தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

மீனவர் பிரச்சினைக்கு ஜெயலலிதா ராஜபக்சவை சந்தித்து பேச வேண்டும்!- சுப்பிரமணியசாமி

சட்டவிரோதமாக தங்கியிருந்த 1377 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 11:54.21 PM GMT ]
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 1377 வெளிநாட்டு பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நைஜீரியா, இந்தியா,  ரஸ்யா,  நேபாளம்,  கொரியா,  இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதிகள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்தியர்களே அதிகளவில் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களில் 700ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஜோதிடர்கள், நோய்களைக் குணப்படுத்துவோர் என பல்வேறு வழிகளில் இந்தியர்கள் இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பணம் சம்பாதித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaer3.html
கண்டி கார்ப் பந்தயத்துக்கு அஸ்கிரிய பீடம் அனுமதி
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 12:04.27 AM GMT ]
கண்டியில் இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ள இரவு நேர கார்ப் பந்தயத்துக்கு அனுமதியளிக்க முடிவெடுத்துள்ளதாக அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வண. உடுகம புத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார்
குறித்த கார்ப் பந்தயத்துக்காக ஏற்பாட்டாளர்களால் அதிக செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த தடவை மாத்திரம் இந்த கார்ப் பந்தயத்துக்கு அனுமதியளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தமைக்கு அமையவே அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்த கார்ப் பந்தயத்துக்கு தேரர் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaer4.html
மீனவர் பிரச்சினைக்கு ஜெயலலிதா ராஜபக்சவை சந்தித்து பேச வேண்டும்!- சுப்பிரமணியசாமி
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 04:02.10 PM GMT ]
தமிழக மீனவர் பிரச்சினைக்கு, இலங்கை அதிபர் ராஜபக்வை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்வு காண வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்வளங்களை சுரண்டுவதாக, இலங்கை மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள மீனவர்களை சந்தித்து பேச வேண்டும்.

மேலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது தொடர்பாக, இலங்கை அதிபர் ராஜபக்சவையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaer1.html

Geen opmerkingen:

Een reactie posten