சுல்த்தானை காதலித்த பாம்பு பெண் பிரசவத்திற்காக அனுமதி
குறித்த பெண் கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவு நேர நடனப் பெண்ணாகப் பணியாற்றியுள்ளார்.
இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண் தங்கியிருந்த அநுராதபுரம் வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
பொலிஸ் அனுமதி இன்றி எவரும் இவர் தங்கியிருந்த அறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
பொலிஸ் அனுமதி இன்றி எவரும் இவர் தங்கியிருந்த அறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இவர் சிறிது காலம் சுல்த்தான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.jvpnews.com/srilanka/72230.html
காடைத்தனத்தை வெளிப்படுத்தினார் கலாநிதி சந்திரகுப்த தேனுவர
கிரிக்கெட் போக்கிரி மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் வந்து பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியதாகவும் அரசாங்கம் ஒருவருக்கு ஒருவரை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (06.06.14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது ஒரு மணித்தியாலத்திற்கு முன்பே அங்கு செல்லும் பொலிஸார் ருகுணு பல்கலைக்கழகத்தில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் முடிந்தும் அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என கலாநிதி சந்திரகுப்த தேனுவர சுட்டிக்காட்டினார்.
ருகுணு பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதலுக்கு உள்ளான சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் உபுல் அபேரத்னவும் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றார். தன்னை ஊர் மக்கள் தாக்கவில்லை எனவும் ஊர் மக்களை தான் நன்கு அறிவதாகவும் வெளி இடங்களில் இருந்து வந்தவர்களே தன்னை தாக்கியதாகவும் உபுல் அபேரத்ன தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/72227.html
அமைச்சர் ரிசாட்டுக்கு SLMC பதிலடி
இது இவ்வாறு இருக்க எங்களுடைய மரத்தின் ஓர் கிளையில் சிறிய இலைகளாய் இருந்து காய்ந்த சருகாக உதிர்ந்த அகில இலங்கை மக்கள் காங்ரஸ் என்ற அரசியலில் இன்று ஏட்டுச் சுரக்காவாக மாறியிருக்கும் சிறிய கட்சியின் தலைவர் ரிசாட் பதூர்தீன் அவர்கள் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக ஸ்ரீ.ல.மு.காங்ரசிலிருந்து ஒருவரை நியமிப்பதற்கு எந்த ஆட்சேபினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அன்று எமது கட்சி கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக முஸ்லிம் காங்ரசிலிருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என ஜனாதிபதியை கேட்டபோது முஸ்லிம் காங்ரசுக்கு வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு அலுத்தம் கொடுத்தவர்கள் இன்று அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான கருத்துக்களை கூறுவது எமக்கு வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் உள்ளது.
இவர்கள் இவ்வாறு கூறுவதன் நோக்கம் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை அன்மையில் நடந்த தேர்தல்களிளே முஸ்லிம் காங்ரஸ் மக்கள் ஆணையின் மூலம் சாதித்து காட்டியது. எனவே முஸ்லிம் காங்ரசுடன் ஓட்டிப்போனால்தான் நமது அரசியலை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதனாலும் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்தால்தான் தமது கட்சியின் மாகாண சபை உறுப்பினரான அமீர் அலியை மாகாண அமைச்சராக்க முடியும் என்பதுமே. இவர்களுடைய பகல் கனவு ஒரு போதும் பலிக்காது.
இவர்கள் ஒன்றும் எமக்கு எந்த விட்டுக் கொடுப்பும் செய்யத்தேவையில்லை. எமது அரசியல் பாசறையில் பயின்று எமது காங்ரசால் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்த இவர்களுக்கே இவ்வளவு என்றால் இந்த பாசறையான எமது கட்சிக்கு எவ்வளவு இருக்கும். எமது கட்சியால் வளர்ந்து எமது கட்சிக்கு துறோகம் செய்த துரோகி சில்லறைகள்தானே இவர்கள்.
இரண்டரை வருடங்களின் பின்னர் எமது கட்சி சார்பில் முதலமைச்சரை எப்படி நியமிக்க வேண்டும் என்பது எமது தலமைக்கு தெரியும். எங்கள் தலைவர் ஹக்கீம் அவர்கள் உங்களைப்போன்று சில்லறை அல்ல. மறைந்த மாமேதை மர்ஹ_ம் ஏ.எச்.எம்.அ~;ரபினால் தலைவனாக உருவாக்கப்பட்டு காய்த்த மரத்திற்குத்தான் கல்லெரி பொல்லெரி போன்று எவ்வளவோ பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும் தனது சானக்ய அரசியலாலும் தன் திறமையினாலும் கட்சியை கட்சியாக வைத்திருக்கும் வல்லமை நிறைந்த தலைவன்.
எந்த இடத்தில் எப்படி காய் நகர்த்த முடியும் என்ற சானக்கியம் எமது கட்சிக்கு தெரியும் உங்களை போன்று பனம் காட்டு நரிகளெல்லாம் எமக்கு கணக்கே இல்லை. ஏத்தனை காங்கிரஸ் வந்தாலும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சி முஸ்லிம் காங்ரஸ் மட்டுமே. ஏமக்கு எப்போதும் மக்கள் ஆனையுண்டு. எனவேதான் இறைவன் துணையுடன் எமது கட்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் புதிய முதலமைச்சரை நியமிக்கும்.
அதற்து மிகவும் பலமான ஒப்பந்தம் ஒன்றை ஜனாதிபதி ராஜபக்~ அவர்களுடன் தலைவர் ஹக்கீம் செய்து வைத்திருக்கின்றார். தயவு செய்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் அவர்களே அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான கருத்துக்களை கூறுவதை தயவு செய்து நிறுத்துங்கள் மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் மத்திய குழு
திருகோணமலை
http://www.jvpnews.com/srilanka/72221.html
AK ரக துப்பாக்கியுடன் கொடிகாமத்தில் இளைஞன் கைது!
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் அதனை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞரையும் கைது செய்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
http://www.jvpnews.com/srilanka/72218.html
Geen opmerkingen:
Een reactie posten