தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

சற்றுமுன்னர் அமெரிக்க கமாண்டோக்கள் ஈராக்கில் குதித்தார்கள்: 300 பேரை மட்டுமே அனுப்பியுள்ளார் ஒபாமா !

கொள்ளையிடச் சென்றவேளை ‘பேஸ்புக்’ மேல் ஆசை வந்துவிட்டது: பார்த்ததால் பொலிஸாரிடம் சிக்கிய திருடன்

[ Jun 26, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 2875 ]
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில், வீடொன்றில் திருடியவர் அங்கிருந்த கணனியில் தனது பேஸ்புக் கணக்கை பயன்படுத்தியதால் பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டார். திருடச் சென்ற வீட்டில் இருந்த கணனியில் தனது பேஸ்புக் கணக்கை பார்வையிட்ட அவர், பேஸ்புக் கணக்கிலிருந்து வெளியேறுவதற்கு (Log out) மறந்துவிட்டார்.
இந்நிலையில் அந்த பேஸ்புக் கணக்கை பார்வையிட்ட வீட்டு உரிமையாளர் அதிலிருந்த படத்தின் உதவியுடன் திருடியவரை பொலிஸாரிடம் அடையாளம் காட்டியுள்ளார். கைது செய்யப்பட்ட அந்நபா் தான் அவ்வீட்டில் கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களைத் திருடியதாக ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பத்து ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. இது தேவையா ?
http://www.athirvu.com/newsdetail/267.html


சற்றுமுன்னர் அமெரிக்க கமாண்டோக்கள் ஈராக்கில் குதித்தார்கள்: 300 பேரை மட்டுமே அனுப்பியுள்ளார் ஒபாமா !

[ Jun 26, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 8995 ]
ஈராக்கில் ISIS தீவிரவத அமைப்பினர் தொடர்ந்தும் தாக்குதலை, பலப்படுத்தி வருகிறார்கள். இன் நிலையில் ஈராக் இராணுவத்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அமெரிக்கா அவர்கள் மீது வான் தாக்குதல் நடத்தவேண்டும் என்று ஈராக் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். அதனை ஓபாமா அவ்வளவாக ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. ஆனால் சுமார் 300 கமாண்டோக்களை மட்டும், அதிரடியாக அமெரிக்கா இன்று ஈராக்கில் களமிறக்கியுள்ளது என்று மட்டும் அறியப்படுகிறது. இவர்கள் ஐ.எஸ்.ஐ. எஸ் அமைப்போடு நேரடியாக யுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்களோடு சண்டையிட்டு வரும் ஈராக் இராணுவத்திற்கு அவர்கள் தந்திரோபாயங்களை காட்டிக்கொடுக்கவே அங்கே சென்றுள்ளதாக ஓபாமா அறிவித்துள்ளார்.
இதேவேளை ஈராக்கில் உள்ள மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலையை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளார்கள். இதனைக் கைப்பற்ற நடந்த சண்டையில் சுமார் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க கமாண்டோக்கள் ஈராக்கில் முதலில் வேவுப்பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும், அதன் பின்னரே வான் தாக்குதல் பற்றி ஒபாமாவின் நிர்வாகம் தீர்மானிக்கும் என்றும் கூறப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் பாக்கிஸ்தான் எல்லையில் கடும் விமானத் தாக்குதல் நடாத்தும் அமெரிக்கா, ஏன் ஈராக் மீது தாக்குதல் நடத்த இவ்வளவு தூரம் பின்னடிக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/262.html

Geen opmerkingen:

Een reactie posten