்டத்திற்கு புறம்பான கொலைகள் தொடர்பாக விசாரிக்கும் ஐ.நாவின் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். சமாதானத்திற்கான நோபல் பரிசைவென்ற, அத்திசாரியை தான் தற்போது இலங்கை தொடர்பான ஐ.நாவின் விசாரணைக் குழுவிலும் போட்டுள்ளார்கள். இந்த நியமனத்தை நவனீதம் பிள்ளை அவர்களே மேற்கொண்டுள்ளார். இதேவேளை இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்றவேளை, அங்கே பல யுத்தக்குற்றங்கள் நடைபெற்றது என்பதனை, நன்றாக உணர்ந்த மனிதராக இருக்கிறார் அத்திசாரி.
இதனால் இலங்கை அரசுக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐ.நாவில் இலங்கைக்கு சார்பாக பேசக்கூடிய மற்றும் இலங்கையோடு நட்பு பாராட்டக்கூடிய பல அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் புறம் தள்ளி, மிகவும் கடுமையான முடிவுகளை எடுக்க கூடிய அதிகாரிகளையே நவனீதம் பிள்ளை அவர்கள் தற்போது நியமித்து வருகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம் பிள்ளை அவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக நடக்கவேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்துவருகிறார். குறிப்பாக இலங்கை மீது விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்பதனை குறிவைத்து அனைத்து நகர்வுகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் பின்லாந்தின் முன் நாள் ஜனாதிபதியை இப்பொறுப்பில் நியமித்தது, இலங்கை அரசை மேலும் கடுப்பாக்கியுள்ளது. இலங்கை அரசுக்கு வளைந்துகொடுக்காத நபர்களை தேடித்தேடி கண்டுபிடித்து, நியமித்து வரும் நவனீதம் பிள்ளை ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக இலங்கைக்கு அப்பு வைக்காமல் செல்லமாட்டார்போல இருக்கிறதே.
http://www.athirvu.com/newsdetail/268.html

Geen opmerkingen:

Een reactie posten