கிண்ணியாவில் 13 கோடி பெறுமதியான அமெரிக்க டாலர்கள்: விசாரணை ஆரம்பம் !
01 June, 2014 by admin
திருகோணமலை கிண்ணியாவில் 13 கோடி ரூபா இலங்கை பெறுமதியுடைய அமெரிக்க டொலர்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் கைப்பற்றப்பட்டுள்ள அமெரிக்க டொலர்கள் போலி நாணயத் தாள்களா என்பது தொடர்பில் பரிசோதனைகள் ஆரம்பிக்க்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இந்த அமெரிக்க டாலர்கள் போலியானவை அல்ல எனத் தெரியவருவதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6907
வெறும் இரண்டாயிரம் ரூபா செல்போனைக் கொடுத்து 14 வயது மீது உட லுறவு !
01 June, 2014 by admin
யாழ். தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உரும்பிராய் கிழக்கினைச் சேர்ந்த மேற்படி நபர் கடந்த செவ்வாய்க்கிழமை (27) குறித்த சிறுமியினைக் கடத்திச் சென்றதாக சிறுமியின் பெற்றோர்களினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி சிறுமியை அடிக்கடி சந்தித்த இந்த இளைஞர், செல்போன் ஒன்றை அவர் கைகளில் கொடுத்து தன்னோடு பேசுமாறு கூறியுள்ளார்.
இதனூடாக தொடர்பில் இருந்த குறித்த இளைஞர் , பின்னர் சில நாட்கள் கழித்து அச்சிறுமியை தனியே வருமாறு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக தற்போது அறியப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6908
Geen opmerkingen:
Een reactie posten